Sunday, October 21, 2012

முதல் ஐந்து [TOP 5] - அதிக சராசரி ஆயுள் கொண்ட மக்கள் வாழும் நாடுகள்


1.மொனாகோ [MONACO]

சராசரி  ஆயுள் : 89.68 வருடங்கள் 


மெடிட்டரேனியன் கடலோரம் இருப்பதாலும் , அவர்கள் உண்ணும் மெடிட்டரேனியன் கடலோர உணவு வகைகளும் அவர்களது வாழ்க்கை முறைக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்து , அவர்களது ஆயுளை  நீட்டிக்க செய்கிறது 

2.மக்காவு [MACAU]

சராசரி  ஆயுள் : 84.43 வருடங்கள் 

சூதாட்டத்தையும் , சுற்றுலா பயணிகளையும் நம்பி மட்டுமே  இந்த நாடு தன்னுடைய சாம்ராஜ்யத்தை கட்டி கொண்டு உள்ளது. நாட்டின் மொத்த பொருளாதாரம் முழுவதும் இவற்றை நம்பி தான் உள்ளது , கிட்டத்தட்ட 70 சதவிகிதம் வருமானம் இவற்றின் மூலமே வருகின்றது   


3.ஜப்பான் [JAPAN]  

சராசரி  ஆயுள் : 83.61 வருடங்கள் 

அரிசி , பசுமையான காய்கறிகள்  மற்றும் மீன்கள் தான் ஜப்பானியர்களின் உணவில் பெரும் பங்கு வகிக்கின்றது . கொலை மற்றும் தற்கொலைகளின் விகிதம் இங்கு மிகவும் குறைவு .

4.சிங்கப்பூர் [SINGAPORE]

சராசரி  ஆயுள் : 83.75 வருடங்கள் 

சுத்தமான சுற்றுப்புறம் மற்றும் முறையான உணவு பழக்கமும் உள்ளதால் , இவ்வூரின் மக்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர் .

5.சான் மரினோ  [SAN MARINO]

சராசரி  ஆயுள் : 83.07 வருடங்கள் 

இவ்வூர் இட்டாலியன் பெனின்சுலாவில் உள்ளது . உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று . அதிக தொழிலாளர்கள் இல்லாத நாடு என்பதால் , விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகவும் அரிது .


கருத்துள்ள சிரிப்பலைகள் ! ♥



பெல்ட்


இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. முசோலினி ஹிட்லருக்கு தந்தி அனுப்பினார்,''நிலைமை மிக மோசம். உணவு அவசரத்தேவை. தயவுசெய்து உடனே அனுப்பி வைக்கவும்,''ஹிட்லரிடமிருந்து பதில் தந்தி சென்றது,''உணவுப் பொருட்கள் தங்களுக்கு அனுப்ப வசதி இல்லை. வருந்துகிறேன் ஒவ்வொரு தானிய மணியும் உள்நாட்டிற்கும்,ரஷ்யப் போர்முனைக்கும் தேவைப்படுகிறது ஆகவே வயிறுகளைப் பெல்ட்டினால் இறுகக் கட்டிக் கொள்ளவும்,''முசோலினி மீண்டும் தந்தி அனுப்பினார்,''தயவு செய்து பெல்ட்டுகளையாவது அனுப்பி வையுங்கள்.''

இரவல்

பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார். அதற்கு அந்த நண்பர்,''என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,''என்றார். மார்க் ட்வைன் பேசாமல் திரும்பி விட்டார். சில நாட்கள் கழித்து அதே நண்பர் மார்க் ட்வைனிடம்,''உங்கள் தோட்டத்துக் கடப்பாறையை ஒரு நாள் இரவல் கொடுங்கள்,''என்று கேட்டார். மார்க் ட்வைன் அமைதியாகச் சொன்னார்,''என் தோட்டத்தில் தோண்டுவதாக இருந்தால் கொடுக்கிறேன்.''
ஒருவர் பெர்னாட்ஷாவைக் கேட்டார்,''ஏன் இப்படி பஞ்சத்தில் அடிபட்ட ஆள் மாதிரி இருக்கிறீர்கள்?''ஷா சொன்னார்,''என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது உண்மை. ஆனால் பஞ்சம் எப்படி வந்தது என்பது உங்கள் உருவத்தைப் பார்த்தாலே தெரியும்!''
ஒருவர் நேதாஜியிடம் சொன்னார்,''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காதசாம்ராஜ்யம்,''நேதாஜி சொன்னார்,''உண்மை.அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே பயம். அவ்வளவு பெரிய திருடர்கள்.''

இயல்புதானே?


பண்டித மணி கதிரேசன் செட்டியார் ஒருநாள் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரைப் பார்க்க சென்றிருந்தார். அவர் ஆதீனத்தை உடல் தாழ்ந்து வணங்கும் போது கால் தடுமாறிக் கீழே விழப்போனார். ஆதீனத்தலைவர்அவரை சட்டென்று எழுந்து தாங்கிப் பிடித்துக் கொண்டார். செட்டியார்மறுபடியும் ஆதீனத்தை வணங்கி,''எல்லாமே இயல்பாகத்தானே நடந்திருக்கிறது,சுவாமி,''என்றார். ஆதீனத் தலைவர் அவர் சொல்வது விளங்காமல்,''இயல்பாக என்ன இப்போது நடந்தது?''என்று கேட்டார். கதிரேசன் செட்டியார் விளக்கம் சொன்னார்,''எங்களைப் போன்ற அடியவர்கள் தவறுவதும், தங்களைப்போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் தாங்கி வழி நடத்துவதும் இயல்புதானே? அதுதானே இப்போது நடந்திருக்கிறது?''ஆதீனத் தலைவர் செட்டியாரின் நகைச்சுவை உணர்வு கண்டு மகிழ்ந்தார்.

