Friday, January 3, 2014

காவலனின் கனவும் , அரசனின் பரிசும் - புதிர் கதை

ஒரு காலத்தில். இந்தியாவின் ஒரு ஊரை ஆண்டு வந்தரசாவிடம் தேவைக்கும் அதிகமான செல்வங்கள் மிதமிஞ்சியே இருந்து வந்தது. அவர் தனது கழஞ்சிய வளாகத்தை இரவுக்காவல்,பகற்காவல் என பலதரப்பட்டகாவல்காரரை நியமித்திருந்தார்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் இரவுக்காவல்காரன் அரச சபைக்கு மூச்சு தினற ஓடி வந்தான். அரசே..வேந்தே.. மன்னவா..என்றான் ! 


உடனே மந்திரியார் என்ன விசயம் எண்று கேட்டு முந்திரிக்கொட்டைபோல் முந்தினார், அதற்கு அவன் சொன்னான்

இன்றிரவு நான் ஒரு கனாக்கண்டேன் அரசன் இலங்கையை நோக்கி செல்லவிருக்கும் கப்பலை ஒரு கொள்ளைகூட்டம் அபகரித்துகொண்டு சென்றதாகக்கண்டேன் என்றான்.அப்படியா...(சபையே அதிர்ந்து போய்விட்டது)

சபையில் எல்லொரும் சொன்னார்கள்,இவன் சொன்னால் நிச்சயம் நடந்தேதீருமென்று, ஆனால் அரசன் நம்பவில்லை தனது பயணத்தை தொடர்ந்தான்.
கப்பல் போகும்வழியில் கொள்ளையர் கூட்டம் கப்பலை அபகரித்துக்கொண்டது.

அதிலிருந்து தப்பி வந்த அரசன்,சபையைக்கூட்டினான் அந்த காவல்காரனை அளைத்துவாருங்கள் என்றான். பின் அவனும் வந்தான், உடனே அரசன் அவனை புகழ்ந்துபேசி தேவையான பொற்காசுளையும் வழங்கி வேலை நீக்கம் செய்து விட்டான்!

என்னயிது கொடுமை அவன் அரசனுக்கு தான்கண்ட கனவைத்தானே சொன்னான்,நல்லதுதானே சொன்னான்.சபை குழம்பிப்போய் விட்டது,அரசன் ஏன் புகழ்ந்தான்,பொற்காசு கொடுத்தான்,வேலை நீக்கம் செய்தான்!

யாரங்கே......மந்திரிகளே பதில் கூறுங்கள்? 

புதிர் விடை :

கண்ட கனவைச் சொன்னதற்காகவும் அது பலித்ததற்காகவும் பரிசும் பாராட்டுகளும். இரவுக் காவலன் தூங்கினால்தானே கனவு வரும். தூங்கினால் வேலை எப்படி நிலைக்கும்? 

அதான் அரசன் வேலையை விட்டு நீக்கினான்.

கடுங்குளிர் வேளையில் ஊட்டியில் ஒரு கொலை - புதிர் கதை

தாஸ் என்பவர் ஊட்டியில் ஒரு பெரும் பணக்காரர். 

ஆனால் தனிமையில்தான் வாழ்ந்து வருகின்றார். 

அவரது நண்பர் ராமு.

ஒருநாள் மாலை நேரம் ராமுவிடம் இருந்து,,காவல்துறைக்கு ஒரு தொலைபேசிச் செய்தி வந்தது.

தாஸ் வீட்டுக்கு உடனே வருமாறு ராமு வேண்டுகோள் விடுத்தார்.

காவல் அதிகாரி உடனே விரைந்து சென்றார்.

தாஸின் வீட்டுக் கதவின் தாழ்ப்பாள் உடைந்து , கதவு திறந்து கிடந்தது.

ராமு வெளியே நின்று இருந்தார்.

காவல் அதிகாரியை வீட்டுக்குள் ராமு அழைத்துச் சென்றார்.

முன் அறையில் தாஸ் இறந்து கிடந்தார்.

எப்படி இது? என்று ராமுவிடம் காவல் அதிகாரி கேட்டார். 


