Saturday, September 28, 2013

விம் ஹாஃப் [Wim Hof] – பனிகட்டி மனிதன் [ICEMAN]

விம் ஹாஃப் [Wim Hof] – பனிகட்டி மனிதன் [ICEMAN]

48 வயதான டச்மேன்[Dutchman] விம் ஹாஃப் என்பவருக்கு சாதாரண மனிதனை விட அதிக குளிரை தாங்க கூடிய சக்தி உள்ளது . இவர் இது வரை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் .

உறைந்த ஏரிகளில் , பனிக்கட்டிக்கு அடியில் நீந்தியுள்ளார் , ஐஸ் கட்டிகள் நிறைந்த பேழைகளில் மூழ்கியபடி இருந்துள்ளார் , பனிபடர்ந்த மலைகளில் வெறும் அரைக்கால் சட்டையுடன் ஏறியுள்ளார் !

இப்படி பல சாதனைகளை படைத்துள்ளார் ! உலக சாதனைகள் பலவற்றிற்கும் இவர் சொந்தகாரர் !

சாதாரண மனிதனை எளிதில் கொள்ள கூடிய கடுங்குளிரில் கூட இவருக்கு எந்த விதமான பாதிப்பும் வராது !

எதனால் இவருக்கு இப்படி குளிரை எதிர்கொள்ள முடிகிறது என்பதை எந்த மருத்துவராலும் , விஞ்ஞானியாலும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை !




Monday, September 9, 2013

இந்திய வெண்மை புரட்சியின் வரலாறு !

வெண்மைப் புரட்சியின் நாயகர் குரியன் வர்கீஸ் 
"பால்காரர்' காட்டிய பாதை...



இந்தியா விடுதலையடைவதற்கு சற்று முந்தைய காலகட்டம். குஜராத் மாநிலத்தில் கெய்ரா மாவட்டம் 1940-களின் முற்பகுதிவரை வெளியுலகத்துக்குத் தெரியாத பகுதி.

விவசாயமே தொழில். அப்பகுதியில் "ஆனந்த்' என்று ஓர் ஊர். பிற கிராமங்களைப்போல் ஆனந்திலும் பெரும்பாலான விவசாயிகள் ஓரிரு பசு அல்லது எருமை வளர்த்து, பால் விற்று, சிரம வாழ்க்கை நடத்தி வந்தனர்.

"பால்சன்' என்கிற தனியார் பால் நிறுவனம் அப்போது மிகப் பிரசித்தம். விவசாயிகளிடம் குறைந்த விலைக்குப் பால் வாங்கி கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்தார்கள். இவர்களைவிட்டால் விவசாயிகளுக்கு வேறு வழி இல்லை.

வாயுத் தொல்லைக்கு ஏற்ற அருமருந்து வெள்ளைப் பூண்டு !

வாயுத் தொல்லை என்பது பொதுவாக 35 வயதைக் கடந்த அனைத்து தரப்பினருக்குமே இருக்கக்கூடிய ஒரு இன்னல் எனலாம்.

ஒரு சிலருக்கு சிறிய அளவு உருளைக்கிழங்கை சாப்பிட்டாலே இந்த வாயுத் தொல்லை ஏற்படும். வேறு சிலருக்கு பருப்பு மற்றும் அவற்றில் செய்யப்படும் பதார்த்தங்களில்வாயுத் தொந்தரவு உருவாகும்.

வாயுத் தொல்லைக்கு ஏற்ற அருமருந்து வெள்ளைப் பூண்டு.

முடிந்தால் அப்படியே 4 பல் பூண்டை தோலுரித்து சாப்பிடலாம் அல்லது அடுப்பில் வைத்து கருகும் அளவுக்கு சுட்டு, பின்னர் அதன் தோலை உரித்து பாலுடன் சேர்த்து உண்ணலாம்.

வாயுத்தொல்லை இருப்பவர்கள் பூண்டு சாப்பிட்ட உடனேயே அதில் இருந்து விடுபட்டதை உணரமுடியும். வேண்டுமானால் பூண்டு காரம் போக, மோர் அருந்தலாம்.

பொதுவாக உணவுக்குப் பயன்படுத்தும் குழம்பில் வெள்ளைப்பூண்டை அன்றாடம் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

பெண்கள் குழந்தை பெற்ற பின் அதிகளவு சோர்வு இருக்கும் என்பதால், வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் பூண்டு குழம்பை சாதத்துடன் கொடுப்பார்கள். தவிர தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பூண்டு மிகவும் சிறந்ததாகும்.

எனவே பூண்டை அன்றாடம் சிறிதளவாவது சேர்த்துக் கொள்ளப் பாருங்கள்.


Sunday, September 8, 2013

கிளி வாங்கி குடுத்த விவாகரத்து [Divorce] !


