Friday, June 28, 2013

உலர் திராட்சையின் நன்மைகள் ! ! !

உலர் திராட்சையின்  நன்மைகள்   ! ! !

  • உலர் திராட்சையில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.


  • ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும்.


  • இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.


  • மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

நம்ம மூளை வேலை செய்யாமல் இருக்க காரணங்கள்............

மூளை..!

நம்ம மூளை வேலை செய்யாமல் இருக்க காரணங்கள்............

1. புகைப்பிடிப்பதால், நுரையீரல்மட்டும் பாதிக்கப்படுவதில்லை. மூளையில் உள்ள சுருக்கங்கள் அதிகரிப்பதோடு, அல்சீமியர் நோயை உண்டாக்கும்.

2. உணவை தவிர்த்தால் ,இரத்தத்தில் உள்ள சர்க்கரையின்அளவானது குறைந்து மூளைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், மூளையின் செயல்பாடானது தடைபட ஆரம்பிக்கும்.

3. அதிகமாக சாப்பிடுவது மூளைத்தமனிகளை கடினமடையச் செய்து,
ஞாபக சக்தியை குறைத்துவிடும்.

4. அளவுக்கு அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால், புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் உடலில் உறிஞ்சாமல், ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கி, மூளை வளர்ச்சியை தடை செய்யும்.


5. உடலில் ஆக்ஸிஜனை அதிகம் உறிஞ்சுவது மூளை என்பதால் மாசுபட்ட காற்றினை சுவாசிக்கும் பொழுது , மூளையின் செயல்திறனானது குறைந்துவிடும்.


6. நல்ல தூக்கம் இல்லாவிட்டால், மூளையில் உள்ள செல்கள் இறக்க நேரிடும். மேலும் தூங்கும் போது முகத்தை போர்வையால்
போர்த்திக் கொண்டு தூங்கக் கூடாது. ஏனெனில் பின் மூளைக்கு வேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்காமல், மூளையானது பாதிக்கப்படும்.

7. உடல் நலம் சரியில்லாத நேரத்திலும் வேலை செய்தாலோ அல்லது படித்தாலோ மூளை பாதிக்கப்படும்.

8. குறைவாக பேசினால் மூளையின் செயல்திறனும் குறையும் . அதிகமாகபேசுவதன் மூலம் மூளையின் செயல்திறனை மேம்படுத்த முடியும்....

இனிமே யாரையாவது மூளை இல்லையானு கேக்கறதுக்கு முன்னாடி யோசிங்க ,இதுல ஏதாவது ஒரு பழக்கம் அவங்களுக்கு
இருக்குமோனு......... உடனே புத்திசாலித்தனமா என்னை கேக்காதிங்க, இதுல எந்த பழக்கமும் எனக்கு இல்லை..

Saturday, June 8, 2013

அற்புத மணல் மாதா கோவில் - செட்டிவிளை

அற்புத மணல் மாதா கோவில் - செட்டிவிளை

சிவப்பு பட்டுக் கம்பளம் விரித்தாற்போல் நிரவியுள்ள சிவப்பு மணல் பகுதி. அங்குமிங்கும் சில ஆலமரங்கள், அத்திமரங்கள். மணல் பகுதியை அடுத்து முந்திரிப் பழத்தோட்டங்கள்; வழியெங்கும் ஓங்கி வளர்ந்து நிற்கும் மரங்களின் அழகுத் தோற்றம். முட்புதர்களுக்கும் காட்டுச் செடிகளுக்கும் குறையில்லாத மணற்பரப்பு. இதுதான் மணல் மாதா கோயிலின் இயற்கைப் பின்னணி.


தூத்துக்குடி  மாவட்டதில் உள்ள  திருச்செந்தூரிலிருந்து கடலோரமாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பெரியதாழை அல்லது தோப்புவிளையிலிருந்து உட்புறமாகப் பிரிந்து செல்லும் சிறிய சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ளது, மணல் மாதா திருத்தலம். இதன் அருகே உள்ள ஊர் செட்டிவிளை. முன்னொரு காலத்தில் இந்த மணல் மாதாவின் திருத்தலம் அமைந்திருந்த ஊர், ‘கணக்கன் குடியிருப்புஎன்று அழைக்கப்பட்டது.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்