Thursday, May 8, 2014

குறுஞ்செய்தி அனுப்பியதற்கு மரணதண்டனையா !!!

குறுஞ்செய்தி அனுப்பியதற்கு மரணதண்டனையா  !!!


பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்துவ தம்பதிகள் நபிகள் நாயகத்தை அவமதித்து எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு பாகிஸ்தான் கோர்ட் மரண தண்டனை அளித்துள்ளது.


பாகிஸ்தானில் உள்ள கோஜ்ரா என்ற நகரில் வசித்து வரும் இமானுவே-ஷகுப்டா கவுசர் என்ற தம்பதியினர் மீது அதே நகரில் உள்ள மசூதி ஒன்றின் தலைவர் மெளல்வி முகமது ஹூசை என்பவர் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதில் இந்த தம்பதியினர் தங்களது செல்போனில் இருந்து நபிகள் நாயகத்தை அவமதிக்கும்படியான ஒரு எஸ்.எம்.எஸ் ஐ தனது செல்போனுக்கு அவர்கள் அனுப்பியதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதை தம்பதிகள் இருவரும் மறுத்தனர். தங்கள் செல்போன் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொலைந்துவிட்டதாகவும், தங்களுக்கு வேண்டாத சிலர், தங்களது மொபைல்போன் மூலம் தவறான எஸ்.எம்.எஸை அனுப்பி தங்களை சிக்கலில் மாட்டிவிட்டிருப்பதாகவும் வாதாடினர்.

ஆனால் பாகிஸ்தான் கோர்ட் நேற்று அளித்த தீர்ப்பில் இருவருக்கும் மரணதண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை அளித்த நீதிபதி மியான் அமீர் ஹபீப், ‘நபிகள் நாயகத்தை அவமதிப்பவர்களை மன்னிக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தம்பதியினர் மேல்முறையீடு செய்யவிருப்பதாக கூறியுள்ளனர்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்