Thursday, October 18, 2012

சில சுவாரசியமான தகவல்கள்


1.மார்ட்டின் கார்னர் எனும் புகழ் பெற்ற அமெரிக்க விஞ்ஞான காதாசிரியர் எழுதிய மிக சிறிய திகில் கதை ---> "உலகின் கடைசி மனிதன் தனியாக அறையில் உட்கார்ந்து இருந்தான். கதவு தட்டப்பட்டது."

2.நாம் இந்தியர்களுக்கு கடமைபட்டுவர்கள். அவர்கள் தான் கூட்டல் முறையை கண்டு பிடித்தவர்கள். அந்த கண்டுபிடிப்பு மட்டும் இல்லையென்றால் எத்தனையோ அறிவியல் முன்னேற்றம் நிகழாமல் போயிருக்கும் என்று சொன்னவர் அறிவியல் விஞ்ஞானி ஐன்ஷ்டீன்.
                             
                               

3.இரண்டாம் ரமேசஸ் என்ற பண்டைய கிரேக்க மன்னன் கிமு 1213 இல் தனது 90 வயதில் காலமானார். சிறந்த வீரன் 66 வருடங்கள் ஆட்சி புரிந்தார். இவருக்கு 111 மகன்களும் 66 மகள்களும் இருந்தனர். அபுசிம்பல் என்ற சரித்திர புகழ் பெற்ற கோவிலை கட்டியவர் இவரே.

4.புகழ் பெற்ற ஆங்கில கவிஞர் மில்டன் திடீரென்று பார்வை இழந்தார். ஆனாலும் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. அவர் புகழ் பெற்ற இலங்க்கியங்கள் அனைத்தும் அவர் பார்வையிழந்த பின் எழுதப்பட்டவை.

திருவள்ளுவரை தெய்வமாக வணங்கும் கேரளத்தினர்!



தனது இரண்டடி பாடல் மூலம் உலகிற்கே பல அறிய கருத்துகளையும் ஆழ்ந்த சிந்தனைகளையும்  தந்த தெய்வ புலவர் என அனைவராலும் அழைக்கப்படும் திருவள்ளுவரை தமிழகத்தில் தெய்வமாக வணங்குபவர்கள் வெகு சிலரே. கண்ணகிக்கு கேரளாவில் கோவில் உண்டு என்பது நாம் அறிந்த ஒன்றே. ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளாவில் திருவள்ளுவரை தெய்வமாக வணங்குகின்ற ஒரு மதத்தினர் உள்ளார்கள் என்பதும் திருவள்ளுவருக்கு இவர்கள் கோயில் அமைத்துள்ளனர் என்பதும் ஆச்சரியமான செய்தி. சில வருடங்களுக்கு முன் ஒரு நாளிதழில் கண்ட இந்த செய்தி உண்மையில் ஆச்சரியத்தை  தருகின்றது.

இவர்களை  ' சனாதான  ' மதத்தினர் என அனைவராலும் அழைக்கப் படுகின்றனர். திருவள்ளுவரை கடவுளாக கொண்டு உள்ள இதனை 'சமாதான மதம்' எனவும்  அழைக்கப்படுகிறது.  இவர்கள் வள்ளுவருக்கு கேரள மாநிலத்தில் 16 இடங்களில் கோயில்கள் அமைத்து இவரை வழிப்படுகின்றனர். இக்கோவில்களில்  முறையானப்படி  தினசரி வழிப்பாட்டையும்  நடத்தி வருகின்றனர்.   இவற்றில்  மிகவும் பிரசித்திப்பெற்ற  திருவள்ளுவர் கோயில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காஞ்சூர் தட்டம்படி என்ற ஊரில்  உள்ளதாகும்.
மற்ற அனைத்து கோவில்களிலும் இந்த மதத்தினர் இவரை அவர்களின் முறைப்படி வணங்கி வழிபாட்டு வருகின்றனர்.  

திருவள்ளுவருக்கென இம்மாநிலத்தில் முதல்முதலாக கோயில் கட்டியவர் சிவானந்தர் என்பவர் தான். இவர் 1979-ம்  ஆண்டு மார்ச் 1-ம் தேதி  இடுக்கி மாவட்டத்தில் உள்ள சேனாபதி என்ற ஊரில் அமைத்தார்.

விக்கல் பற்றிய சுவாரசியமான தகவல்கள்


நமது வயிற்றையும், மார்புப் பகுதியையும், 'டயபரம்' [diaphragm]என்ற ஒரு பகுதி பிரிக்கிறது.சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி  விரிந்து செயல்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல்.

தன்னிச்சையாக என்றால்...?

உங்கள் விரும்பமோ, தேவையோ இல்லாமல் உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி தானாகவே நடக்கும் செயல்பாடுதான் அது. அதாவது, அனிச்சைசெயல் போன்றது.

உதாரணத்திற்கு ஒரு சம்பவம்:

நீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். கீழே தரையில் பெரிய கற்கள்  கிடக்கின்றன. அவற்றை நம் கண்கள் பார்க்கின்றன. அடுத்த சில மைக்ரோ செகண்ட் நொடிகளிலேயே நம் மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியில் இருந்து ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அங்கே பெரிய, பெரிய கற்கள் கிடக்கின்றன. அதனால், அந்த கற்களை தாண்டிச் செல்ல வேண்டும். இல்லையென்றால், விலகிச் செல்ல வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.அந்த உத்தரவை மீறிச் சென்றால், காலில் ரத்தக்காயம் வாங்குவது நிச்சயம்.

ஆனால், அனிச்சைசெயல் என்பது அப்படி கிடையாது. சில அவசரமான நேரங்களில் மூளையின் ஹைப்போதலாமஸ் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே சில நடவடிக்கைகளை நாம் மேற்கொள்கிறோம்.

உதாரணம்:

வேட்டி கட்டிய ஒருவர் ஒரு வெட்ட வெளியில் நடந்து சென்று கொண்டிருக்கிறார்.திடீரென்று காற்று வேகமாக வீசுகிறது. அவரையும் அறியாமல் அவரது கை அவர் அணிந்திருக்கும் வேட்டியை பிடிக்கச் செல்கிறது. இந்த சம்பவத்தில், ஹைப்போதலாமசில் இருந்து உத்தரவு வருவதற்கு முன்பே கையானது நடவடிக்கையில் ஈடுபட்டு விடுகிறது.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்