Tuesday, November 19, 2013

டால்பின் மீனை காதலித்து கல்யாணம் செய்து கொண்ட கோடீஸ்வர பெண்மணி !

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 41 வயது  கோடீஸ்வர பெண்மணி "ஷாரோன் டெண்ட்ளர்" . இவர் கடந்த டிசம்பர்  2005 ஆம் ஆண்டு இஸ்ரேல்  ரிசார்ட் [Resort] ஒன்றில் இருந்த  சிண்டி என்ற டால்பின் மீனை மணந்தார் !

புரியவில்லையா ? வேற ஒன்றும் இல்லை , 15 வருடங்களுக்கு முன்பு அந்த ரிசார்ட் வந்த பொழுது டால்பின் மீனுக்கும் இந்த பெண்மணிக்கும் காதல் மலர்ந்துள்ளது . பின்பு ஒவ்வொரு வருடமும் அந்த டால்பின் மீனை பார்க்க வருடத்திற்கு  இரண்டு அல்ல மூன்று முறை அங்கு செல்வதை வாடிக்கையாகி கொண்டார் . கடைசியாக கல்யாணமும் செய்து கொண்டார் !

ஆனால் அந்தோ பரிதாபம் , சிறிது நாள் கழித்து 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் நாள் அந்த டால்பின் மீன் இறந்து போனது ! 



மனிதனுக்கும் மிருகத்திற்கும் திருமணம் நடத்தி வைப்பது என்பது இந்தியாவில் நாம் சாதரணமாக கேள்விப்படும் ஒரு விசயம் தான் ! ஆனால் , அதுவே வெளிநாட்டில் நடந்தால் அதை நாம் ஆச்சர்யமாக பார்கிறோம் ! இங்கு நடக்கும் இத்தகைய கோமாளித்தனம் மூட நம்பிக்கையினால் நடக்கிறது ! வெளிநாட்டில் நடப்பது  பெரும்பாலும் வினோத காதல் , அன்பு மற்றும் அதிர்ஷ்டம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நடக்கிறது  !

எது எப்படியோ ! மனிதனுக்கும் மிருகத்திற்கும் திருமணம் என்பது ஒரு விந்தையான விசயம்தான் !

இதை போன்ற பல விசித்திர திருமணங்கள் பற்றி தொடர்ந்து இந்த வாரம் எழுதுகிறேன் !

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்