Tuesday, August 18, 2015

தவறான மெயில்களை உடனே வாபஸ் பெற கூகுள் புதிய வசதி

தவறான மெயில்களை உடனே வாபஸ் பெற கூகுள் புதிய வசதி


பல நேரங்களில், ‘அந்த இ-மெயிலை’ அனுப்பியிருக்க வேண்டாமோ என நாம் யோசிப்பது உண்டு.

அந்தவகையில், தவறானது அல்லது சர்ச்சையை ஏற்படுத்தும் என நாம் நினைக்கும் இமெயில்களை பெறுநர் பார்வைக்குச் செல்லாமல் நிறுத்திவைக்க கூகுள் வழிவகை செய்துள்ளது.

இந்த நடைமுறை கூகுளின் பரிசோதனையில் இருந்துவந்தது. தற்போது இது, ஜி-மெயில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஜி-மெயில் சேவை பயன்படுத்துபவராக இருந்தால் ‘செட்டிங்ஸ்’-ல் சிறு மாறுதல்களைச் செய்து இந்த சேவையைப் பெறலாம்.

‘undo send’ (அண்டூ செண்ட்) என அழைக்கப்படும் இந்த முறையை ஜிமெயில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு இமெயிலை அனுப்பிய 30 நொடிகளுக்குள் அண்டூ செண்ட் கொடுத்துவிட்டால் குறிப்பிட்ட அந்த மெயில் சென்றடையாது.

மொபைல் போன்களில் இந்த முறை கடந்த மாதமே நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல் போன்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜி மெயில் இன்பாக்ஸ்-களில் ‘undo send’ (அண்டூ செண்ட்) ஆப்ஷன் உள்ளது.

வலைத்தள சுதந்திரத்துக்கு வித்திட்ட தமிழ்நாடு!

வலைத்தள சுதந்திரத்துக்கு வித்திட்ட தமிழ்நாடு!


கருத்துரிமையைப் பறிக்கும் பிரிவு 66-ஏ-க்குச் சவால் விட்ட அ.மார்க்ஸ்

ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பவர்களை கைது செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. வலைத்தளத்தில் கருத்து சொல்வோரைக் கைது செய்ய அனுமதிக்கும் 2000 ஆம் வருடத்துத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66-ஏ செல்லாது என்றும் தெரிவித்தது. இந்திய அரசியல் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக இந்தப் பிரிவு இருப்பதால் இதனை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்தத் தீர்ப்பை இன்று பலர் வரவேற்கின்றனர். பலர் வழக்கு தொடுத்ததற்காக ஸ்ரேயா சிங்காலைப் பாராட்டுகின்றனர். உண்மையில், கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் 66-ஏ சட்டப் பிரிவுக்கு எதிரான குரல் முதன் முதலில் கிளம்பியதே தமிழ்நாட்டில்தான்.

முதல் வழக்கு பின்னணி
29-10-2012-ல் டுவிட்டரில் வதேராவை விட கார்த்திக் சிதம்பரம் அதிக சொத்து குவித்துள்ளார் என கருத்து தெரிவித்த ரவி என்பவரை தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 ஏ-வின் கீழ் வழக்கு பதிவு செய்து புதுச்சேரி போலீசார் சிறையில் அடைத்தனர். இதனை எதிர்த்து 66-ஏ பிரிவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைத் தொடுத்தவர் மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் அ.மார்க்ஸ். இதுதான் இந்தியாவிலேயே கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் சட்டத்தை நீக்க நீதிமன்றக் கதவைத் தட்டிய முதல் வழக்கு.

