Thursday, May 8, 2014

சிப்ஸ் மட்டுமே சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிரும் பெண்

சிப்ஸ் மட்டுமே சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிரும் பெண்


குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான, ´சிப்ஸ்´ வகைகளை தொடர்ந்து சாப்பிட்டால், உடல் நலம் பாதிக்கப்படும் என, பெற்றோர் எச்சரிப்பர்.

ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 15 ஆண்டுகளாக, சிப்ஸ் வகைகளை மட்டுமே சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.

இங்கிலாந்தில் வசிப்பவர், ஹைனா 20. இவரின், 5வது வயதில், வினோத நோய் ஏற்பட்டது. எந்த உணவானாலும் இவர் உடல்நலம் பாதிக்கப்படும்.

இதன் காரணமாக, 5 வயதில் இருந்து, இப்போது வரை சிப்சை மட்டும் சாப்பிட்டு வருகிறார். இவரை பரிசோதித்த டாக்டர்கள், ´செலக்டிவ் ஈட்டிங் டிஸ்ஆர்டர்´ என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரே மாதிரியான உணவை உட்கொள்வர் என்றும், வேறு உணவைக் கண்டால், இவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் கூறினர்.

இதையடுத்து சமீபத்தில், மனநல ஆலோசகர் பெலிக்ஸ் எகனாமிக்ஸ் என்பவர், ஹைனாவை, ´ஹிப்னாட்டிசம்´ எனப்படும் மன மயக்கத்தில் ஆழ்த்தி, அவர் மனநிலையை மாற்றி, பீட்சா உணவை சாப்பிட வைத்தார். சிப்சை தவிர்த்து, வேறு உணவை சாப்பிட்டு அறியாத ஹைனா, இன்னும் ஆரோக்கியமாக உள்ளார் என்பது அனைவருக்கும் ஆச்சர்யமான விஷயம்.

குறுஞ்செய்தி அனுப்பியதற்கு மரணதண்டனையா !!!

குறுஞ்செய்தி அனுப்பியதற்கு மரணதண்டனையா  !!!


பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்துவ தம்பதிகள் நபிகள் நாயகத்தை அவமதித்து எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு பாகிஸ்தான் கோர்ட் மரண தண்டனை அளித்துள்ளது.


பாகிஸ்தானில் உள்ள கோஜ்ரா என்ற நகரில் வசித்து வரும் இமானுவே-ஷகுப்டா கவுசர் என்ற தம்பதியினர் மீது அதே நகரில் உள்ள மசூதி ஒன்றின் தலைவர் மெளல்வி முகமது ஹூசை என்பவர் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதில் இந்த தம்பதியினர் தங்களது செல்போனில் இருந்து நபிகள் நாயகத்தை அவமதிக்கும்படியான ஒரு எஸ்.எம்.எஸ் ஐ தனது செல்போனுக்கு அவர்கள் அனுப்பியதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதை தம்பதிகள் இருவரும் மறுத்தனர். தங்கள் செல்போன் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொலைந்துவிட்டதாகவும், தங்களுக்கு வேண்டாத சிலர், தங்களது மொபைல்போன் மூலம் தவறான எஸ்.எம்.எஸை அனுப்பி தங்களை சிக்கலில் மாட்டிவிட்டிருப்பதாகவும் வாதாடினர்.

ஆனால் பாகிஸ்தான் கோர்ட் நேற்று அளித்த தீர்ப்பில் இருவருக்கும் மரணதண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை அளித்த நீதிபதி மியான் அமீர் ஹபீப், ‘நபிகள் நாயகத்தை அவமதிப்பவர்களை மன்னிக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தம்பதியினர் மேல்முறையீடு செய்யவிருப்பதாக கூறியுள்ளனர்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு..!!

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு..!!


மேற்கு வங்காள மாநிலம், மிட்னப்பூர் மாவட்டத்தில் கலைகுண்டா ராணுவ விமானதளம் உள்ளது. இதன் அருகே உள்ள மவுலிஷோல் கிராமத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் விளக்கு கம்பம் நடுவதற்காக ஊழியர்கள் பள்ளம் தோண்டினர்.


சுமார் 3 அடி ஆழம் தோண்டிய போது, கடப்பாரை ஏதோ ஒரு உலோகத்தின் மீது மோதுவதை உணர்ந்த ஊழியர்கள், மண்ணை கையினால் அகற்றிப் பார்த்து, திகைப்படைந்ததனர்.

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட 450 கிலோ எடையுள்ள வெடிகுண்டு 4 அடி நீளத்தில் கம்பீரமாக வீற்றிருந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அந்த வெடி குண்டினை கைப்பற்றி பத்திரமாக கொண்டு சென்றனர்.

1933-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த வெடிகுண்டை அருகாமையில் உள்ள துத்குன்டி காட்டில் செயலிழக்க வைக்கும் முயறசியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்