வேகமாக சென்ற பறக்கும் தட்டு: லண்டனில் பெரும் பரபரப்பு
லண்டன் ஹீத்ரூ விமானநிலையத்திற்கு மேற்கே பெர்க்ஷைர் பகுதிக்கு அண்மிய பகுதியில் 34 ஆயிரம் அடி உயரத்தில் ஏ-320 ஏர்பஸ் பயணிகள் விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது.
அப்போது விமானத்தின் மேலே இடது புறமாக சில அடி தூரங்களில் ரக்பி பந்து வடிவில் ஒரு பறக்கும் தட்டு கடந்த சென்றுள்ளது. பின்னர் அது மின்னல் வேகத்தில் பைலட்டை நோக்கியும் வந்து சென்றுள்ளது.
உடனே இது குறித்து லண்டன் விமானக்கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து பரபரப்படைந்த லண்டன் விமான நிர்வாகம் அதுகுறித்து ஆராய்ந்து வருகிறது.
எனினும் எந்த நவீன கண்காணிப்பு ரேடார் கருவிகளிலும் அந்த மர்ம பொருள் பற்றிய பதிவு தெரியவில்லை என்றும் டெலிகிராப் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.