கவனிக்க வைத்த பிற வழக்குகள்
2012 ம் ஆண்டு நவம்பர் 17ல் சிவசேனா தலைவர் பால்தாக்கரே காலமானார். அவரின் மறைவை அடுத்து மும்பையில் அக்கட்சியினர் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினர். இதனை விமர்சித்து ஃபேஸ்புக்கில் ஷாஹின் என்ற பெண் கருத்து தெரிவித்திருந்தார். அந்தக் கருத்துக்கு அவரது தோழி விருப்பம் தெரிவித்திருந்தார். அதன் விளைவு அவர்கள் இருவரும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 ஏ- வின் படி கைது செய்யப்பட்டனர். இது ஒரு புறம் இருக்க ஷாஹின் உறவினர் மருத்துவமனையும் சிவசேனா கட்சியினரால் அடித்து நொறுக்கப்பட்டது. சரி அப்படி என்னதான் கருத்து அவர் தெரிவித்திருந்தார்? ”பயத்தால் இந்த பந்த் நடக்கிறது. இப்படி நடத்தும் நாம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற உண்மையான தேசபக்தர்களின் நினைவு நாளில் என்ன செய்தோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

அதே போல் இந்திய நாடாளுமன்றத்தைக் கழிப்பிடமாகவும் இந்திய முத்திரையில் உள்ள சிங்கங்களை ஓநாய்களாகவும் வரைந்த பத்திரிகையாளரான திரிவேதி, மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியின் கேலிச்சித்திரத்தை வெளியிட்ட பல்கலை பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா ஆகியோர்களின் கைதும் அனைவரையும் கவனிக்க வைத்தவை.

இந்தக் கைது நடவடிக்கைகள் கருத்து தெரிவிப்பவர்களின் மத்தியிலும், வெகுஜனங்களின் மத்தியிலும் பிரிவு 66 ஏ என்கிற கொடூரமான சட்டப்பிரிவுக்கு எதிரான உணர்வையே தூண்டியது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் கைதானவர்கள் அனைவரும் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், சாதாரண ஊழியர்கள் ஆகியோர்தான். வழக்கு தொடுத்தவர்கள் அனைவரும் அரசியலில் உள்ளவர்கள். அதிலும் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி. அவர்களின் கையே இதில் ஓங்கியுள்ளது.

வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு
சட்டக் கல்லூரி மாணவியான ஸ்ரேயா சிங்கால் உச்ச நீதிமன்றத்தில், கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்யும் 66-ஏ பிரிவை எதிர்த்து பொது நல வழக்கு தொடுத்தார். அவர் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சலமேஸ்வர், ரோஹின்டன் நரிமன் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதத்தை அடுத்து உச்சநீதிமன்றம் மார்ச் 24ம் தேதி தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66-ஏ -வை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் அந்த உத்தரவில், அரசியல் சாசனத்தில், அனைவரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாகவே 66-ஏ பிரிவு உள்ளது. எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்தது. நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்புவின் கருத்துரிமைக்கு ஆதரவாக 2010 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் இந்தத் தீர்ப்பு இரண்டு இடங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறது. இப்படி தமிழ்நாட்டுக்கு நெருக்கமான தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது.

”இன்டர்நெட் எல்லோருக்குமானது” வலைத்தள சமவாய்ப்பு: ஏன்? எதற்கு?

”இன்டர்நெட் எல்லோருக்குமானது” வலைத்தள சமவாய்ப்பு: ஏன்? எதற்கு?


Net Neutrality என்று சொல்லப்படும் வலைத்தள சமவாய்ப்பு என்றால் என்ன?

இன்டர்நெட் எனப்படும் வலைத்தள சேவை எல்லோருக்கும் பொதுவானதாக, ஒரே வேகம் கொண்டதாக, எல்லோரும் பயன்படுத்தத் தக்கதாக இருப்பதுதான் வலைத்தள சமவாய்ப்பு. நீங்கள் ஏழையா, பணக்காரரா என்று பேதம் பார்க்காமல் ஒரே வேகத்தில் இன்டர்நெட் இணைப்பு கிடைப்பதுதான் வலைத்தள சமவாய்ப்பு.

வலைத்தள சமவாய்ப்புக்கு இப்போது என்ன அச்சுறுத்தல்?

