Sunday, December 27, 2015

விண்ணை ஒளிமயமாக்கிய சீனாவின் குளிர்கால பண்டிகை !

விண்ணை ஒளிமயமாக்கிய சீனாவின் குளிர்கால பண்டிகை 


ஒவ்வொரு ஆண்டும் சீனாவின்  ஹார்பின் நகரம்  ஒரு குளிர்கால விந்தையுலமாக  மாறிவிடும். இத்திருவிழாவின்  போது  நகரம் முழுவதும் மின் விளக்குகளால்  ஒளிரும். இது மட்டும் இல்லமால்  வண்ணமயமான பனி சிற்பங்கள் மற்றும் அழகான பனி அரண்மனைகள் முதலியவற்றையும் பார்க்க முடியும்.
















Tuesday, November 3, 2015

ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் 10 அறிகுறிகள்

இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைவோம். சாதிக்கும் எண்ணம் இருக்கும் யாருக்கும் இறக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது. இருப்பினும், நிச்சயம் ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது.

இத்தகைய இறப்பை சந்திக்கும் முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும். மேலும் சிவபுராணத்தில் ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் :


அறிகுறி 1 :

எப்போது ஒருவரது சருமத்தின் நிறமானது வெளிர் மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ அல்லது லேசான சிவப்பாக மாற ஆரம்பித்தால், அது அவர் இன்னும் 6 மாத காலத்தில் உயிரை விடப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 2 :

எப்போது ஒருவனால் அவனது பிம்பத்தை எதிரொலியை தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ தெளிவாக காண முடியவில்லையோ, அத்தகையவர்களும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்துமாம்.

அறிகுறி 3 :

எப்பொழுது ஒருவனுக்கு பார்க்கும் அனைத்தும் கருப்பாக தெரிய ஆரம்பிக்கிறதோ, அவர்களும் இறப்பை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 4 :

ஒருவரது இடது கை மட்டும் ஒரு வாரத்திற்கு மேல் துடிக்கவோ அல்லது நடுங்க ஆரம்பிக்கிறதோ, அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று அர்த்தமாம்.

அறிகுறி 5 :

ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 6 :

நிலா, சூரியன் அல்லது நெருப்பின் ஒளியை சரியாக காணமுடியவில்லையோ, அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 7 :

எப்போது ஒருவரின் நாக்கு வீக்கமடைந்து, ஈறுகளில் சீழ் கட்ட ஆரம்பிக்கிறதோ, அவர்கள் இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என்று அர்த்தம்.

அறிகுறி 8 :

ஒருவரால் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை காண முடியவில்லையோ, அவரும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 9 :

சூரியன், நிலா மற்றும் வானத்தை பார்க்கும் போது, அவை சிவப்பாக தெரிய ஆரம்பித்தால், அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 10 :

ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ அல்லது கிராமம் அழிவது போன்றோ வந்தால், அவரும் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்.

Monday, November 2, 2015

இந்தியாவில் உள்ள பயத்தை உண்டாக்கும் சில ஆவி நடமாடும் இடங்கள்!!!

இந்தியாவில் உள்ள பயத்தை உண்டாக்கும் சில ஆவி நடமாடும் இடங்கள்!!!


உலகத்தில் உள்ள நாடுகளில் அமானுஷ்ய விஷயங்கள் பற்றி பேசுகையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் இங்கே பல இடங்கள் பேய்களுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பல இடங்களில் ஆவி நடமாட்டம் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. அதற்கு காரணம் அந்த இடத்தின் வரலாறு மற்றும் அங்கே நடந்தேறிய நிகழ்வுகள். இதுவே அந்த இடங்களை ஆவி நடமாடும் இடமாக மாற்றிவிட்டது.

இந்தியாவில் சில இடங்கள் ஆவி நடமாடும் இடங்களாக திகழ்கிறது என சில அமானுஷ்ய வல்லுனர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். உதாரணத்திற்கு, இந்தியாவில் ஆவி நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஒன்றாக திகழ்கிறது பனார்க் என்ற இடம். ராஜஸ்தானில் உள்ள இந்த இடத்தைச் சுற்றி பல கதைகள் பிண்ணப்பட்டிருக்கிறது. மிகவும் அழகிய இடமாக இருந்த பனார்க் இன்று பாழடைந்து, அழிந்த பகுதியாக உள்ளது.

இப்படி ஆவி நடமாடும் இடங்களானது, கிராமங்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தான் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. காரணம் இந்தியாவில் முக்கியமான சில நகரங்களிலும் கூட ஆவி நடமாடும் இடங்கள் இருக்கத் தான் செய்கிறது. மும்பை, டெல்லி, பெங்களூர், கொல்கட்டா, உத்தர பிரதேசம் போன்ற நகரங்களில் ஆவி நடமாடும் இடங்கள் உள்ளது. அங்கே வசிக்கும் மக்கள் சிலர், உறைய வைக்கும் சில அமானுஷ்ய நிகழ்வுகளைப் பற்றி புகார் எழுப்பியுள்ளனர்.

சில இடங்கள் மிகவும் ஆபத்தாக இருந்தாலும் கூட, பல பேய்களும் தீய ஆத்மாக்களும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. உதாரணத்திற்கு மும்பையில் உள்ள பிரிஜ்ராஜ் பவன் அரண்மனை அல்லது டிசோசா சாவல் ஆஃப் மாஹிம் போன்ற இடங்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். இந்த இடங்களை பார்க்கும் போது உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அங்கே இருக்கும் தீய சக்திகள் ஆபத்தை ஏற்படுத்துவதில்லை என மக்கள் கூறுகின்றனர். சரி அப்படிப்பட்ட இடங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம் வாங்க!

பன்கர்ஹ் கோட்டை


ராஜஸ்தான் ஆவி நடமாடும் இடங்களின் மீது நாட்டம் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக பன்கர்ஹ் கோட்டையைப் பற்றி தெரிந்திருக்கும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள பன்கர்ஹ் என்ற புகழ்பெற்ற நகரம், இந்தியாவில் உள்ள ஆவி நடமாடும் இடங்களில் ஒன்றாகும். இந்த இடத்தைப் பற்றி பல கதைகள் உள்ளது. இங்கே தொலைந்து போனவர்களைப் பற்றி பல புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் பிரச்சனைகளை தவிர்க்க, அந்த மாநிலத்தின் அரசாங்கம் ஒரு எச்சரிக்கை பலகையை அதன் நுழைவாயிலில் மாட்டியுள்ளது.


ராமோஜி ஃபிலிம் சிட்டி

ஹைதராபாத் இந்தியாவில் ஆவி நடமாடும் முதன்மையான இடங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. காரணம் வீரர்கள் செத்து மடிந்த போர்க்களத்தில் தான் இந்த பிலிம் சிட்டி கட்டப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது. அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் உணவகங்கள் கூட அங்கே நிலவும் அமானுஷ்யத்தைப் பற்றி கூறியுள்ளார்கள்.


டுமாஸ் கடற்கரை

குஜராத் இந்த புகழ்பெற்ற சுற்றுலாத்தளமும் ஆவி திரிகின்ற இடமாக கருதப்படுகிறது. இரவு நேரத்தில் இந்த கடற்கரைக்கு செல்வதை தவிர்க்கவும். காரணம், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, பலர் இங்கே தொலைந்து போயுள்ளனர். இந்த கடற்கரையை முன்பொரு காலத்தில் மனித சடலங்களை எரிக்க இந்துக்கள் பயன்படுத்தியுள்ளனர்.


டவ் மலை

மேற்கு வங்காளம் குர்சியாங் என்ற இடத்தில் உள்ள இந்த மலையில் உள்ள பள்ளியிலும், காட்டிலும் பேய் நடமாட்டம் இருக்கிறது என நம்பப்படுகிறது. இங்கே நடந்துள்ள பல கொலைகளும் அமானுஷ்யங்களும், இங்கே உள்ள மக்களிடம் பீதியை கிளப்பியுள்ளது.


செயின்ட்மார்க்ஸ் சாலையில் உள்ள பேய் வீடு

பெங்களூரு இந்தியாவில் ஆவி நடமாடும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கே மர்மமான முறையில் கொலை செய்யப்பட சின்னப்பெண் மற்றும் அங்கே நடக்கும் அமானுஷ்ய செயல்கள் இந்த இடத்தைப் பற்றி பல கதைகளை கிளப்பியுள்ளன.


டெல்லி கண்டோன்மென்ட்

டெல்லி டெல்லியில் ஆவி நடமாடும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கே உள்ள அடர்ந்த பச்சை பசுமையான காட்டில் பேய் நடமாட்டம் உள்ளதென்று நம்பப்படுகிறது. காரணம், அங்கே வெள்ளை நிற சேலையில் ஒரு பெண் உடன் பயணிக்க உதவி கோருவதை பலர் கண்டுள்ளனர். அப்பெண் உங்கள் பின்னாலேயே ஓடி வந்து உங்களை முந்தியும் செல்வாளாம்.

ஷனிவார்வாடா கோட்டை

பூனே இங்கே இரவு நேரத்தில் ஒரு பையனின் அலறல் சத்தம் கேட்குமாம். இங்கே நிலவும் கதைகளின் படி, தன் உறவினர்களால் கொடூரமாக கொல்லப்பட்ட 13 வயது இளவரசனால், இக்கோட்டையில் பேய் நடமாட்டம் உள்ளதாம். பௌர்ணமி அன்று இங்கே பேய் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

பெங்களூரு சர்வதேச விமான நிலையம் 

விமான நிலையம் போன்ற சுறுசுறுப்பான இடத்தில் ஆவி நடமாட்டம் இருக்கும் என்றால் யாராவது நம்புவார்களா? பயணிகளும். பணியாளர்களும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சில அமானுஷ்ய செயல்களை கண்டுள்ளனர்.



சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம்

தமிழ் நாட்டின் மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயம் மற்றும் மாநிலத்தின் நான்காவது பெரிய புலிகள் சரணாலயமான இங்கேயும் ஆவி நடமாட்டம் இருக்கிறது என கூறப்படுகிறது. 2004-ல் வீரப்பன் கொல்லப்பட்ட பிறகு, அங்கே சில அமானுஷ்ய செயல்களும், நிகழ்வுகளும் மக்களை அச்சுறுத்தியுள்ளது. தானாக கண்ணாடி விளக்கு காற்றில் பறப்பதும், நெடுஞ்சாலையில் ஆவிகள் நடமாடுவதும், இந்த சரணாலயத்தை ஆவி நடமாடும் இடமாக மாற்றியுள்ளது.

Thursday, September 3, 2015

வாழைப்பழம் ஒரு முழு உணவு!

வாழைப்பழம் ஒரு முழு உணவு!


வாழைப்பழம், உலகின் பல பாகங்களில் முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. இதை பரலோகத்தின் ஆப்பிள் என, ஐரோப்பிய புராணக் கதைகள் கூறுகின்றன. ஆப்பிள் பழத்தில் காணப்படுவது போன்று, வாழைப் பழத்திலும் வைட்டமின் "சி’ காணப்படுகிறது. 


இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. காரச் சத்து அதிகமாக இருப்பதால், உண்பவர்களின் உடலிலுள்ள, காரச்சத்தை பத்திரப்படுத்தப் பயன்படுகிறது. ஏனைய பழங்களை விட, இதனுடைய உணவு தரும் சூட்டின் அளவு அதிகம். எனவே தானியத்திற்குப் பதிலாக, இதை உணவாகக் கொள்ளலாம். இதிலுள்ள சர்க்கரைச் சத்து குடல் கிருமிகளைக் குறைக்கும் சக்தி வாய்ந்தது. ஆகவே இதை கிருமி நாசினியாகப் பயன்படுத்தி குடல் நோய்களை அகற்றலாம்.

கனிந்த பழத்துடன் சிறிது புளியையும், உப்பையும் கலந்து பிசைந்து உட்கொண்டால், சீதபேதி தீரும். சிறு குழந்தைகளுக்கு சீதபேதி ஏற்பட்டால், பழத்தை நன்றாகப் பிசைந்து கூழாக்கிக் கொடுத்தால் நோய் தீரும். குன்மநோய், குண்டிக்காய் வீக்கம், கீல்வாதம், டைபாய்டு காய்ச்சல் முதலிய நோய்க் காலங்களில், வாழைப்பழத்தை அதிகமாகப் பயன்படுத்தி குணமடையலாம். 

குடற்புண் நோயாளிகளுக்கு இது நல்ல உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. மலச்சிக்கல் உள்ள நோயாளிகளுக்கு, இப்பழம் ஒரு நல்ல மருந்தாகும். இளகிய மலம் உள்ளவருக்கும் இது நல்ல உணவாகும். வாழைப்பழத்தில் புரதச்சத்து அதிகமாக இல்லாததால், பாலுடன் கலந்து உண்பதால் அது முழு உணவாகிறது. காலையில் பாலும், பழமும் சாப்பிடுவது நல்ல பழக்கம். பாலையும், வாழைப்பழத்தையும் கலந்து உண்டு, ஒருவர் பல காலம் வாழலாம். உண்பதற்கு பழம் நன்கு கனிந்திருக்க வேண்டும். 

பழத்தின் தோல் மஞ்சள் நிறமாக இருந்தால் மாத்திரம் போதாது. நன்கு கனியாத பழங்கள் ஜீரண உறுப்புகளுக்கு கடினமாக இருப்பதோடு, அதிலுள்ள சர்க்கரைச் சத்தும் ஜீரணமடையப் பக்குவப்படாத நிலையில் இருக்கும். எனவே, நன்கு கனியாத பழங்களை உண்ணக்கூடாது. பழத்தின் தோலில் சில ரசாயனப் பொருள்கள் உள்ளன. தோலில் வெடிப்பு ஏற்படாத வரை, உள்ளிருக்கும் சதையை நன்கு பாதுகாக்கும் தன்மை மேற்சொன்ன ரசாயனப் பொருள்களுக்கு உண்டு; அதனால், கிருமிகள் அண்டாது. 

பழத்தின் தோலை நீக்கி வெயிலில், உலர வைத்து தூள் செய்து பல காலம் பத்திரப்படுத்தலாம். அப்பழத்தூளை பாலில் கலந்து, உண்பதால் அது முழு உணவாகிறது; சுவையாகவும் இருக்கும். பழத்தூளினால் ரொட்டி செய்து, குடற்புண் நோய் உள்ளவர்களுக்கு மருந்தாகவும், உணவாகவும் கொடுக்கலாம். 
வாழைப்பழங்களில் செவ்வாழைப்பழம் மிகவும் சத்துமிக்கது. உடல் மெலிந்தவர்கள், நோயால் படுத்து உடல் மெலிந்தவர்கள், தினமும் இரவு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு படுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்!

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்!


சீறுநீரக கல் பிரச்னை என்பது, இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோயாக மாறி வருகிறது. சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது. சிறுநீர், சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே, சிறுநீர்ப் பைகளுக்கு வந்து, பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கி, வளர்ந்து அடைப்பு ஏற்படுத்துகிறது என்கின்றனர் டாக்டர்கள்.


முதலில் முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்கு மாறி அடிவயிற்றில் வலி ஏற்படுத்தும். பின் தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவி காய்ச்சல் ஏற்படுத்தும். சிறுநீரில் ரத்தம் வெளியேறும். இவையே சிறுநீரக கல் அடைப்புக்கான அறிகுறிகள். 

பரம்பரையாக சிறுநீரக கல் பிரச்னை ஒருவரைத் தாக்கலாம். பாரா தைராய்டு சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவும், நோய் தொற்று காரணமாகவும் சிறுநீரகத்தில் கல் வரலாம் என்கின்றனர் டாக்டர்கள். 

சிறுநீரக கல்லை வெளியேற்ற, வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு, 2 முறையாவது குடிக்க வேண்டும். பார்லியை நன்கு வேக வைத்து, நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி, சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம். 

வாழைத்தண்டு முள்ளங்கி சாறு, 30 மிலி., அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். 

வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம், சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினா கீரையை தொடர்ச்சியாக, சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும். 

சாப்பிடக்கூடாதவை: சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்கள், சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பைகார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

உடல் ஆரோக்கியம் காக்கும் காளான்!

உடல் ஆரோக்கியம் காக்கும் காளான்!


இந்தியாவில், 8 வகை காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்கு, சிப்பி, வைக்கோல் காளான் என்ற, 3 வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. 

காளான் மருத்துவ பயன்கள்: காளான், ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள், ரத்தத்தில் கலந்துள்ள டிரைகிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது. 


இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை, எந்தவித பாதிப்பும் இல்லாமல் ரத்தத்திலிருந்து வெளியேற்றி, பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. 

இதனால் ரத்தம் சுத்தமடைவதுடன், இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். ரத்த அழுத்தம் ஏற்படும்போது, உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். ரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால், சமநிலை மாறி உட்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இதை சரிசெய்ய, பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து, 447 மி.கி. உள்ளது. சோடியம், 9 மி.கி., உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது. 

காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். காளான், மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால், பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக, காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில், 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு, சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது. 

எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது. மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள், தினமும் காளான் சூப் அருந்தி வந்தால், விரைவில் உடல் தேறும். காளானை முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும். காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால், பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதை தவிர்ப்பது நல்லது.

அழகை அதிகரிக்கும் ஐடியாக்கள் இதோ!

அழகை அதிகரிக்கும் ஐடியாக்கள் இதோ!


பருமனாக இருப்பவர்கள், எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து, அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து, சாப்பிட்டால் எடை குறையும். கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு, பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி, முடி அழகு பெறும். 


தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும். வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகத்தில் பரு வராமலும், வெளியில் கறுத்துப் போகாமலும் இருக்கும்.

ஒரு லிட்டர் இளஞ்சூடான நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும். நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், 
சுருக்கத்துடனும் இருந்தால், ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். 

இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன், பயத்தம் பருப்பு மாவை கலந்து, முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு, ஐஸ் ஒத்தடம் கொடுத்தால் முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும். ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும். 

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாக கலந்து, பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால், முட்டையுடன் முடியும் எளிதில் வரும். மோரை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புது பொலிவடையும். 

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும். ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும். 

பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால், சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும். 

தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும். தோல் வறண்டும், சுருக்கமாகவும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

8 மாதமாக உயர்கிறது மகப்பேறுகால விடுமுறை

8 மாதமாக உயர்கிறது மகப்பேறுகால விடுமுறை


புதுடில்லி : வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் அவர்களின் பேறுகால விடுமுறை 3 மாதங்களில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் மேனகாவின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


விடுமுறை இல்லாத காரணத்தினால் பெண்கள் பலர் குழந்தை பிறந்த உடன், உடனடியாக வேலைக்கு திரும்பும் நிலை உள்ளது. இதனால் பெண்கள் பல்வேறு உடல்நல பாதிப்புக்களுக்கு ஏற்படுவதுடன், குழந்தைக்கும் தாயின் அறவணைப்பு கிடைக்காமல் போய்விடுகிறது. இதனை மனதில் கொண்டு மத்திய அமைச்சர் மேனகா, வேலைக்கு செல்லும் பெண்களின் மகப்பேறு விடுமுறையை 3 மாதத்தில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை செய்தார்.

இது குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை கூடுதல் செயலாளர் நுதன் குகா பிஸ்வாஸ் கூறுகையில், தற்போதிருக்கும் 3 மாத மகப்பேறு விடுமுறையை 8 மாதமாக உயர்த்த பரிந்துரை செய்துள்ளோம். இந்த பரிந்துரையை பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். செயலாளர்கள் குழுவின் ஆலோசனைக்காக மத்திய அமைச்சரவை செயலகத்திடம் இந்த பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த 8 மாத விடுமுறை என்பது குழந்தை பிறப்பு நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே விடுமுறை எடுக்க வழிவகை செய்யும். குழந்தை பிறந்த பிறகு 7 மாதங்கள் விடுமுறை அளிக்கப்படும். அமைச்சரவை செயலகம் ஒப்புதல் அளித்த பிறகு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

அமைச்சரவை செயலகத்திடம் மட்டுமின்றி, அமைப்பு மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் பேறுகால பலன்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறையிடமும் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

பாத வெடிப்பு நீங்க தேன் சிறந்த மருந்து

பாத வெடிப்பு நீங்க தேன் சிறந்த மருந்து


பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தை படும் பலர், அதற்கான காரணம் தெரியாமல் புலம்புகின்றனர். பாதங்களை சுத்தமாக பாதுகாப்பதில் கவனம் செலுத்தாததே காரணம். இதனால் வெடிப்பு ஏற்பட்டு, வெடிப்பு புண்ணாகி கஷ்டப்படுகின்றனர். 

பாதங்களில் ஏற்படும் சிறிய பிளவுகளுக்கு, பித்த வெடிப்பு என்று பெயர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும், அசுத்தம் காரணமாகவும், இந்த வெடிப்புகள் ஏற்படுகின்றன. பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெது வெதுப்பான தண்ணீரில், 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அரம் அல்லது சொரிக்கல்லை பயன்படுத்தி பாதத்தில் உள்ள செத்த அணுக்களை, மெதுவாக தேய்த்து எடுக்கவும். பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவி, 20 நிமிடங்கள் வரை அவை பாதங்களில் நன்றாக ஊறும் படி செய்யவும். 

பாதங்களின் ஈரப்பதத்தை நீட்டிக்க, இரவு மற்றும் பகல் முழுவதும் பாதங்களுக்கு காலுறைகள் அணிந்து கொள்வது நல்லது. ஒரு வாரம் தொடர்ந்து, தினமும் ஒரு முறை செய்தால் நல்ல மாற்றத்தை காணலாம். பெரிய வாளியில் சுடு தண்ணீரை நிரப்பி, அதில் பாதங்களை முக்கிக் கொள்ளுங்கள். அதில், உப்பு, எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் இட்டு, 20 நிமிடங்கள் வரை பாதங்களை ஊற வைக்கலாம். பின், உரைக்கல் அல்லது பாத ஸ்க்ரப்பரை கொண்டு, பாதங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தேய்க்கவும். 

ஒரு டீஸ்பூன் நீர்க்காத கிளிசரின், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து, கால் பித்த வெடிப்பின் மீது தடவுங்கள். இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு, காலை எழுந்தவுடன் வெது வெதுப்பான நீரில் காலை கழுவி விடுங்கள். பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க, தேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்யுங்கள். 

பாதங்கள் பித்த வெடிப்புடன், வறண்டு காணப்பட்டால், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெயை சேர்த்து, வெது வெதுப்பான நீரில் பாதங்களை, 10 நிமிடம் வரை ஊற வைத்து கழுவிய பின், அந்த பேஸ்ட்டை பாதத்தில் தேய்க்கவும். 

அப்படி செய்யும் போது, பாதங்களில் உள்ள இறந்த அணுக்கள் நீங்கிவிடும். பித்த வெடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது, வெறும் தேன் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவலாம். இதை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால், பித்த வெடிப்புகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். 

மேற்கூறியவற்றை தினமும், நேரம் கிடைக்கும் போது செய்து வந்தால், நிச்சயம் பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகள் நீங்கி, பாதங்கள் அழகாக மாறும்.

தீ விபத்தில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்?

தீ விபத்தில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்?


தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று பலருக்கு தெரிவதில்லை. உடனே தீயை அணைக்க வேண்டும் என்பதற்காக, என்னவெல்லாம் செய்யக் கூடாதோ அதையெல்லாம் பதற்றத்தில் செய்து விடுவர். பாதிப்பு என்பது, எப்பேர்ப்பட்ட தீ விபத்து என்பதை பொறுத்தது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெயால் தீப்பற்றி இருந்தால் அதன் பாதிப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அதே போல் தீப்பற்றும் போது அணிந்திருக்கும் ஆடையும், பாதிப்பின் தீவிரத்தை முடிவு செய்கிறது. சரி, தீப்பற்றிக் கொண்டால் என்னதான் செய்ய வேண்டும்? 


துணியில் தீப்பற்றிக் கொண்டால், அங்குமிங்கும் ஓடக்கூடாது. உடனே நின்று, உடைகளை களைந்து, தீ அணையும் வரை, மண்ணில் உருளவும்; கம்பளி போன்ற கனமான போர்வையை உடலில் சுற்றி, தீயை அணைத்து விட வேண்டும். ஓடினால், தீ இன்னும்  பரவும் வாய்ப்பு உள்ளது. மூடிய கதவுகளை திறக்கும் முன்பு, அவற்றின் வெளிப்புறத்தில், தீ பற்றாததை உறுதிபடுத்திகொள்வது அவசியம்.

அவசரத்தில் கதவை திறக்க நேரிட்டால், கதவின் தாழ்ப்பாள் விரிசல்களில், தங்கள் பின்னங்கையை வைத்து, பார்த்து சோதிக்கலாம். வெப்பத்தை அறிய உள்ளங்கையை பயன்படுத்தாதீர்கள். உள்ளங்கையில் சூடு பட்டுவிட்டால், தவழ்ந்து செல்லவோ, ஏணியில் ஏறிச்செல்லவோ முடியாமல் போய்விடும்.  வீட்டுக்கு வெளியே வந்தபின், மீண்டும் உள்ளே போகாமல், தீயணைப்பு வீரர்களை உடனே அழைப்பது புத்திசாலித்தனமாகும். சிறிய தீயை அணைக்க, அவசர காலத்திற்கு, சமையல் சோடாவை பயன்படுத்தலாம். 

புகையானது, விட்டத்தை நோக்கி பரவுவதால், புகையுணர்வு கருவியை, உயரமான இடத்தில் பொருத்துவது நல்லது. புகை எச்சரிக்கை கருவி, பத்து ஆண்டுகளுக்கு மேல் பழுதாகிவிட்டால், புதிய கருவியை வாங்கி உபயோகிப்பது நல்லது. 

தீ விபத்து நேர்ந்தால், அருகாமையில் உள்ள தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் நிலையத்திற்கு, உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். இத்துறைகளின் தொலைபேசி எண்களை, தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். தீ விபத்து நேர்ந்த இடத்தின், தெளிவான முகவரியையும், விரைவாக வந்து சேர சரியான வழியையும் தெரிவிக்கவும். தீயணைப்பான் எச்சரிக்கை மணி கேட்டதும், வழி ஏற்படுத்தி கொடுக்கவும்.

தீயணைப்பு படை, நெருப்பை அணைக்கப் போராடும் போது, அவர்களை தொல்லை செய்யாதீர்கள். மக்கள் நெரிசல் அதிகரித்தால், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி தடைபடும். தீ விபத்து நேர்ந்தால், கூச்சலிட்டு மற்றவர்களின் உதவியை நாடுவது நல்லது. விபத்திற்குள்ளான நபர்களை, உடனடியாக மருத்துவ உதவிக்காக, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்வது அவசியம். பாதுகாப்பும், எச்சரிக்கையும் மட்டுமே, தீ விபத்திலிருந்து பாதுகாக்கும்.

Tuesday, August 18, 2015

தவறான மெயில்களை உடனே வாபஸ் பெற கூகுள் புதிய வசதி

தவறான மெயில்களை உடனே வாபஸ் பெற கூகுள் புதிய வசதி


பல நேரங்களில், ‘அந்த இ-மெயிலை’ அனுப்பியிருக்க வேண்டாமோ என நாம் யோசிப்பது உண்டு.

அந்தவகையில், தவறானது அல்லது சர்ச்சையை ஏற்படுத்தும் என நாம் நினைக்கும் இமெயில்களை பெறுநர் பார்வைக்குச் செல்லாமல் நிறுத்திவைக்க கூகுள் வழிவகை செய்துள்ளது.

இந்த நடைமுறை கூகுளின் பரிசோதனையில் இருந்துவந்தது. தற்போது இது, ஜி-மெயில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஜி-மெயில் சேவை பயன்படுத்துபவராக இருந்தால் ‘செட்டிங்ஸ்’-ல் சிறு மாறுதல்களைச் செய்து இந்த சேவையைப் பெறலாம்.