ஆஸ்திரேலியா பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்



1.உலகில் "தோல்புற்றுநோயால்" அதிகம் பாதிக்கப்படவர்கள் உள்ள நாடு.

2.வளர்ச்சியடைந்த நாடுகளில்  உடல் பருமனாவர்கள் அதிகம் வாழும் நாடு.

3.ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளில் எயிட்ஸ் நோய் பரவாது தடுத்த நாடுகளில் ஒன்று.

4.மக்கள் தொகையில் 7.5% மக்கள் மட்டுமே வாரம் ஒருமுறை தேவாலயம் செல்கின்றனர்.

5. 'தி எக்கணமிஸ்ட்' இன் உலகில் மக்கள் வசதியாக வாழக்கூடிய நகரங்களின் பட்டியலில் (2008) ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண், பேர்த், அடிலெயிட் , சிட்னி ஆகிய நகரங்கள் முறையே 2,4,7,9 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளன.

பழைய சோறு .... :) இத அடிச்சிக்க எந்த #pizza # burger ஆலும் முடியாதப்பா !

அந்தக்  காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்போது  கிராமங்களில் கூட காண  முடிவதில்லை. நாம் சிறு வயதில் சாப்பிட்டிருப்போம். இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்ப்டுகிறது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான்.

 அப்படிதான் எங்கள் வீட்டில் ஒரு நாள் மதிய உணவை முடித்து விட்டு மீதம் இருந்த சாத்திற்க்கு தண்ணீர்  உற்றி வைத்து விட்டோம்... , சிறிது நேரத்தில் ஒருவர் தனக்கு பசிகிறது ஏதாவது சாப்பிட கொடுங்கள் என கேட்க எங்க அம்மா அவரிடம் இப்போதான் தண்ணீர்  ஊற்றினேன் குழம்பு ஊற்றி கொண்டு வரவா அல்லது தண்ணிரோடு சாப்பிடுகிறீர்களா என கேட்க தண்ணி ஊத்தியாச்சா நான் பழைய சோறு சாப்பிட மாட்டேன் எனக்கு வேண்டாம் என கூற, இப்போதான் ஊற்றினேன் பழைய சோறு இல்ல என எடுத்து கூறியும் அவர் எனக்கு வேண்டாம் என நடையை கட்டிவிட்டார். அப்போதே அப்படி என்றால் இக்காலத்தில் சொல்லவே வேண்டாம்.

 பழைய சோறு என்றாலே காத தூரம் ஓடுகிறோம். ஆணால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருகிறதாம். உணவுப்பாதை சீராக இருந்தால் அவுட்லெட்டும் சீராகிவிடும். காலையில் கழிவறையில்  மல்லு கட்ட வேண்டாம். இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிர்ப்பு  சக்தி கிடைகிறதாம். காய்ச்சல்  போன்ற  நோய்களிடம் இருந்து காக்கிறது , பண்றி காய்ச்சல் உட்பட.

 காலை உணவாக பழைய சாதத்தை  உண்டால் உடல் லேசாகவும் சுறு சுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தண்ணீர்  ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுதும். அதுமில்லாமல் இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல் இல்லமல் காலையில் ஃபிரியா போலாம். 

இதனை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறந்துவிட்டதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி பிரதீப் கூறுகிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகிவிடுகிறது. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குண்மாகிவிடும். எல்லாவற்றிர்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராம்ல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும். 

அதனாலதான் நம்ம ஆளுங்க ஒரு சட்டி பழைய சாதம் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்யமுடிந்திருகிறது போலும். காலையில் சாண்ட்விச், பீட்ஸா, பர்கர் என கழித்து திரியும் தமிழ் மக்களே இன்றிலிருந்து பழைய சோறு சாப்பிட்டு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம். 

அப்புறம் பழைய சாதம் செய்ய தெரியுமா? 
(என்ன கொடுமை சார் இது எதுகொல்லாம் கிளாஸ் எடுக்க வேண்டியாத இருக்கு)
 பொங்குன சோத்துல தண்ணிய  ஊத்திட்டு அடுத்த நாள் காலையில்  திறந்து பாருங்க கம கம என பழைய சோறு தயார். இதுக்கு  கைகுத்தல் அரிசி சிறந்தது. நம்ம வீட்டல் போய் கைகுத்தல் அரிசியில் சோறு பொங்க சொன்னால் நம்க்குதான் குத்து கிடைக்கும் என அஞ்சுபவர்கள் ஒரு ரூபாய் அரிசி கூட உபயோக்கலாம். சூடான சாதத்தில்  தண்ணீர்  ஊற்ற கூடாது. ஆறிய பின்பு மண் சட்டியில்  போட்டு தண்ணீர் ஊற்றி மறு நாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்று இருக்கும். மதியம் வரை பசிக்காதாம்"

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்