வோடஃபோன், ஏர்டெல் போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் வேகமான இணைய சேவையை அதிக விலையில் விற்க முயற்சி செய்கின்றன. அதிகமாக பணம் கொடுத்தால் அதிவேக இன்டர்நெட் சேவை, மற்ற எல்லோருக்கும் வேகம் குறைந்த சேவை என்கிற முறையை செயல்படுத்த இந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு நிர்பந்தம் அளித்து வருகின்றன. இந்த முறை செயல்பட்டால் இணையத்தில் விரைவு சேவை, மெதுவான சேவை என்கிற பாகுபாடு உண்டாகும்.

இந்தப் பாகுபாடு யாரையெல்லாம் பாதிக்கும்?

எல்லா வகையான நுகர்வோரையும் இந்தப் பாகுபாடு பாதிக்கும். இன்டர்நெட்டின் இப்போதைய ஜனநாயகத் தன்மையால் பலனடைந்து வரும் புதிய வலைத்தளத் தொழில்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படும்.

இந்தப் பிரச்னையின் அடிப்படை என்ன?

தாங்கள் உருவாக்கிய தொழில்நுட்ப உள்கட்டமைப்பினால்தான் கூகுளும் ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் ஸ்கைப்பும் பிரபலமாகியுள்ளன என்று தொலைதொடர்பு நிறுவனங்கள் கருதுகின்றன. இந்தச் சேவைகளைப் பெற அதிக விலை நிர்ணயிப்பதன் மூலம் இவற்றைச் சாதாரண மக்கள் பயன்படுத்த முடியாமல் செய்ய சில தொலைதொடர்பு நிறுவனங்கள் நினைக்கின்றன. இந்த அணுகுமுறை புதிய வலைத்தள தொழில்முனைவோரை முடக்கிவிடும்.

இப்போது என்ன செய்ய வேண்டும்?

தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வை அகற்றும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. இணைய/வலைத்தள சேவை என்பதை பொது சேவை என்று வரையறுப்பது மிகவும் அவசியம். இதன் மூலம் இந்தச் சேவையில் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வேண்டுதலுக்கு இணங்க, அமெரிக்காவின் மத்திய தொடர்பியல் ஆணையம் (எஃப்.சி.சி) 2015 பிப்ரவரியில் இணைய சேவையை பொது சேவை என்று அறிவித்தது. இதன் மூலம் அமெரிக்க மக்களுக்கு வலைத்தள சமவாய்ப்பு உறுதியானது.

’தமிழக இளைஞர்களுக்கு முன்னுதாரணம்’: சுந்தர் பிச்சைக்கு முதலமைச்சர் பாராட்டு!

’தமிழக இளைஞர்களுக்கு முன்னுதாரணம்’: சுந்தர் பிச்சைக்கு முதலமைச்சர் பாராட்டு!


கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக பதவியேற்றிருக்கும் சுந்தர் பிச்சைக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சுந்தர் பிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியில், ‘கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக நீங்கள் நியமிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவர், தன் கடுமையான உழைப்பின் மூலம் உயர்ந்த இடத்தை அடைந்திருப்பது பெருமைக்குரியதாக இருக்கிறது. தமிழக இளைஞர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக நீங்கள் மாறியிருக்கிறீர்கள்.

புதிய பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட, தமிழக மக்களின் சார்பாகவும் தமிழக அரசு சார்பாகவும் உங்களுக்கு என் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் சுந்தர்பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் பிச்சை(43), பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்து, ஐஐடி கரக்பூரில் பொறியியல் படித்தவர். பிறகு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பை முடித்து 2004ல் கூகுள் நிறுவனத்தில் புராடக்ட் மேனேஜராக பணியில் சேர்ந்தார். கூகுள் நிறுவனத்தில் படிப்படியான வளர்ச்சியை எட்டிய அவர், 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு தகவல் தொழிற்நுட்ப துறை வட்டாரங்களில் புகழ் பெற ஆரம்பித்தார். கூகுள் மெயில், ஆண்டிராய்டு, கூகுள் க்ரோம் போன்ற கூகுள் நிறுவனத்தின் உருவாக்கங்கள் முழுமையடைவதற்கு சுந்தர் பிச்சையின் பங்களிப்பை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். குறிப்பாக இணைய உலவியான கூகுள் க்ரோம், முன்னணி இடத்தில் இருப்பதற்கு சுந்தர் பிச்சை மிக முக்கிய காரணம் என்கிறார்கள்.