‘undo send’ (அண்டூ செண்ட்) என அழைக்கப்படும் இந்த முறையை ஜிமெயில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு இமெயிலை அனுப்பிய 30 நொடிகளுக்குள் அண்டூ செண்ட் கொடுத்துவிட்டால் குறிப்பிட்ட அந்த மெயில் சென்றடையாது.

மொபைல் போன்களில் இந்த முறை கடந்த மாதமே நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல் போன்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜி மெயில் இன்பாக்ஸ்-களில் ‘undo send’ (அண்டூ செண்ட்) ஆப்ஷன் உள்ளது.

வலைத்தள சுதந்திரத்துக்கு வித்திட்ட தமிழ்நாடு!

வலைத்தள சுதந்திரத்துக்கு வித்திட்ட தமிழ்நாடு!


கருத்துரிமையைப் பறிக்கும் பிரிவு 66-ஏ-க்குச் சவால் விட்ட அ.மார்க்ஸ்

ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பவர்களை கைது செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. வலைத்தளத்தில் கருத்து சொல்வோரைக் கைது செய்ய அனுமதிக்கும் 2000 ஆம் வருடத்துத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66-ஏ செல்லாது என்றும் தெரிவித்தது. இந்திய அரசியல் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக இந்தப் பிரிவு இருப்பதால் இதனை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்தத் தீர்ப்பை இன்று பலர் வரவேற்கின்றனர். பலர் வழக்கு தொடுத்ததற்காக ஸ்ரேயா சிங்காலைப் பாராட்டுகின்றனர். உண்மையில், கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் 66-ஏ சட்டப் பிரிவுக்கு எதிரான குரல் முதன் முதலில் கிளம்பியதே தமிழ்நாட்டில்தான்.

முதல் வழக்கு பின்னணி
29-10-2012-ல் டுவிட்டரில் வதேராவை விட கார்த்திக் சிதம்பரம் அதிக சொத்து குவித்துள்ளார் என கருத்து தெரிவித்த ரவி என்பவரை தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 ஏ-வின் கீழ் வழக்கு பதிவு செய்து புதுச்சேரி போலீசார் சிறையில் அடைத்தனர். இதனை எதிர்த்து 66-ஏ பிரிவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைத் தொடுத்தவர் மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் அ.மார்க்ஸ். இதுதான் இந்தியாவிலேயே கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் சட்டத்தை நீக்க நீதிமன்றக் கதவைத் தட்டிய முதல் வழக்கு.

கவனிக்க வைத்த பிற வழக்குகள்
2012 ம் ஆண்டு நவம்பர் 17ல் சிவசேனா தலைவர் பால்தாக்கரே காலமானார். அவரின் மறைவை அடுத்து மும்பையில் அக்கட்சியினர் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினர். இதனை விமர்சித்து ஃபேஸ்புக்கில் ஷாஹின் என்ற பெண் கருத்து தெரிவித்திருந்தார். அந்தக் கருத்துக்கு அவரது தோழி விருப்பம் தெரிவித்திருந்தார். அதன் விளைவு அவர்கள் இருவரும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 ஏ- வின் படி கைது செய்யப்பட்டனர். இது ஒரு புறம் இருக்க ஷாஹின் உறவினர் மருத்துவமனையும் சிவசேனா கட்சியினரால் அடித்து நொறுக்கப்பட்டது. சரி அப்படி என்னதான் கருத்து அவர் தெரிவித்திருந்தார்? ”பயத்தால் இந்த பந்த் நடக்கிறது. இப்படி நடத்தும் நாம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற உண்மையான தேசபக்தர்களின் நினைவு நாளில் என்ன செய்தோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

அதே போல் இந்திய நாடாளுமன்றத்தைக் கழிப்பிடமாகவும் இந்திய முத்திரையில் உள்ள சிங்கங்களை ஓநாய்களாகவும் வரைந்த பத்திரிகையாளரான திரிவேதி, மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியின் கேலிச்சித்திரத்தை வெளியிட்ட பல்கலை பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா ஆகியோர்களின் கைதும் அனைவரையும் கவனிக்க வைத்தவை.

இந்தக் கைது நடவடிக்கைகள் கருத்து தெரிவிப்பவர்களின் மத்தியிலும், வெகுஜனங்களின் மத்தியிலும் பிரிவு 66 ஏ என்கிற கொடூரமான சட்டப்பிரிவுக்கு எதிரான உணர்வையே தூண்டியது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் கைதானவர்கள் அனைவரும் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், சாதாரண ஊழியர்கள் ஆகியோர்தான். வழக்கு தொடுத்தவர்கள் அனைவரும் அரசியலில் உள்ளவர்கள். அதிலும் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி. அவர்களின் கையே இதில் ஓங்கியுள்ளது.

வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு
சட்டக் கல்லூரி மாணவியான ஸ்ரேயா சிங்கால் உச்ச நீதிமன்றத்தில், கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்யும் 66-ஏ பிரிவை எதிர்த்து பொது நல வழக்கு தொடுத்தார். அவர் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சலமேஸ்வர், ரோஹின்டன் நரிமன் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதத்தை அடுத்து உச்சநீதிமன்றம் மார்ச் 24ம் தேதி தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66-ஏ -வை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் அந்த உத்தரவில், அரசியல் சாசனத்தில், அனைவரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாகவே 66-ஏ பிரிவு உள்ளது. எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்தது. நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்புவின் கருத்துரிமைக்கு ஆதரவாக 2010 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் இந்தத் தீர்ப்பு இரண்டு இடங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறது. இப்படி தமிழ்நாட்டுக்கு நெருக்கமான தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது.

”இன்டர்நெட் எல்லோருக்குமானது” வலைத்தள சமவாய்ப்பு: ஏன்? எதற்கு?

”இன்டர்நெட் எல்லோருக்குமானது” வலைத்தள சமவாய்ப்பு: ஏன்? எதற்கு?


Net Neutrality என்று சொல்லப்படும் வலைத்தள சமவாய்ப்பு என்றால் என்ன?

இன்டர்நெட் எனப்படும் வலைத்தள சேவை எல்லோருக்கும் பொதுவானதாக, ஒரே வேகம் கொண்டதாக, எல்லோரும் பயன்படுத்தத் தக்கதாக இருப்பதுதான் வலைத்தள சமவாய்ப்பு. நீங்கள் ஏழையா, பணக்காரரா என்று பேதம் பார்க்காமல் ஒரே வேகத்தில் இன்டர்நெட் இணைப்பு கிடைப்பதுதான் வலைத்தள சமவாய்ப்பு.

வலைத்தள சமவாய்ப்புக்கு இப்போது என்ன அச்சுறுத்தல்?

வோடஃபோன், ஏர்டெல் போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் வேகமான இணைய சேவையை அதிக விலையில் விற்க முயற்சி செய்கின்றன. அதிகமாக பணம் கொடுத்தால் அதிவேக இன்டர்நெட் சேவை, மற்ற எல்லோருக்கும் வேகம் குறைந்த சேவை என்கிற முறையை செயல்படுத்த இந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு நிர்பந்தம் அளித்து வருகின்றன. இந்த முறை செயல்பட்டால் இணையத்தில் விரைவு சேவை, மெதுவான சேவை என்கிற பாகுபாடு உண்டாகும்.

இந்தப் பாகுபாடு யாரையெல்லாம் பாதிக்கும்?

எல்லா வகையான நுகர்வோரையும் இந்தப் பாகுபாடு பாதிக்கும். இன்டர்நெட்டின் இப்போதைய ஜனநாயகத் தன்மையால் பலனடைந்து வரும் புதிய வலைத்தளத் தொழில்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படும்.

இந்தப் பிரச்னையின் அடிப்படை என்ன?

தாங்கள் உருவாக்கிய தொழில்நுட்ப உள்கட்டமைப்பினால்தான் கூகுளும் ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் ஸ்கைப்பும் பிரபலமாகியுள்ளன என்று தொலைதொடர்பு நிறுவனங்கள் கருதுகின்றன. இந்தச் சேவைகளைப் பெற அதிக விலை நிர்ணயிப்பதன் மூலம் இவற்றைச் சாதாரண மக்கள் பயன்படுத்த முடியாமல் செய்ய சில தொலைதொடர்பு நிறுவனங்கள் நினைக்கின்றன. இந்த அணுகுமுறை புதிய வலைத்தள தொழில்முனைவோரை முடக்கிவிடும்.

இப்போது என்ன செய்ய வேண்டும்?

தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வை அகற்றும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. இணைய/வலைத்தள சேவை என்பதை பொது சேவை என்று வரையறுப்பது மிகவும் அவசியம். இதன் மூலம் இந்தச் சேவையில் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வேண்டுதலுக்கு இணங்க, அமெரிக்காவின் மத்திய தொடர்பியல் ஆணையம் (எஃப்.சி.சி) 2015 பிப்ரவரியில் இணைய சேவையை பொது சேவை என்று அறிவித்தது. இதன் மூலம் அமெரிக்க மக்களுக்கு வலைத்தள சமவாய்ப்பு உறுதியானது.

’தமிழக இளைஞர்களுக்கு முன்னுதாரணம்’: சுந்தர் பிச்சைக்கு முதலமைச்சர் பாராட்டு!