அதற்கு ராமு,  ஐயா இன்று குளிர் அதிகமாக இருந்தாலும், நான் எப்போதும்போல தாஸைப் பார்ப்பதற்கு வந்தேன்..கதவைத் தட்டினேன். யாரும் வந்து திறக்கவில்லை.பிறகு வீதிப்பக்கமாக இருந்த சன்னல் கண்ணாடியில் கொஞ்சம் மின்சார விளக்கின் ஒளி தெரிந்ததால், சன்னல் கண்ணாடி வழியாக யாரும் உள்ளே இருக்கிறார்களா என்று பார்க்க நினைத்தேன். 

அதனால் சன்ன;ல் பக்கம் சென்று எட்டிப்பார்த்தேன். குளிர் காரனமாக சன்னல் கண்ணாடியில் புகை படர்ந்திருந்ததால் உள்ளே யார் இருக்கின்றார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. .உடனே எனது ககக்குட்டையை எடுத்து கண்ணாடியை நன்றாகத் துடைத்து, பிறகு உள்ளே பார்த்தேன். அங்கே தாஸ் கீழே விழுந்து கிடந்ததைக் கண்டேன். அதனால் ஏதோ ஆபத்து என்று கருதி தாமதம் செய்யாமல் உடனே கதவின் தாழ்ப்பாளை உடைத்து வீட்டுக்குள் போனேன். போனதும்தான் தெரிந்தது தாஸ் இறந்து கிடக்கிறார் என்று. எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. அதன்பிறகு உங்களுக்கு தொலைபேசியில் செய்தி கூறினேன்.. என்றார்.  

சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்த காவல் அதிகாரி,  ராமு-----நீ தாஸைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் உன்னைக் கைது செய்கின்றேன் என்று கூறியபடி ராமுவைக் கைது செய்தார். 

நண்பர்களே---------------காவல் அதிகாரிக்கு ராமுவின் ஏன் சந்தேகம் ஏற்பட்டது? கூறுங்களேன் !

புதிர் விடை :


குளிர் என்பது தான் பாயிண்ட்.

குளிர்காலத்தில் அதிக குளிர் என்பதால் வீட்டின் உட்புற ஜன்னலில் தான் மிஸ்ட் - புகை, நீர் கோர்த்து இருக்கும், வெளிப்புறம் ஜன்னலை மட்டும் துடைத்தால் உள்ளே இருப்பதை பார்க்க முடியாது, உட்புறம் தான் துடைக்க வேண்டும்.

ராமு வெளிப்புற ஜன்னலைத் துடைத்து, ஜன்னல் வழியாக பார்த்திருக்க முடியாது, எனவே அவர் தான் கொலை செய்தார் என்று சந்தேகத்தின் பெயரில் கைது செய்தார்.

மருந்து கடை ஊழியரும் அவரின் துப்பாக்கியும் , வீரசிங்கின் நன்றியும் - புதிர் கதை

வீர்சிங் ஒரு நாள் அவன் வீட்டுக்குப் பக்கமாக இருந்த மருந்துக்கடை ஒன்றில் நுழைந்தான்.அங்கிருந்த விற்பனையாளரிடம் ஏதோ கூறினான்.

உடனே அந்த விற்பனையாளன் , மேசைக்குள்ளிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து வீர்சிங்கைக் குறி வைத்தான். 
இதைக் கொஞ்சம்கூட எதிர்பார்க்காக வீர்சிங் திகைத்து நின்றான். பிறகு விற்பனையாளரைப் பார்த்து சிரித்தான்.
மிக்க நன்றி நண்பரே........என்றபடி மருந்துக்கடையில் இருந்து தனது வீட்டுக்குப் போனான்.


இப்போது கேள்வி உங்களுக்கு>>>>

வீர்சிங் எதற்காக அந்த மருந்துக்கடைக்குப் போனான்?

என்ன மருந்து கேட்டான்.?

அதற்கு ஏன் விற்பனையாளர் கோபமுடன் துப்பாக்கியை எடுத்து வீர்சிங்கைக் குறிவைத்தார்?

இருந்தாலும் வீர்சிங் கோபப்படாமல் விற்பனையாளருக்கு ஏன் நன்றி சொல்லிவிட்டுப் போனான்?

புதிர் விடை :

" விக்கல் மருந்து "
திடிரென துப்பாக்கி எடுத்து காட்டியது விக்கல் நின்றிருக்கும் !