இணைய நிறுவனங்களில் உலகின் முன்னணி நிறுவனமான கூகுளின் முதன்மை செயல் அதிகாரி பணிக்கு பலருடைய பெயர்கள் பரிந்துரையில் இருந்தன. அதில் தற்போது யாஹுவின் முதன்மை செயல் அதிகாரியாக இருக்கும் மரிசா மேயரும் அடங்குவார். ஆனால் கூகுள் நிறுவனர்களின் நீண்ட கால அவதானிப்பில் சுந்தர் பிச்சையின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கவே, அதன் பலனாக முதன்மை செயல் அதிகாரியாக நியமனம் கிடைத்திருக்கிறது.

Monday, August 17, 2015

இந்தியாவின் கோயம்புத்தூர் உட்பட இன்னும் 12 நகரங்களுக்கு Google Live Traffic சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கோயம்புத்தூர் உட்பட இன்னும் 12 நகரங்களுக்கு Google Live Traffic சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.


புதுமைகள் படைப்பதில் கைதேர்ந்து போன Google நிறுவனம் அதன் Google Map சேவையின் ஊடாக நேரடி போக்குவரத்து நெரிசலை அறிந்து கொள்வதற்கான வசதியை ஏற்கனவே உலகின் பிரதான பல நகரங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தமை நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.


அந்த வகையில் தற்பொழுது இந்தியாவின் Kolkata, Coimbatore, Lucknow, Surat, Thiruvananthapuram, Indore, Ludhiana, Visakhapatnam, Nagpur, Kochi, Madurai, Bhopal போன்ற நகரங்களில் இடம் பெறக்கூடிய போக்குவரத்து நெரிசலையும் Google Map இன் ஊடாக பார்ப்பதற்கான வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதனை கணினியின் மூலம் Google Maps தளத்துக்குச் சென்று பார்க்க முடியுமான அதே வேலை உங்கள் Smart சாதனங்களுக்கு தரப்பட்டுள்ள Google Map செயலிகள் மூலமாகவும் பார்க்க முடியும்.
உதாரணத்திற்கு சென்னையில் இடம் பெறக்கூடிய போக்குவரத்து நெரிசலை நீங்கள் நேரடியாக அறிய வேண்டும் எனின் Google Map Search Bar இல் Traffic near Chennai என தட்டச்சு செய்வதன் மூலம் சென்னையில் இடம் பெறக்கூடிய நேரடி போக்குவரத்து நெரிசலை அறிந்து கொள்ள முடியும்.


மேலும் உங்களுக்கு கிடைக்கும் முடிவுகளானது பிரதானமாக நான்கு வர்ணங்களில் அமைந்த கோடுகளை கொண்டிருக்கும். அவைகளின் விளக்கங்கள் பின்வருமாறு.

  • பச்சை நிற கோடுகள் - போக்குவரத்து நெரிசல் இல்லை 
  • மஞ்சள் நிற கோடுகள் - ஓரளவு போக்குவரத்து நெரிசல் உண்டு 
  • சிவப்பு நிற கோடுகள் - அதிக போக்கு வரத்து நெரிசல்கள் உள்ளது.
  • சாம்பல் நிற கோடுகள் - போக்குவத்து நெரிசல் தொடர்பான தகவலை பெற முடியாதுள்ளது.


இந்த வசதி மூலம் நீங்கள் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய ஒரு பிரயாணத்தை எந்த பாதையில் மேற்கொள்வது சிறந்தது எனும் தீர்மானத்துக்கு வர உதவியாக அமையும்.


எனவே இந்த வசதியானது அன்றாடம் பிரயாணங்களை மேற் கொள்பவர்களுக்கு மாத்திரம் அல்லது அனைத்து தரப்பினர்களுக்கும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

Sunday, August 16, 2015

இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்! – Yamaguchi

இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்! – Yamaguchi


Tsutomu Yamaguchi (திசுதொமு யொமாகுசி) என்ற துரதிஷ்டசாலி பற்றியே இன்று பார்க்கப்போகின்றோம்.