’தமிழக இளைஞர்களுக்கு முன்னுதாரணம்’: சுந்தர் பிச்சைக்கு முதலமைச்சர் பாராட்டு!


கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக பதவியேற்றிருக்கும் சுந்தர் பிச்சைக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சுந்தர் பிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியில், ‘கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக நீங்கள் நியமிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவர், தன் கடுமையான உழைப்பின் மூலம் உயர்ந்த இடத்தை அடைந்திருப்பது பெருமைக்குரியதாக இருக்கிறது. தமிழக இளைஞர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக நீங்கள் மாறியிருக்கிறீர்கள்.

புதிய பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட, தமிழக மக்களின் சார்பாகவும் தமிழக அரசு சார்பாகவும் உங்களுக்கு என் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் சுந்தர்பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் பிச்சை(43), பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்து, ஐஐடி கரக்பூரில் பொறியியல் படித்தவர். பிறகு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பை முடித்து 2004ல் கூகுள் நிறுவனத்தில் புராடக்ட் மேனேஜராக பணியில் சேர்ந்தார். கூகுள் நிறுவனத்தில் படிப்படியான வளர்ச்சியை எட்டிய அவர், 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு தகவல் தொழிற்நுட்ப துறை வட்டாரங்களில் புகழ் பெற ஆரம்பித்தார். கூகுள் மெயில், ஆண்டிராய்டு, கூகுள் க்ரோம் போன்ற கூகுள் நிறுவனத்தின் உருவாக்கங்கள் முழுமையடைவதற்கு சுந்தர் பிச்சையின் பங்களிப்பை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். குறிப்பாக இணைய உலவியான கூகுள் க்ரோம், முன்னணி இடத்தில் இருப்பதற்கு சுந்தர் பிச்சை மிக முக்கிய காரணம் என்கிறார்கள்.

இணைய நிறுவனங்களில் உலகின் முன்னணி நிறுவனமான கூகுளின் முதன்மை செயல் அதிகாரி பணிக்கு பலருடைய பெயர்கள் பரிந்துரையில் இருந்தன. அதில் தற்போது யாஹுவின் முதன்மை செயல் அதிகாரியாக இருக்கும் மரிசா மேயரும் அடங்குவார். ஆனால் கூகுள் நிறுவனர்களின் நீண்ட கால அவதானிப்பில் சுந்தர் பிச்சையின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கவே, அதன் பலனாக முதன்மை செயல் அதிகாரியாக நியமனம் கிடைத்திருக்கிறது.

Monday, August 17, 2015

இந்தியாவின் கோயம்புத்தூர் உட்பட இன்னும் 12 நகரங்களுக்கு Google Live Traffic சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கோயம்புத்தூர் உட்பட இன்னும் 12 நகரங்களுக்கு Google Live Traffic சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.


புதுமைகள் படைப்பதில் கைதேர்ந்து போன Google நிறுவனம் அதன் Google Map சேவையின் ஊடாக நேரடி போக்குவரத்து நெரிசலை அறிந்து கொள்வதற்கான வசதியை ஏற்கனவே உலகின் பிரதான பல நகரங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தமை நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.


அந்த வகையில் தற்பொழுது இந்தியாவின் Kolkata, Coimbatore, Lucknow, Surat, Thiruvananthapuram, Indore, Ludhiana, Visakhapatnam, Nagpur, Kochi, Madurai, Bhopal போன்ற நகரங்களில் இடம் பெறக்கூடிய போக்குவரத்து நெரிசலையும் Google Map இன் ஊடாக பார்ப்பதற்கான வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதனை கணினியின் மூலம் Google Maps தளத்துக்குச் சென்று பார்க்க முடியுமான அதே வேலை உங்கள் Smart சாதனங்களுக்கு தரப்பட்டுள்ள Google Map செயலிகள் மூலமாகவும் பார்க்க முடியும்.
உதாரணத்திற்கு சென்னையில் இடம் பெறக்கூடிய போக்குவரத்து நெரிசலை நீங்கள் நேரடியாக அறிய வேண்டும் எனின் Google Map Search Bar இல் Traffic near Chennai என தட்டச்சு செய்வதன் மூலம் சென்னையில் இடம் பெறக்கூடிய நேரடி போக்குவரத்து நெரிசலை அறிந்து கொள்ள முடியும்.


மேலும் உங்களுக்கு கிடைக்கும் முடிவுகளானது பிரதானமாக நான்கு வர்ணங்களில் அமைந்த கோடுகளை கொண்டிருக்கும். அவைகளின் விளக்கங்கள் பின்வருமாறு.

  • பச்சை நிற கோடுகள் - போக்குவரத்து நெரிசல் இல்லை 
  • மஞ்சள் நிற கோடுகள் - ஓரளவு போக்குவரத்து நெரிசல் உண்டு 
  • சிவப்பு நிற கோடுகள் - அதிக போக்கு வரத்து நெரிசல்கள் உள்ளது.
  • சாம்பல் நிற கோடுகள் - போக்குவத்து நெரிசல் தொடர்பான தகவலை பெற முடியாதுள்ளது.


இந்த வசதி மூலம் நீங்கள் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய ஒரு பிரயாணத்தை எந்த பாதையில் மேற்கொள்வது சிறந்தது எனும் தீர்மானத்துக்கு வர உதவியாக அமையும்.


எனவே இந்த வசதியானது அன்றாடம் பிரயாணங்களை மேற் கொள்பவர்களுக்கு மாத்திரம் அல்லது அனைத்து தரப்பினர்களுக்கும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

Sunday, August 16, 2015

இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்! – Yamaguchi

இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்! – Yamaguchi


Tsutomu Yamaguchi (திசுதொமு யொமாகுசி) என்ற துரதிஷ்டசாலி பற்றியே இன்று பார்க்கப்போகின்றோம்.

உலக வரலாற்றில் இதுவரை இரண்டு அணுகுண்டுகளே யுத்தங்களின் போது பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். இரண்டாம் உலகயுத்தத்தின் போது அமெரிக்காவினால் ஜப்பான் மீது வீசப்பட்ட இரண்டு அணுகுண்டு தாக்குதலுக்கும் முகம்கொடுத்து தப்பித்த ஒரே ஒரு நபர் Yamaguchi ஆவார்.


மிஷுவிஷி நிறுவனத்தின் வேலை அலுவல்களுக்காக ஹிரோஷிமா (Hiroshima) நகரத்தில் தங்கியிருந்தார் Yamaguchi. அடுத்த நாள் தனது சொந்த ஊரான நாகஷாகி (Nagasaki) இக்கு பயணிக்க திட்டமிட்டிருந்தார். காலையில் நகரத்தை விட்டு வெளியேற தயாராக இருந்த அவருக்கு பயணச்சீட்டை தவறுதலாக அலுவலகத்தில் விட்டு விட்டது அப்போது தான் நினைவிற்கு வந்தது. உடனடியாக அலுவலகம் சென்று பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு வெளியேறினார். அப்போது நேரம் 8:15. (6/8/1945)

அமெரிக்க போர்விமான ஓட்டி எனோலா கேய், “Little Boy” என பெயரிடப்பட்ட முதலாவது அணு குண்டை ஹிரோஷிமா நகர மையத்தில் போட்டார்! இதன் தாக்கத்தால் சுமார் 3 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த Yamaguchi இன் பார்வை தற்காலிகமாக அற்றுப்போனதுடன், அவரது உடலின் வலதுபாகங்கள் பெரும்பாலும் எரிந்துபோயின. பின்னர், மீட்பு படையினரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் 3 நாள் சிகிச்சை பெற்ற அவர் தனது சொந்த ஊரான நாகசாகிக்கு மாற்றப்பட்டார்.

9/6/1945 அமெரிக்க போர் விமானி பொஸ்கார் “Fat Man” என்ற இரண்டாவது அணுகுண்டை நாகசாகி மீது போட்டார்!
குண்டு போடப்பட்ட இடத்தில் இருந்து சரியாக 3 கிலோமீட்டர் தூரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த Yamaguchi, இவ் முறை எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் காக்கப்பட்டார்.

இவ்வாறு, துரதிஷ்ட வசகாம இரண்டு அணு குண்டுத்தாக்குதலுக்கும் உள்ளான Yamaguchi ஐ, 2009 ஆம் ஆண்டு “இரண்டு அணுகுண்டுகளுக்கும் தப்பிய ஒரே நபர் ” என்ற ரீதியில் ஜப்பான் அரசு கெளரவித்தது.
இவர் 2010 ஆம் ஆண்டு தனது 93 ஆவது வயதில் வயிற்றுப்புற்று நோயினால் இறந்தார்.

உலகை தலைகீழாக காணும் பெண் – வினோத நோய்

உலகை தலைகீழாக காணும் பெண் –
வினோத நோய்


பொயன டனிலொவி (Bojana Danilovic) என்ற வினோத பெண்ணைப்பற்றியே இங்கு பார்க்கப்போகின்றோம்.

Bojana சாதாரண மனிதர்கள் போல் தோற்றமளித்தாலும், உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் விட சற்று வித்தியாசமான ஒரே பெண் இவர்தான். ஏனெனின், நாமெல்லாம் காட்சிகளை நேராக பார்க்கின்றோம். ஆனால் இவர் அனைத்து காட்சிகளையும் தலைகீழாக பார்க்கிறார்! ஆம் இவரால் எந்த காட்சிகளையும், எழுத்துக்களையும், சம்பவங்களையும் நேராக பார்க்க முடியாது. அனைத்துமே தலை கீழாகத்தான் தெரியும்!