அரசனின் தங்க கட்டிகளும் அதை திருடிய தொழிலாளியும்

முன்னொரு காலத்தில் ஒரு குட்டித் தீவிலே தங்கம் ஏராளமாகக் கிடைத்தது.நூற்றுக்கணக்கானோர் தங்கச் சுரங்கத்தில் வேலை பார்த்தார்கள்.

அவர்கள் தோண்டியெடுத்து அனுப்பும் தங்கக் கனிமத்தை, பத்து ஆட்கள் உலையில் இட்டு உருக்கி வார்ப்படமாகச் செய்து நூறு கிராம் கட்டிகளாக மாற்றி அந்தத் தீவை ஆண்டு வந்த அரசன் கருவூலத்துக்கு அனுப்பி வந்தார்கள்.


ஒரு நாள் அரசன் தீவைப் பார்வையிட வந்தான்.
பகல் முழுவதும் தங்கச் சுரங்கத்தைச் சுற்றிப் பார்த்தான். பிறகு மாலை நேரம் தங்கத்தை உருக்கி வார்ப்படம் செய்யும் ஆலைக்குச் சென்று பார்வையிட்டான். அங்கு வேலை செய்த ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு பத்து தங்கக் கட்டிகளை வார்த்துக்கொண்டிருந்தார்கள்.வார்ப்பு வேலை முடிந்ததும் அவர்கள் வார்த்த கட்டிகளைக் கொண்டுவந்தார்கள்.ஒரு அதிகாரி தங்கக் கட்டிகளை அங்கிருந்த தராசில் எடைபோட்டு எடுத்துக்கொண்டிருந்தான்.அனைத்தையும் பார்வையிட்ட அரசன் பிறகு தனது உல்லாச மாளிகைக்குச் சென்றான்

இரவு உணவை முடித்ததும், பக்கத்தில்; இருந்த நந்தவனம் ஒன்றில் மெல்லிய தென்றலை ரசித்தபடியே, வானத்து நட்சத்திரங்கள் மகிழ்வுடன் பார்த்துக்கொண்டிருந்தான். 

அப்போது...அங்கிருந்த ஒரு மரத்தடியில் இரண்டு ஆட்கள் நிற்பதைப் பார்த்தான் அரசன்.

அவர்கள் அரசன் அங்கிருப்பதைக் கவனிக்காமல் எதோ பேச அரம்பித்ததும், அவர்கள் பேசுவதை அரசன் கவனமுடன் கேட்க ஆரம்பித்தான்.

ஒருவன் :- இதோ பார் நண்பா..இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி நாம் உழைத்து உழைத்து உருக்குலைந்து போவது.?வாய்ப்பு இருக்கும்போதே நாமும் கொஞ்சம் சுருட்டினால்தான் இந்த உலகத்தில் வாழமுடியும்..

மற்றவன் :- சரி.........நீ கூறுவதை ஒத்துக்கொள்கிறேன். இங்கே ஏகப்பட்ட கண்காணிப்பு இருக்கிறது. நாம் எப்படி தங்கத்தைத் திருடுவது?

ஒருவன் :- அதற்கு நான் ஒரு நல்ல வழியைக் கண்டுபிடித்துள்ளேன். அதன்படி செய்தால் நாம் தங்கம் திருடுவதை யாராலும் கண்டு பிடிக்கவே முடியாது!

மற்றவன் :- அப்படியா!!!!. அது என்ன வழி???? 

ஒருவன் :- கவனமாகக் கேட்டுக்கொள். இங்கே உள்ள தராசு அவ்வளவு ஒன்றும் துல்லியமானது இல்லை. அதனால் இன்றுமுதல் நாம் வார்த்தெடுக்கும் தங்கக் கட்டியில் ஒரே ஒரு கிராம் தங்கம் மட்டும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்வோம். மீதியாகும் அந்த ஒரு கிராம் அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்தால் முடிவில் நமக்கு நிறையத் தங்கம் கிடைத்துவிடும்.எப்படி எனது யோசனை????

மற்றவன் :- ஆஹா......அருமையாக இருக்கின்றது.

ஒருவன் :- எனக்குத் தெரியும் நீ ஒத்துக்கொள்வாய் என்று. இந்த வழியை நான் நாளை முதல் தொடங்கப் போகிறேன்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அரசன், அந்த ஆட்கள் யாரென்று தெரிந்தால், அவர்களை உடனே கைது செய்து தீவைவிட்டு வெளியேற்றிவிடலாம் என்று நினைத்தபடியே,  ஏய்.......யார் நீங்கள்.......என்று சப்தம் கொடுத்தபடியே காவலர்களையும் அழைத்தான்.