உலக வரலாற்றில் இதுவரை இரண்டு அணுகுண்டுகளே யுத்தங்களின் போது பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். இரண்டாம் உலகயுத்தத்தின் போது அமெரிக்காவினால் ஜப்பான் மீது வீசப்பட்ட இரண்டு அணுகுண்டு தாக்குதலுக்கும் முகம்கொடுத்து தப்பித்த ஒரே ஒரு நபர் Yamaguchi ஆவார்.


மிஷுவிஷி நிறுவனத்தின் வேலை அலுவல்களுக்காக ஹிரோஷிமா (Hiroshima) நகரத்தில் தங்கியிருந்தார் Yamaguchi. அடுத்த நாள் தனது சொந்த ஊரான நாகஷாகி (Nagasaki) இக்கு பயணிக்க திட்டமிட்டிருந்தார். காலையில் நகரத்தை விட்டு வெளியேற தயாராக இருந்த அவருக்கு பயணச்சீட்டை தவறுதலாக அலுவலகத்தில் விட்டு விட்டது அப்போது தான் நினைவிற்கு வந்தது. உடனடியாக அலுவலகம் சென்று பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு வெளியேறினார். அப்போது நேரம் 8:15. (6/8/1945)

அமெரிக்க போர்விமான ஓட்டி எனோலா கேய், “Little Boy” என பெயரிடப்பட்ட முதலாவது அணு குண்டை ஹிரோஷிமா நகர மையத்தில் போட்டார்! இதன் தாக்கத்தால் சுமார் 3 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த Yamaguchi இன் பார்வை தற்காலிகமாக அற்றுப்போனதுடன், அவரது உடலின் வலதுபாகங்கள் பெரும்பாலும் எரிந்துபோயின. பின்னர், மீட்பு படையினரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் 3 நாள் சிகிச்சை பெற்ற அவர் தனது சொந்த ஊரான நாகசாகிக்கு மாற்றப்பட்டார்.

9/6/1945 அமெரிக்க போர் விமானி பொஸ்கார் “Fat Man” என்ற இரண்டாவது அணுகுண்டை நாகசாகி மீது போட்டார்!
குண்டு போடப்பட்ட இடத்தில் இருந்து சரியாக 3 கிலோமீட்டர் தூரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த Yamaguchi, இவ் முறை எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் காக்கப்பட்டார்.

இவ்வாறு, துரதிஷ்ட வசகாம இரண்டு அணு குண்டுத்தாக்குதலுக்கும் உள்ளான Yamaguchi ஐ, 2009 ஆம் ஆண்டு “இரண்டு அணுகுண்டுகளுக்கும் தப்பிய ஒரே நபர் ” என்ற ரீதியில் ஜப்பான் அரசு கெளரவித்தது.
இவர் 2010 ஆம் ஆண்டு தனது 93 ஆவது வயதில் வயிற்றுப்புற்று நோயினால் இறந்தார்.

உலகை தலைகீழாக காணும் பெண் – வினோத நோய்

உலகை தலைகீழாக காணும் பெண் –
வினோத நோய்


பொயன டனிலொவி (Bojana Danilovic) என்ற வினோத பெண்ணைப்பற்றியே இங்கு பார்க்கப்போகின்றோம்.

Bojana சாதாரண மனிதர்கள் போல் தோற்றமளித்தாலும், உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் விட சற்று வித்தியாசமான ஒரே பெண் இவர்தான். ஏனெனின், நாமெல்லாம் காட்சிகளை நேராக பார்க்கின்றோம். ஆனால் இவர் அனைத்து காட்சிகளையும் தலைகீழாக பார்க்கிறார்! ஆம் இவரால் எந்த காட்சிகளையும், எழுத்துக்களையும், சம்பவங்களையும் நேராக பார்க்க முடியாது. அனைத்துமே தலை கீழாகத்தான் தெரியும்!