ஒரு வெளிநாட்டில் 2௦௦6 ஆம் ஆண்டு ஒரு விசித்திர வழக்கு நடந்தது . ஒரு பெண்மணி தன் கணவரின் நடத்தை சரி இல்லாததால் விவாகரத்து வேண்டும் என்று கோரி இருந்தார் . ரொம்ப நாளாக இந்த விவாகரத்து வழக்கு சரியான சாட்சி இல்லாமல் இழுத்து கொண்டு போனது . திடீர் என்று ஒரு நாள் அவர்கள் வீட்டில் இருந்த கிளியை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர் . கிளியை சாட்சியாக ஏற்று கொள்ள வேண்டும் என்று அந்த பெண்மணி கூறினார்.

சரி என்னதான் நடக்கிறது பாப்போம் என்று நீதிபதியும் ஒப்பு கொண்டார் . கிளியை தொடர்ந்து கவனித்ததில் மூன்று பெண்களின் பெயரை திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தது ! அந்த மூவரின் படங்களை காட்டிய பொழுது சரியாக பெயரை கூறியது !

அந்த மூன்று பெண்களும் தான் அந்த கணவருடைய கள்ள காதலிகள் ! இவற்றை விசாரித்த நீதிபதி , அந்த பெண்மணிக்கு விவகாரத்து அளித்து தீர்ப்பு வழங்கினார் !

ஒரு கிளியின் வாக்கு மூலத்தை ஏற்று தீர்ப்பு வழங்கியது இதுவே முதல் முறை ஆகும் !!!


#என்ன ஒரு விசித்திர உலகமடா !

விதியின் விளையாட்டா அல்லது அமானுஷ்ய நிகழ்வா ?

விதியின் விளையாட்டா அல்லது அமானுஷ்ய நிகழ்வா ?

1975 ஆம் ஆண்டு 17 வயது இளைஞன் ஒருவன் அவனின் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு சாலை சந்திப்பில் டாக்ஸி மோதி விபத்தில் இறந்து விட்டான் . இதில் என்ன அமானுஷ்ய நிகழ்வு இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது !

சரியாக ஒரு வருடம் முன்பு அவனது மூத்த அண்ணன் 17 ஆம் வயதில் அதே சாலை சந்திப்பில் இந்த மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது அதே டாக்ஸியில் அதே டிரைவர் ஓட்டும் போது மோதி விபத்தில் சிக்கி இறந்தான். மேலும் அதில் பயணித்த பயணியும் அதே பழைய பயணிதான் !

இது ஒரு தற்செயல் நிகழ்வாக கூட இருக்கலாம் , அல்லது நாம் இது வரை புரிந்து கொண்டிராத நமது மூளைக்கும் அறிவியலுக்கும் இது வரை எட்டிடாத ஒன்றாகவும் இருக்கலாம் !


♥ உங்களது கருத்துக்களை கீழே பதியவும் ♥

நடுகடலில் மாயமாய் போன மனிதர்கள் !

நடுகடலில் மாயமாய் போன மனிதர்கள் !

2௦௦7 ஆம் ஆண்டு , ஆஸ்திரேலியா நாட்டு கடற்கரையோரத்தில் ஆளில்லாத படகு [Yacht] ஒன்று மிதந்து கொண்டிருந்தது . அதனுடைய என்ஜின் ஓடிகொண்டிருந்தது , லேப்டாப் இயங்கி கொண்டிருந்தது , ரேடியோ மற்றும் GPS கருவிகளும் நன்றாக வேலை செய்து கொண்டிருந்தது , உணவும் தாயார் செய்யப்பட்ட நிலையில் இருந்தது , ஆனால் அந்த கப்பலில் இருந்த மூன்று நபர்களை மட்டும் காணவில்லை !

கடலோர ரோந்து படையினர் அந்த படகை இழுத்து கொண்டு வந்து அதை முழுவதும் ஆராய்ந்து பார்த்தனர் ஆனால் எந்த விதமான தடயங்களும் கிடைக்கவில்லை !

இன்று வரை அந்த மூன்று நபர்களும் எப்படி மாயமாக போயினர் என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறது !




உலகத்தில் மிகவும் அதிர்ஷ்டம் கொண்ட மனிதர் !

ஃபிரானோ செலக் [Frano Selak] – உலகத்தில் மிகவும் அதிர்ஷ்டம் கொண்ட மனிதர்

இது வரை இவர் தப்பித்து பிழைத்த விபத்துகள் :
  1.        விமான விபத்து
  2.        ரயில் விபத்து
  3.        எரியும் காரில் இருந்து தப்பினார்
  4.        இரண்டு கார் மோதலில் இருந்து தப்பினார்

இதுவரை இந்த விபத்துகளில் இவருக்கு ஒரு சிறு காயம் கூட ஏற்படவில்லை !
இவற்றிற்கும் மேலாக இவருக்கு ஒரு மில்லியன் டாலர் லாட்டரி மூலம் கிடைத்தது !!!