அரசனது குரல் கேட்டதும் அந்த இருவரும் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டார்கள்.
அரசன் இந்தப்பிரச்சினைக்கு எப்படியாவது தீர்வு கானவேண்டும் என்று சிந்தனை செய்தான்.

தனது குல தெய்வத்தை தியானம் செய்தான். உடனே அவன் முன்னால் தோன்றிய குல தெய்வம், அரசனது பிரச்சினையைக் கேட்டதும், அரசனே......உனது பிரச்சினைக்கு தீர்வு ஒரு துல்லியமான தராசுதான். இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து டிஜிட்டல் முறையில் கண்டுபிடிக்கப்பட உள்ள ஒரு தராசை இன்று உனக்கு அளிக்கிறேன். அதை வைத்து நீ தங்கக் கட்டியை எடைபோட்டு யார் உன்னை ஏமாற்ற எண்ணியுள்ளார்கள் என்று தெரிந்துகொள். என்றது.

அரசன் மிகவும் மகிழ்ந்தான். 
மிக்க நன்றி தெய்வமே என்றான்.

ஆனால் ஒரு விஷயம் என்ற தெய்வம் இன்னும் நூறு ஆண்டுகள் கழித்துதான் இது இந்தப் பூமியில் கண்டு பிடிக்கப்பட உள்ளது. அதனால் நான் இந்தத் தராசை ஒரே ஒரு முறை நிறுவையிடத்தான் உனக்கு கொடுக்கிறேன். நீ எவ்வளவு சுமை வேண்டுமானாலும் ஒரே தடவையில் நிறுத்துக்கொள்ளலாம்.மொத்த் சுமையையும் தராசுத் தட்டின்மேல் வைத்து பிறகு என்னைத் தியானம் செய்தால் , நீ வைத்துள்ள சுமையின் எடை என்ன என்பதை மிகத் துல்லியமாக இந்த தராசு காட்டும். அவ்வளவுதான் தராசு அங்கிருந்து மறைந்துவிடும்.................................நீ உனது புத்தியை உபயோகித்து தங்கக் கட்டிகளை எடைபோட்டுப் பார்த்து, யார் மோசடி செய்கிறார்கள் என்று கண்டு பிடித்துக்கொள் என்றது.

மறுநாள் மாலை . தொழிலாளர்கள் அனைவரும் தாங்கள் வார்ப்படம் செய்த கட்டிகளைக் கொண்டு வந்தார்கள்.

அரசன் புத்திசாலித் தனமாக தராசை ஒரே ஒருமுறை உபயோகித்து மோசடிக் காரனைக் கண்டு பிடித்துக் கைது செய்தான்.

மன்ற நண்பர்களே....இப்போது உங்களுக்கான கேள்வி!!!

அரசன் எப்படி மோசடிக்காரனைக் கண்டுபிடித்தான்?

புதிர் விடை :

பேசியவர்களில் ஒருவன் மட்டுமே அடுத்த நாள் தங்கம் வார்ப்பவர்களில் இருக்கிறான் என்று எடுத்துக்கொண்டால்.....!     

அடுத்த நாள் தங்கம் வார்த்த 10 பேரையும் வரிசையாக நிற்க வைத்து
முதலாமவன் வார்த்த தங்கத்தில் ஒன்றும் இரண்டாமவன் வார்த்த தங்கத்தில்
இரண்டு இப்படியே வரிசையாக 3,4,5,6,7,8,9 இறுதி ஆள் வார்த்த முழு  கட்டிகளையும் வேண்டி
மொத்தமாக 1 முறை நிறுத்தாலே போதும் தப்பு பண்ணியவன் மாட்டிக்கொள்வான்.

உதாரணம் :- நிறுக்க  எடுத்துக்கொண்ட கட்டிகளின் எண்ணிக்கை 55 , ஒரு கட்டி 100 g 5.5 kg இதில் 3 g குறைந்தால் தப்பு பண்ணியவன் 3ம் ஆள்......5g குறைந்தால் தப்பு பண்ணியவன் 5ம் ஆள்..........

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்