Bojana இன் கண்களை பரிசோதித்த மருத்துவ ஆராய்சியாளர்கள் அவரின் கண்களில் எந்த பிழையும் இல்லை என்பதை அறிந்துகொண்டனர். Bojana இன் மூளையே இவர் பார்க்கும் காட்சிகளை தலைகீழாக புரிந்துகொள்கிறது!

சேர்பியாவைச்சேர்ந்த 28 வயதாகும் இவர் இப்போது “வேலை தேடுபவர்களுக்கு உதவும்” அமைப்பில் வேலைபார்த்துவருகிறார். இவரது அலுவலகத்தில் இவர் பயன்படுத்தும் கணினித்திரை மட்டும் தலைகீழாக இருக்கும்!
வீட்டிலும், அனைவரும் பார்வையிடும் தொலைக்காட்சியுடன் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி மூலமாகவே இவர் திரைப்படங்களையும் நிகழ்வுகளையும் கண்டுகளிக்கிறார்.

இவரின் இக்குறைக்கு இதுவரை தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை. இக் குறைபாடு “spatial orientation phenomenon” என்றழைக்கப்படுகிறது.

பற்கள் மூலம் தமிழரின் கின்னஸ் சாதனை! | ராதாகிரிஷ்னன் வேலு -King Tooth

பற்கள் மூலம் தமிழரின் கின்னஸ் சாதனை! | ராதாகிரிஷ்னன் வேலு -King Tooth


ஆம் ஆண்டு ஆவணி 30 ஆம் திகதி (2007/08/30) மலேசியாவின் 50 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராஜா ஜிகி என்று அழைக்கப்படும் ராதாகிரிஷ்னன் வேலு என்ற தமிழர் கின்னஸ் புத்தகத்தில் தனது சாதனையை பதிவு செய்திருந்தார்.

சுமார் 6 பெட்டிகள் பொருத்தப்பட்ட 297.1 தொன் நிறையுடைய புகையிரதத்தை 2.8 மீட்டர் தூரத்திற்கு தனது பற்கலாள் இழுத்துச் சென்று சாதனை படைத்திருந்தார் இவர். 14 வயதில் தனது உடல் பாகங்களில் குறிப்பிட்ட பாகங்களை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய கவன ஈர்ப்பு சக்தியை யோகா கலை மூலம் இந்தியாவில் குருவிடம் கற்றுக்கொண்டமையால் இச்சாதனையை தன்னால் நிலை நாட்ட முடிந்ததாக குறிப்பிட்டார்.

இன்றுவரை இச்சாதனை முறியடிக்கப்படவில்லை. King Tooth (ராஜ பற்கள்) என்றழைக்கப்படும் இவர், தமிழர் என்ற ரீதியில் நாம் பெருமைப்படக்கூடிய மற்றுமோர் தமிழர். :)

தொலைக்காட்சி பெட்டியின் முன்னால், 42 வருடங்களாக சடலமாக இருந்த பெண்!

தொலைக்காட்சி பெட்டியின் முன்னால், 42 வருடங்களாக சடலமாக இருந்த பெண்!


பாலடைந்த வசிப்பிட அடுக்கு மாடியொன்றை அகற்றுவதற்கு அதன் உரிமையாளர் முடிவெடுத்துக்கொண்டார். 1970 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அந்த அடுக்கு மாடிக்கட்டிடத்தில் எவரும் தங்கியதில்லை. எனினும், ஒரு வீடு மட்டும் உரிமையாளார் பற்றிய தகவல்கள் இல்லாமல் திறக்க முடியாது இருந்தது. உரிமையாளர் பொலிஸாரை தொடர்பு கொண்டார். உரிமையாளர் கேட்டுக்கொண்டதன் பெயரில் பொலிஸார் வீட்டுக்கதைவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள்.

அவர்கள் அங்கு கண்ட காட்சி அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஆம், அங்கு எலும்புக்கூடாகிப்போன ஒரு சடலம் தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னே இருந்த கதிரையில் அமர்ந்திருந்தது! அச்சடலத்தின் அருகே இருந்த மேசை மீது என்றோ போடப்பட்ட கோப்பியும் இருந்தது.

பின்னர் பெறப்பட்ட தகவல்களின் படி, 1924 ல் பிறந்த ஹெவிகா கொலிக் (Hedviga Golik) என்ற காணமல் போனதாக அறியப்பட்ட நபரின் சடலமே அது என இனங்கானப்பட்டது. 1966 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அந்தப்பெண்ணையாரும் கண்டிருக்கவில்லை. அவரது அயலவர்கள் அந்தப்பெண் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக நினைத்துக்கொண்டார்கள். காலப்போக்கில் அனைவரும் அந்த அடுக்குமாடியைவிட்டு வெளியேறி விட்டார்கள்.

கோப்புயுடன் தனது கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னர் அமர்ந்து, ஏதோ ஒரு காரணத்தினால் இறந்துபோன் அந்தப்பெண்ணை எவரும் தேடவில்லை. சுமார் 42 வருடங்களுக்குப்பின்னர், எதேச்சையாக பொலிஸாரால் அவரது உடல் கண்டறியப்பட்டது!

மேலும் வியப்பான சம்பவங்களை அறியலாம் தொடர்ந்திருங்கள்!

காதலுக்காக கிட்னியையும் இழந்து காதலையும் இழந்த நபர் !!!

காதலுக்காக கிட்னியையும் இழந்து காதலையும் இழந்த நபர். – வினோதம்


சில பெண்கள் குறிப்பிட்ட நிறுவன பெயருடைய “handbags” களை வாங்குவதற்கு ஆசைபடுவார்கள். அவர்களது காதலர் / கணவர் அதை அவங்கி கொடுக்க நினைப்பார். (கடமையாகவும்.)

27 வயதான பார்க் என்ற நபர் தனது காதலி ஆசைப்பட்ட “Kelly bag” ஐ வாங்குவதற்க்கு முடிவெடுத்தார்.

அதற்க்காக, பகுதி நேர வேலை செய்தமையுடன் 3 மாதங்களுக்கு பகுதி நேர ஆசிரியர் வேலையும் செய்து பணம் சேர்த்தார். அப்படி இருந்தும் பணம் போதாமல் இருந்ததுள்ளது.

அந்த நேரத்தில் “மனித ஹிட்னி தேவைப்படுகிறது” என்ற விளம்பரம் அவரது கண்ணிற்கு பட தனது கிட்னியை விற்று அந்த பணம் மூலம் அந்த handbag ஐ வாங்கி தனது காதலிக்கு பரிசாக கொடுத்துள்ளார்!

பரிசு கொடுத்து இரண்டு நாட்களில் அவர்களின் காதல் முறிவடைந்துவிட்டது! 

ஐந்து வயதில் ஒரு தாய்! – மருத்துவ வினோதம்!

ஐந்து வயதில் ஒரு தாய்! – மருத்துவ வினோதம்!


இது நடந்தது இப்போதல்ல, எனினும் வினோதமான இந்த சம்பவம் பற்றி பார்ப்போம்…


1934 ஆம் ஆண்டு பேரு/பெரு நாட்டில் இந்தியப்பெண் ஒருவர் 3 அடி உயரமுள்ள ஒரு ஐந்து வயது நிரம்பிய சிறுமியை கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்திருந்தார். குழந்தையின் வயிறு மிகப்பெரிதாக கட்டிபோன்று இருந்தது.

மருத்துவர் வயிற்றுக்கட்டி என்று பரிசோதனைகளை மேற்கொண்டார். X-Ray பரிசோதனையை மேற்கொண்ட மருத்துவருக்கு ஆச்சரியம். அந்த ஐந்துவயது சிறுமியின் வயிற்றில் 8 மாதங்கள் நிரம்பிய சிசு இருந்தது!

மருத்துவரின் உதவியுடன் சிறுமி பேரு நாட்டின் தலை நகரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். விசேட கவணிப்பில் இருந்த அந்த சிறுமி ஒன்றரை மாதங்களின் பின் 14/05/1939 இல் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்!

குழந்தை 2.7 கிலோகிராமுடன் ஆரோக்கியமாக பிறந்தது. (40 வயதில் எலும்பு மச்சையில் ஏற்பட்ட புற்று நோயினால் மரணமடைந்தது.)

ஆரம்பத்தில், பிறந்த குழந்தை அவரது தம்பியாக இருக்கும் என மருத்துவர்கள் ஊகித்தார்கள் (பெண் குழந்தையின் வயிற்றில் இன்னோர் குழந்தை தங்கும் சம்பவங்கள் நடப்பதுண்டு, எனினும் அக் குழந்தை இறந்த உடலாகவே தங்கும்.)
ஆனால், மருத்துவ பரிசோதனைகளில் அக் குழந்தை அச் சிறுமியின் குழந்தை தான் என உறுதிப்படுத்தப்பட்டது.

சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுமியால் அடையாலம் காட்டப்படவுமில்லை. சிறுமியின் தந்தை சந்தேகத்தின் பெயரில் கைதாகினார். எனினும், பல மருத்துவ சான்றுகளின் உதவியுடன் அவர் மீது தப்பு இல்லை என்பது நிரூபனமாக்கப்பட்டது.

1972 இல் வேறு ஒரு நபரை திருமணம் முடித்த அந்த பெண்(=சிறுமி) இன்னோர் குழந்தையை பெற்றெடுத்தார்.

