Friday, January 3, 2014

மருந்து கடை ஊழியரும் அவரின் துப்பாக்கியும் , வீரசிங்கின் நன்றியும் - புதிர் கதை

வீர்சிங் ஒரு நாள் அவன் வீட்டுக்குப் பக்கமாக இருந்த மருந்துக்கடை ஒன்றில் நுழைந்தான்.அங்கிருந்த விற்பனையாளரிடம் ஏதோ கூறினான்.

உடனே அந்த விற்பனையாளன் , மேசைக்குள்ளிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து வீர்சிங்கைக் குறி வைத்தான். 
இதைக் கொஞ்சம்கூட எதிர்பார்க்காக வீர்சிங் திகைத்து நின்றான். பிறகு விற்பனையாளரைப் பார்த்து சிரித்தான்.
மிக்க நன்றி நண்பரே........என்றபடி மருந்துக்கடையில் இருந்து தனது வீட்டுக்குப் போனான்.


இப்போது கேள்வி உங்களுக்கு>>>>

வீர்சிங் எதற்காக அந்த மருந்துக்கடைக்குப் போனான்?

என்ன மருந்து கேட்டான்.?

அதற்கு ஏன் விற்பனையாளர் கோபமுடன் துப்பாக்கியை எடுத்து வீர்சிங்கைக் குறிவைத்தார்?

இருந்தாலும் வீர்சிங் கோபப்படாமல் விற்பனையாளருக்கு ஏன் நன்றி சொல்லிவிட்டுப் போனான்?

புதிர் விடை :

" விக்கல் மருந்து "
திடிரென துப்பாக்கி எடுத்து காட்டியது விக்கல் நின்றிருக்கும் !

1 comment:

  1. விற்பனையாளர் புத்திசாலி...! தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்