Bojana இன் கண்களை பரிசோதித்த மருத்துவ ஆராய்சியாளர்கள் அவரின் கண்களில் எந்த பிழையும் இல்லை என்பதை அறிந்துகொண்டனர். Bojana இன் மூளையே இவர் பார்க்கும் காட்சிகளை தலைகீழாக புரிந்துகொள்கிறது!

சேர்பியாவைச்சேர்ந்த 28 வயதாகும் இவர் இப்போது “வேலை தேடுபவர்களுக்கு உதவும்” அமைப்பில் வேலைபார்த்துவருகிறார். இவரது அலுவலகத்தில் இவர் பயன்படுத்தும் கணினித்திரை மட்டும் தலைகீழாக இருக்கும்!
வீட்டிலும், அனைவரும் பார்வையிடும் தொலைக்காட்சியுடன் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி மூலமாகவே இவர் திரைப்படங்களையும் நிகழ்வுகளையும் கண்டுகளிக்கிறார்.

இவரின் இக்குறைக்கு இதுவரை தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை. இக் குறைபாடு “spatial orientation phenomenon” என்றழைக்கப்படுகிறது.

பற்கள் மூலம் தமிழரின் கின்னஸ் சாதனை! | ராதாகிரிஷ்னன் வேலு -King Tooth

பற்கள் மூலம் தமிழரின் கின்னஸ் சாதனை! | ராதாகிரிஷ்னன் வேலு -King Tooth


ஆம் ஆண்டு ஆவணி 30 ஆம் திகதி (2007/08/30) மலேசியாவின் 50 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராஜா ஜிகி என்று அழைக்கப்படும் ராதாகிரிஷ்னன் வேலு என்ற தமிழர் கின்னஸ் புத்தகத்தில் தனது சாதனையை பதிவு செய்திருந்தார்.

சுமார் 6 பெட்டிகள் பொருத்தப்பட்ட 297.1 தொன் நிறையுடைய புகையிரதத்தை 2.8 மீட்டர் தூரத்திற்கு தனது பற்கலாள் இழுத்துச் சென்று சாதனை படைத்திருந்தார் இவர். 14 வயதில் தனது உடல் பாகங்களில் குறிப்பிட்ட பாகங்களை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய கவன ஈர்ப்பு சக்தியை யோகா கலை மூலம் இந்தியாவில் குருவிடம் கற்றுக்கொண்டமையால் இச்சாதனையை தன்னால் நிலை நாட்ட முடிந்ததாக குறிப்பிட்டார்.

இன்றுவரை இச்சாதனை முறியடிக்கப்படவில்லை. King Tooth (ராஜ பற்கள்) என்றழைக்கப்படும் இவர், தமிழர் என்ற ரீதியில் நாம் பெருமைப்படக்கூடிய மற்றுமோர் தமிழர். :)

தொலைக்காட்சி பெட்டியின் முன்னால், 42 வருடங்களாக சடலமாக இருந்த பெண்!

தொலைக்காட்சி பெட்டியின் முன்னால், 42 வருடங்களாக சடலமாக இருந்த பெண்!


பாலடைந்த வசிப்பிட அடுக்கு மாடியொன்றை அகற்றுவதற்கு அதன் உரிமையாளர் முடிவெடுத்துக்கொண்டார். 1970 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அந்த அடுக்கு மாடிக்கட்டிடத்தில் எவரும் தங்கியதில்லை. எனினும், ஒரு வீடு மட்டும் உரிமையாளார் பற்றிய தகவல்கள் இல்லாமல் திறக்க முடியாது இருந்தது. உரிமையாளர் பொலிஸாரை தொடர்பு கொண்டார். உரிமையாளர் கேட்டுக்கொண்டதன் பெயரில் பொலிஸார் வீட்டுக்கதைவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள்.

அவர்கள் அங்கு கண்ட காட்சி அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஆம், அங்கு எலும்புக்கூடாகிப்போன ஒரு சடலம் தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னே இருந்த கதிரையில் அமர்ந்திருந்தது! அச்சடலத்தின் அருகே இருந்த மேசை மீது என்றோ போடப்பட்ட கோப்பியும் இருந்தது.