இப்ப சொல்லுங்க இவருக்கு அதிஷ்டம் இருக்கா , இல்லையா ! ஹி ஹி :)  



Saturday, September 7, 2013

திருக்கை மீன்[StingRay] பற்றிய சில அறிய தகவல்கள்


  • பெரும்பாலும் பிரவுன் அல்லது சாம்பல் நிறமாக இருக்கும்
  • 5 அடி முதல் 17 அடி வரை வளரக்கூடியது
  • 6௦௦ கிலோ எடை வரை இருக்கும்
  • கடலிலும் ,ஆற்றிலும் , கடலும் ஆறும் கலக்கும் இடம் என அனைத்து இடங்களிலும் வாழக்கூடிய ஆற்றல் உடையது
  • கண்கள் தலையின் மேலிலும், வாய் தலைக்கு கீழேயும் இருக்கும்
  • இவைகள் மாமிச உண்ணிகள்.
  • இரவு நேரங்களில் வேட்டையாடும்.
  • சிறு மீன்கள், சிப்பிகள் மற்றும் நண்டுகள் தான் இவையின் விருப்ப உணவு
  • ஆயள் காலம் : 15 முதல் 25 வரை.
  • சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் இவை ருசியான உணவாக உபயோகிக்கப்படுகிறது.
  • திருக்கை மீன்களின் தோல் ஜப்பான் நாட்டில் மிகவும் மதிப்புடையது.

பெரியாரும் திருநீறு சம்படமும் !

பெரியாரும் திருநீறு சம்படமும் ! 

பெரியாரின் அன்புக்கு பாத்திரமான நண்பர்களில் ஒருவர் 'தமிழ் தென்றல்' திரு.வி.கல்யாண சுந்தரானார்.

ஒருமுறை பெரியாரின் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார் திரு.வி.க.. இரவு நீண்ட நேரம் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர். மறுநாள் காலை திரு.வி.க. எழுந்து குளித்து, உடை மாற்றி அவரது அறையிலிருந்து வெளியே வந்தபோது, அவரது முன்பு திருநீற்று சம்படத்தை நீட்டியபடி நின்றிருந்தார் பெரியார்.

இதை சற்றும் எதிர்பாராத திருவிக. ஆச்சரியத்தின் விளிம்புக்கே போய்விட்டார்.

“கடவுள் நம்பிக்கை இல்லாதவர் நீங்கள். உங்கள் வீட்டில் திருநீறு சம்படமா...?” என்று திகைப்பு மாறாமல் கேட்டார் திரு.வி.க.

அதற்கு பெரியார் அளித்த பவ்யமான பதில் இதுதான். “நான்தான் கடவுளை நம்பாதவன்தான். ஆனால் எனது நண்பரான தாங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவராயிற்றே. எனது விருந்தாளியாக வந்திருக்குக்ம் உங்களது தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது எனது கடமை.




மைக்கேல் ஜாக்சன் பற்றிய சில சுவையான தகவல்கள்

மைக்கேல் ஜாக்சன் பற்றிய சில சுவையான தகவல்கள்
  1. அவர் இரண்டு லாமா வளர்த்தார் , அவற்றின் பெயர் லூயிஸ் மற்றும் லோலா.
  2. அவரின் த்ரில்லர் ஆல்பம் தொடர்ந்து 37 வாரங்கள் US Billboardல் இடம் பெற்றது.
  3. அவருடைய முதல் பொது  இசை அரங்கேற்றம் அவருடைய ஐந்தாம் வயதில் நடை பெற்றது.
  4. அவருக்கு மொத்தம் எட்டு உடன் பிறந்தோர் உள்ளனர்.
  5. அவரின் த்ரில்லர் ஆல்பம் தான் இது வரை உலகில் அதிகம் விற்பனை ஆன இசை ஆல்பம் , இது வரை 5 கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகி விட்டது !
  6. மூன் வாக்[Moonwalk] மற்றும் ரோபாட்[ROBOT] நடன அசைவுகள் மைக்கேல் ஜாக்சன் அறிமுகப்படுத்தி  பிரபலமானவை !
  7. இது வரை 13 கிராமி[Grammy] விருதுகள் பெற்றுள்ளார்
  8. ஜாக்சன் சைவ உணவுகளை மட்டுமே உண்பார் .
  9. MoonWalk – மைக்கேல் ஜாக்சனின் சுய சரிதை புத்தகம் நான்கு வருடங்களில் எழுதி முடிக்க பட்டது .
  10. மெக்சிகன் உணவு வகை அவருக்கு மிகவும் பிடித்தது .

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்