இச் சிறுமி பற்றிய தகவல்கள் 2003 ஆண்டிலேயே வெளியுளகத்திற்கு தெரியவந்தது. ஊடகங்கள் அவரை பேட்டி எடுக்க நாடியபோதும் அவர் அதற்கு மறுத்துவிட்டார்!

இணைந்திருங்கள் மேலும் அறியலாம்…

கரும்பள்ளிவண்டு[Lady Bug] அடிமையாக்கும் குளவி

கரும்பள்ளிவண்டு[Lady Bug] அடிமையாக்கும் குளவி


நமக்குத் தெரியாத எவ்வளோ இரகசியங்களை உள்ளடக்கியது பூமி. அதில் ஒன்றுதான் கரும்பள்ளிவண்டு[Lady Bug] அடிமைப் படுத்தும் குளவி பற்றிய தகவல்.

டினோகேம்பஸ் கோஸினெல்லா[ Dinocampus coccinellae ]என்ற அறிவியல் நாமகரணம் கொண்ட குளவி லேடி பக்கை ஜோம்பீஸ் ஆக மாற்றுவது வியப்பானதுதான்.

ஏன் இந்த கரும்பள்ளிவண்டுக்குள் [Lady Bug] குளவியின் கூட்டை பாது காக்க வேண்டும் என்பது தான். சமீபத்தில் பிரெஞ்ச் -கனேடியன் குழு ஒன்று இதற்கான காரணத்தை கண்டுபிடித்திருக்கின்றன.

இந்த குளவியானது கரும்பள்ளிவண்டை [Lady Bug] ஒரு வித வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்குகிறது அதன் காரணமாக அவைகளின் நரம்பு மண்டலமும் மூளையும் பாதிப்புக்கு உள்ளாகிறது. பின் அது குளவியின் கட்டளைகளை ஏற்கிறது. சொல்லப் போனால குளவியின் கூட்டுக்கு பாதுகாவலனாக மாறிவிடுகிறது.

குளவி கரும்பள்ளிவண்டின் [Lady Bug] உடலின் வைரஸ்தாக்கிய முட்டைகளை உட் செலுத்துவிடுகிறது(by using ovipositor ). முட்டையில் இருந்து பொறித்த லார்வாக்கள் அதன் உடலில் இருந்து வெளியேறி கூட்டை(cocoon) அமைக்கிறது. முட்டை பொறிந்த போதே பக் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த கூடு பக்கின் உடலை ஒட்டிய படியே கால்களுக்கு இடையில் பாதுகாப்பாக இருக்கும். லார்வா முழுவளர்ச்சி அடைந்து கூட்டை விட்டு வெளியேறும் வரை பக்கின் தலையாய பணி கூட்டை பாது காப்பது தான்

Tuesday, January 20, 2015

கடற்கரைப் பிள்ளையார் - சிறுகதை

கடற்கரைப் பிள்ளையார் - சிறுகதை 


கதையாசிரியர் : நிர்மலா ராகவன் 

1910

“டேய்! இந்தக் கல்லு முடியுமா, பாரு!”

“இதைத்தாண்டா இவ்வளவு நாளா தேடிக்கிட்டு இருக்கோம். இனிமே இது வெறும் கல் இல்லே. சாமி!”

அந்தக் கருங்கல்லை ஒரு பெரிய மரத்தடியில் நட்டுவிட்டு, தயாராக வைத்திருந்த சிவப்புத் துண்டை அதன்மேல் போர்த்தினார்ககள். மண் தரையில் விழுந்து, தலைமேல் கைகூப்பிக் கும்பிட்டார்கள்.

அவர்களது குறைகளையும், அற்பசொற்ப ஆனந்தங்களையும் பகிர்ந்துகொள்ள பிள்ளையார் வந்துவிட்டார் என்ற திருப்தியுடன், பிறரிடமும் அதைப்பற்றி பெருமையாகச் சொல்லிக்கொள்ளப் போனார்கள் அவ்விரு இளைஞர்களும்.

தீபகற்ப மலாயாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்கு அருகில் காடாக இருந்த பகுதியில் ஒரு புதிய கோயில் இப்படித்தான் உருவாயிற்று.


1960

பசுமையான மரங்கள் அடர்ந்திருந்த இடம் சிமெண்டுக் காடாக, வீடுகளும், பள்ளிக்கூடங்களும், ஓரிரு மருத்துவசாலைகளும் அதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அக்கம்பக்கத்தவர் நாடி வந்த அந்த பிள்ளையார் கோயிலும் வெறும் மரத்தடியாக இல்லாமல், செங்கல்லும், சிமெண்டும் சேர்ந்து, தூண் வைக்கப்பட்ட மண்டபமாக மாறியிருந்தது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் முட்டை வடிவக் கல்லாக இருந்த பிள்ளையார் இப்போது யானை முகத்துடன் வீற்றிருந்தார். சரிகை போட்ட வேட்டியில் கம்பீரமாக இருந்தார்.

நாட்டின் இந்தியர்களுக்கு மட்டுமின்றி, பௌத்த மதத்தைச் சேர்ந்த சீன இனத்துப் பக்தர்களுக்கும் `டோடோ` (TOTO) என்ற லாட்டரிவழி, ஒரு காகிதத்துண்டில் அவர்கள் குறித்துக் கொடுத்த நான்கு எண்களில் சிலவற்றையாவது சரியாக வரும்படி செய்து, தனக்கும் நல்ல வரும்படி தேடிக்கொண்டார். மாதமுழுவதும் பணத் தட்டுப்பாடு இல்லாமல் செய்த கடவுளுக்கு எல்லாரும் அள்ளிக் கொடுத்தனர். ஏதாவது ஒரு காரியம் கைகூட அதிகாரிகளுக்குக் கொடுப்பதில்லையா? அந்த வழக்கம்தான்.

ஒருவர் மட்டும்தான் பிள்ளையாரைப் பார்த்து வயிற்றறிச்சல் பட்டார்.

அவர் — கணபதி. எல்லாம் தான் மாதமெல்லாம் உழைத்துச் சம்பாதிப்பதை இந்த குண்டுப் பிள்ளையார் உட்கார்ந்த இடத்தில் சதுர்த்தி தினங்களிலோ, அல்லது ஓரிரு வெள்ளிக்கிழமைகளிலோ சம்பாதித்து விடுகிறாரே என்ற ஆற்றாமைதான்.

`ம்! இவருக்கும் என் பெயர்தான். இவருடைய அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தால்!`என்று தனக்குள் பொருமியவற்கு ஒரு உத்தி தோன்றியது. பிள்ளையாருடன் கூட்டு சேர்ந்துகொண்டால்?

தான் நினைத்ததைச் சாதிக்க முதல் படியாக, அனுதினமும் கோயிலுக்குத் தவறாது வந்தார் கணபதி.

நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போட்டபடி, “பிள்ளையாரப்பா! பிழைக்கும் வழியைச் சொல்லப்பா!” என்று பலர் காதிலும் படும்படி மனமுருகி வேண்டினார். ஏதாவது பண்டிகை வந்தால், வா¢ந்து கட்டிக்கொண்டு, பொங்கல், புளியோதரை, கொழுக்கட்டை என்று (பிறர் கொண்டுவந்த) பிரசாதங்களை பக்தர்களுக்கு விநியோகிக்கவும் கணபதி தவறவில்லை.

சில மாதங்களிலேயே, கோயிலுக்கு வருகிறவர்களுக்கு, பிள்ளையாருக்கு அடுத்தபடி கணபதிதான் மிகவும் தெரிந்தவரானார்.

கோயில் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ள ஒரு குழு அமைக்கப்பட்டபோது, எவ்வித தடங்கலும் இல்லாது, தலைவராக கணபதி தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியமென்ன?

முதலில் ஒரு சொந்த வீடு வாங்கினார், “சாமி! ஒனக்கு நிரந்தரமா தங்க ஒரு இடம் இருக்கிறமாதிரி ஒன் பக்தனுக்கும் வேணாமா?” என்று முறையிட்டுவிட்டு. தான் செய்வது தவறில்லை என்று அந்த கோரிக்கையிலேயே சமாதானம் ஏற்பட்டது.

“ஒனக்கென்னப்பா! மனைவியா, பிள்ளைக்குட்டியா! ஒரு பிடுங்கல் இல்ல!” என்று அங்கலாய்க்க, அடுத்த கட்டமாக, மனைவியின் வங்கிக்கணக்கு எகிறியது.

நல்ல வேளை, பிள்ளையார் இளைக்க வழி இருக்கவில்லை.

அர்ச்சனை, உண்டியல் ஆகியவற்றால் கிடைத்த பணம்தான் நம் வீட்டுக்குத் திருப்பப்படுகிறது என்று சந்தேகமறப் புரிந்ததும், “சாமி குத்தம்ங்க!” என்று பயந்த மனைவியிடம், “அடி பைத்தியமே! நமக்குக் குடுக்கத்தானே சாமியே இருக்காரு! இல்லாட்டி, ஒனக்கு ஒரு டஜன் தங்க வளையலுங்கதான் வாங்க முடியுமா?” என்று கணபதி விவரிக்க, அவள் அடங்கிப் போனாள்.

1997

`வர வர, எல்லாரும் கஞ்சனாயிட்டானுங்க!` என்று மனத்துக்குள் வைதுகொண்டார் கணபதி.

நாட்டில் பொதுவாகப் பரவியிருந்த பொருளாதாரத் தட்டுப்பாடு கோயிலையும் விட்டு வைக்கவில்லை. கணபதியின் பேராசைக்கு உண்டியல் பணம் ஈடு கொடுக்கமுடியாது போயிற்று.