பின்னர் பெறப்பட்ட தகவல்களின் படி, 1924 ல் பிறந்த ஹெவிகா கொலிக் (Hedviga Golik) என்ற காணமல் போனதாக அறியப்பட்ட நபரின் சடலமே அது என இனங்கானப்பட்டது. 1966 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அந்தப்பெண்ணையாரும் கண்டிருக்கவில்லை. அவரது அயலவர்கள் அந்தப்பெண் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக நினைத்துக்கொண்டார்கள். காலப்போக்கில் அனைவரும் அந்த அடுக்குமாடியைவிட்டு வெளியேறி விட்டார்கள்.

கோப்புயுடன் தனது கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னர் அமர்ந்து, ஏதோ ஒரு காரணத்தினால் இறந்துபோன் அந்தப்பெண்ணை எவரும் தேடவில்லை. சுமார் 42 வருடங்களுக்குப்பின்னர், எதேச்சையாக பொலிஸாரால் அவரது உடல் கண்டறியப்பட்டது!

மேலும் வியப்பான சம்பவங்களை அறியலாம் தொடர்ந்திருங்கள்!

காதலுக்காக கிட்னியையும் இழந்து காதலையும் இழந்த நபர் !!!

காதலுக்காக கிட்னியையும் இழந்து காதலையும் இழந்த நபர். – வினோதம்


சில பெண்கள் குறிப்பிட்ட நிறுவன பெயருடைய “handbags” களை வாங்குவதற்கு ஆசைபடுவார்கள். அவர்களது காதலர் / கணவர் அதை அவங்கி கொடுக்க நினைப்பார். (கடமையாகவும்.)

27 வயதான பார்க் என்ற நபர் தனது காதலி ஆசைப்பட்ட “Kelly bag” ஐ வாங்குவதற்க்கு முடிவெடுத்தார்.

அதற்க்காக, பகுதி நேர வேலை செய்தமையுடன் 3 மாதங்களுக்கு பகுதி நேர ஆசிரியர் வேலையும் செய்து பணம் சேர்த்தார். அப்படி இருந்தும் பணம் போதாமல் இருந்ததுள்ளது.

அந்த நேரத்தில் “மனித ஹிட்னி தேவைப்படுகிறது” என்ற விளம்பரம் அவரது கண்ணிற்கு பட தனது கிட்னியை விற்று அந்த பணம் மூலம் அந்த handbag ஐ வாங்கி தனது காதலிக்கு பரிசாக கொடுத்துள்ளார்!

பரிசு கொடுத்து இரண்டு நாட்களில் அவர்களின் காதல் முறிவடைந்துவிட்டது! 

ஐந்து வயதில் ஒரு தாய்! – மருத்துவ வினோதம்!

ஐந்து வயதில் ஒரு தாய்! – மருத்துவ வினோதம்!


இது நடந்தது இப்போதல்ல, எனினும் வினோதமான இந்த சம்பவம் பற்றி பார்ப்போம்…


1934 ஆம் ஆண்டு பேரு/பெரு நாட்டில் இந்தியப்பெண் ஒருவர் 3 அடி உயரமுள்ள ஒரு ஐந்து வயது நிரம்பிய சிறுமியை கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்திருந்தார். குழந்தையின் வயிறு மிகப்பெரிதாக கட்டிபோன்று இருந்தது.

மருத்துவர் வயிற்றுக்கட்டி என்று பரிசோதனைகளை மேற்கொண்டார். X-Ray பரிசோதனையை மேற்கொண்ட மருத்துவருக்கு ஆச்சரியம். அந்த ஐந்துவயது சிறுமியின் வயிற்றில் 8 மாதங்கள் நிரம்பிய சிசு இருந்தது!

மருத்துவரின் உதவியுடன் சிறுமி பேரு நாட்டின் தலை நகரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். விசேட கவணிப்பில் இருந்த அந்த சிறுமி ஒன்றரை மாதங்களின் பின் 14/05/1939 இல் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்!

குழந்தை 2.7 கிலோகிராமுடன் ஆரோக்கியமாக பிறந்தது. (40 வயதில் எலும்பு மச்சையில் ஏற்பட்ட புற்று நோயினால் மரணமடைந்தது.)

ஆரம்பத்தில், பிறந்த குழந்தை அவரது தம்பியாக இருக்கும் என மருத்துவர்கள் ஊகித்தார்கள் (பெண் குழந்தையின் வயிற்றில் இன்னோர் குழந்தை தங்கும் சம்பவங்கள் நடப்பதுண்டு, எனினும் அக் குழந்தை இறந்த உடலாகவே தங்கும்.)
ஆனால், மருத்துவ பரிசோதனைகளில் அக் குழந்தை அச் சிறுமியின் குழந்தை தான் என உறுதிப்படுத்தப்பட்டது.

சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுமியால் அடையாலம் காட்டப்படவுமில்லை. சிறுமியின் தந்தை சந்தேகத்தின் பெயரில் கைதாகினார். எனினும், பல மருத்துவ சான்றுகளின் உதவியுடன் அவர் மீது தப்பு இல்லை என்பது நிரூபனமாக்கப்பட்டது.

1972 இல் வேறு ஒரு நபரை திருமணம் முடித்த அந்த பெண்(=சிறுமி) இன்னோர் குழந்தையை பெற்றெடுத்தார்.

இச் சிறுமி பற்றிய தகவல்கள் 2003 ஆண்டிலேயே வெளியுளகத்திற்கு தெரியவந்தது. ஊடகங்கள் அவரை பேட்டி எடுக்க நாடியபோதும் அவர் அதற்கு மறுத்துவிட்டார்!

இணைந்திருங்கள் மேலும் அறியலாம்…

கரும்பள்ளிவண்டு[Lady Bug] அடிமையாக்கும் குளவி

கரும்பள்ளிவண்டு[Lady Bug] அடிமையாக்கும் குளவி


நமக்குத் தெரியாத எவ்வளோ இரகசியங்களை உள்ளடக்கியது பூமி. அதில் ஒன்றுதான் கரும்பள்ளிவண்டு[Lady Bug] அடிமைப் படுத்தும் குளவி பற்றிய தகவல்.

டினோகேம்பஸ் கோஸினெல்லா[ Dinocampus coccinellae ]என்ற அறிவியல் நாமகரணம் கொண்ட குளவி லேடி பக்கை ஜோம்பீஸ் ஆக மாற்றுவது வியப்பானதுதான்.

ஏன் இந்த கரும்பள்ளிவண்டுக்குள் [Lady Bug] குளவியின் கூட்டை பாது காக்க வேண்டும் என்பது தான். சமீபத்தில் பிரெஞ்ச் -கனேடியன் குழு ஒன்று இதற்கான காரணத்தை கண்டுபிடித்திருக்கின்றன.

இந்த குளவியானது கரும்பள்ளிவண்டை [Lady Bug] ஒரு வித வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்குகிறது அதன் காரணமாக அவைகளின் நரம்பு மண்டலமும் மூளையும் பாதிப்புக்கு உள்ளாகிறது. பின் அது குளவியின் கட்டளைகளை ஏற்கிறது. சொல்லப் போனால குளவியின் கூட்டுக்கு பாதுகாவலனாக மாறிவிடுகிறது.

குளவி கரும்பள்ளிவண்டின் [Lady Bug] உடலின் வைரஸ்தாக்கிய முட்டைகளை உட் செலுத்துவிடுகிறது(by using ovipositor ). முட்டையில் இருந்து பொறித்த லார்வாக்கள் அதன் உடலில் இருந்து வெளியேறி கூட்டை(cocoon) அமைக்கிறது. முட்டை பொறிந்த போதே பக் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த கூடு பக்கின் உடலை ஒட்டிய படியே கால்களுக்கு இடையில் பாதுகாப்பாக இருக்கும். லார்வா முழுவளர்ச்சி அடைந்து கூட்டை விட்டு வெளியேறும் வரை பக்கின் தலையாய பணி கூட்டை பாது காப்பது தான்

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்