அப்போதுதான் அவருக்கு ஒரு உண்மை விளங்கியது: ஒரு சந்நதி, ஒரு உண்டியல் என்று இருப்பதால்தானே வரவு இவ்வளவு குறைவாக இருக்கிறது!

அடுத்த கூட்டத்தில், “நம்ப கோயிலுக்குச் சொந்தமா இவ்வளவு பெரிய நிலம் இருக்கு. பிள்ளையார், பாவம், தனியா இருக்காரு. அவரோட தம்பி முருகனுக்கும் ஒரு சந்நதி கட்டினா என்ன?” என்று, தொண்டையைக் கனைத்தபடி ஆரம்பித்தார்.

அவருடன் பங்கு சேர்ந்துகொண்டிருந்த மைத்துனர், “அருமையான யோசனை, மாமா. அப்படியே அவங்க அப்பா நடராஜனுக்கும், அம்மா சிவகாமிக்கும் சேர்த்தே கட்டணும்!” என்று ஆமோதித்தார்.

இன்னொருவர் அப்பாவித்தனமாக, “தில்லை நடராஜனே நமக்காக கடல் கடந்து மலேசியாவுக்கு வந்து தரிசனம் குடுக்கிறாருன்னு செய்தி பரப்பினா, நிறைய பேர் நம்ம கோயிலுக்கு வருவாங்க,” என்று திட்டம் வகுத்துக் கொடுத்தார்.

கோயிலை விரிவு படுத்துவதென்றால் சாமானியமா?

அந்த கைங்கரியத்துக்காக பக்தர்கள் உண்டி குலுக்கினார்கள், வீடு வீடாகச் சென்று. எதிர்பார்த்ததற்கு மேலேயே நிதி கிடைக்க, `போனால் போகிறது` என்று ஒரு கோபுரமும் கட்ட முடிவெடுத்தார் கணபதி. வரவு, செலவெல்லாம் அவர் கண்காணிப்பில்தான் இருந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமா!

எதிர்பார்த்தபடி, இரண்டு சந்நிதானங்களில் அமைந்த இரு உண்டியல்களால் நிறையப் பணம் கிடைக்கவில்லை. ஒன்றில் பணம் போட்டவர்கள், அடுத்த கடவுள் விக்கிரகத்துக்கு முன்னால் தரையில் விழுந்து கும்பிட்டதுடன் நிறுத்திக் கொண்டனர்.

கணபதி யோசிக்க ஆரம்பித்தார்.

2000

பிள்ளையார் கோயிலின் மகிமை சில ஆன்மிக சஞ்சிகைகளின் மூலம் அயல் நாடுகளுக்கும் பரவ, வெளிநாட்டவர்களின் வரவு அதிகரித்தது. அதிலும், இந்திய மொழி, அல்லது கலாசாரம் தெரியாத ஜப்பானியர்கள் போன்றவர்கள் வந்தால், அவர்கள் பிரத்தியேகமாகக் கவனிக்கப்பட்டார்கள்.
அதற்குக் காரணம் இருந்தது.

உள்நாட்டவர் அர்ச்சனைத் தட்டில் ஐம்பது காசு போட்டுவிட்டு, கடவுளிடம் அதற்கு ஈடாக ஐயாயிரம் ரிங்கிட் கிடைக்க வேண்டுமென்று பிரார்த்தித்தனர். இந்தக் பேரமெல்லாம் அறியாத வெளிநாட்டவர்கள் ஐந்து, பத்து என்று பச்சை, சிவப்பு நிற ரிங்கிட் தாள்களை அள்ளி வீசினர்.

இனி நாம் பிழைக்க இவர்களை அண்டினால்தான் முடியும் என்று தீர்மானித்தார் கணபதி. கோயில் தலைவராக அவர் பதவியேற்று பல்லாண்டுகள் ஆகியிருந்தபோதும், அவரை எதிர்க்கும் துணிவு எவருக்கும் இருக்கவில்லை. அபூர்வமாக அவரைத் தட்டிக்கேட்ட ஓரிருவரும் சொல்லி வைத்தாற்போல் விபத்துக்குள்ளானார்கள். அதன் விளைவாக, `கணபதி தமது வலது கையாக இருப்பதைத்தான் பிள்ளையார் விரும்புகிறார். ஏனெனில், பெயர் பொருத்தம் மட்டுமின்றி, பெரிய பக்தராகவும், இடைவிடாது கோயிலை புதுப்பிக்க முடிவுகள் எடுத்து, அதற்காகக் கடுமையாக உழைப்பவராகவும் இருக்கிறார்` என்று செய்தி பரவிற்று.

கோயிலில் மண்டபங்களும், சந்நிதானங்களும் பெருக, வளாகத்தில் இருந்த அடர்ந்த மரங்களை வெட்டவேண்டியதாயிற்று. அங்கே வாழ்ந்து வந்த குரங்குக் கூட்டங்கள் கோயிலுக்குள்ளேயே வர ஆரம்பித்தன. குழந்தைகளும், பெரியவர்களும் அர்ச்சனை செய்து பெற்றிருந்த வாழைப்பழத்தையும், தேங்காய் மூடியையும் அந்தக் குரங்குகளுக்கு அளித்து மகிழ்ந்தனர். கருமித்தனம் செய்தவர்களின் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு, தாவியோடின அம்மிருகங்கள்.

இந்த வேடிக்கையை தமது புகைப்படக் கருவிகளிலும், வீடியோ கேமராவிலும் பதிவு செய்த வெளிநாட்டவர்களைப் பார்த்ததும் கணபதியின் கற்பனை கரைபுரண்டோடியது.

`கேவலம், குரங்கையே பார்த்து பிரமிக்கிறார்களே! மேல் நாட்டில் இல்லாத பாம்பு, தேள், மயில் போன்ற பிற ஜீவன்களையும் இங்கு கொண்டுவர முடிந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்!` என்று எண்ணமிட்டார்.

இப்போது, கோயில் மிருகக் காட்சிசாலையாக மாறியது. கோயிலின் முன் பகுதியிலேயே முதலை, ஆமை, வண்ணப் பறவைகள் என்று பலவும் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்தன.

அவைகளுக்கெல்லாம் தீனி போட்டு, அந்த இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள காசு வேண்டாமா?
வேடிக்கை பார்க்க வந்தவர்கள் நுழைவுச்சீட்டு வாங்கி உள்ளே போனார்கள். பொழுது நன்றாகப் போனதால், டிக்கட்டின் விலை அர்ச்சனை சீட்டைவிட பன்மடங்கு அதிகம் என்பதை யாரும் யோசிக்கவில்லை.

பின்புறத்தில் முக்கியத்துவம் குறைந்துபோய் கிடந்தது கடவுள் சந்நதி.

2004

பிள்ளையார் அதிர்ந்தார். தான் வெறும் குழவிக்கல்லாக இருந்தபோது பக்தி செலுத்தி அகமகிழ்ந்தவர்கள் போக, இப்போது பெயரளவில் மட்டும் தாம் இங்கு குடியிருப்பது குறித்து அவருக்கு வேதனை உண்டாயிற்று.
தன்னை வைத்து வியாபாரமா?

கடவுள் படைத்த பிற உயிர்கள் இப்பாழும் மனிதர்களை எதிர்க்க இயலாது, சுதந்திரமாக ஓடவோ, ஊர்ந்து செல்லவோ இயலாது சிறு கூண்டுகளில் அடைபட்டிருப்பது என்ன கொடுமை!

அது போதாதென்று, அங்கு ஒரு மேடை வேறு. கடவுள் பாடல்கள் என்ற பெயரில் திரைப்படங்களில் ஒலித்த குத்து நடனங்களை இளம்பெண்களும், ஆண்களும் வலிப்பு வந்தவர்கள்போல ஆட, அந்த கர்ணகடூரமான ஓசையானது தெய்வ சந்நிதானத்தில் பக்தர்கள் சிலர் மனமுருகிப் பாடும் இசையை மீறுதாக இருந்தது. பாதி பூசை நடந்து கொண்டிருக்கும்போது, காற்றில் மிதந்து வந்த திரைப்படப் பாடல்கள் பலரையும் ஈர்த்து, அவர்கள் கவனத்தைக் குலைத்தது.

பிள்ளையார் அழாத குறை. “உலகம் இப்படிக் கெட்டுப் போச்சே, மாமா!” என்று நாரத்தில் அயணம் செய்துகொண்டிருக்கும் (அதாவது, நீரில் சயனித்துக்கொணடிருக்கும்) தாய்மாமன் நாராயணனிடம் முறையிட்டார்.

“நான் காத்தல் கடவுள்தான். ஆனால், இனியும் பொறுமையாக இருக்க என்னால் முடியாது,” என்று ஆர்ப்பரித்த விஷ்ணு, ” மருமகனே! நீ பூலோகத்துக்குப் போய் பட்ட பாடெல்லாம் போதும். இந்த ஆண்டின் இறுதியில் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கட்டுகிறேன்,” என்று பூடகமாகச் சொன்னார்.

அவ்வருடம் டிசம்பர் இறுதியில் வந்த சுனாமி என்ற பேரலையால் அந்த வட்டாரமே, கணபதி குடும்பம் உட்பட, கடலுக்குள் அமிழ்ந்துவிட, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த ஒரே ஒருவர் நம் பிள்ளையார்தான்.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்