Tuesday, November 26, 2013

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு !

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு !


வயிறு தொப்பையாக இல்லாமல், சுருங்கி.. அதாவது ஒட்டி இருத்தல் பெண்களுக்கு அழகு என்பதாகத்தான், இதன் பொருளை எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இதன் உண்மைப் பொருள் :-

உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு. 



நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம்

நாயைக் கண்டால் கல்லைக் காணோம் 
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் !

நாயைக் கண்டால் அடிப்பதற்குக் கல்லைக் காணவில்லை. கல் இருக்கும் போது நாய் அங்கு இல்லை என்பது போலத்தான் பொருள் கொண்டு இப் பழமொழி தற்போது பிரயோகிக்கப்படுகிறது. 

இதன் உண்மைப் பொருள் !

பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி... சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின.. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம் எப்படி? என்று. 



அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் 
நாயைக் கண்டால் கல்லைக் காணோம் 
கல்லைக் கண்டால் நாயைக் காணோம். 
என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை. 

இது மனிதரின் பார்வையில்தான் ஒவ்வொன்றும் என்பதைக் குறிக்கிறது !


தண்ணீர் என்றால் ஒவ்வாமை [அலர்ஜி] !

தண்ணீர் என்றால் ஒவ்வாமை [அலர்ஜி] !


ஆஷ்லே மொரிஸ் [Ashleigh Morris] என்கின்ற 19 வயது இளம் பெண்ணிற்கு தண்ணீர் என்றாலே ஒத்துக் கொள்ளது ! ஆமாம், இந்த இளம்பெண் எல்லாரையும் போல் நீச்சல் அடிக்கமுடியாது , வெந்நீர் குளியல் எடுக்க முடியாது , உற்சாகம் அடைய ஷவர் நீரில் குளிக்க முடியாது , இவ்வளவு ஏன் , கொஞ்சம் அதிகமாக வியர்வை வந்தாலும் கூட பிரச்சனைதான் !

சிறிதளவு தண்ணீரோ வியர்வையோ பட்டால் கூட சருமத்தில் சொறி சிரங்கு[Rashes] வந்தது போல் ஆகி விடும் ! என்ன ஒரு வினோதமான அதே சமயம் கொடூரமான வியாதி இது ! பாவம் இந்த பேதை ! 



விலங்குகளை கல்லாக மாற்றும் ஆபத்தான ஏரி !

விலங்குகளை கல்லாக மாற்றும் ஆபத்தான ஏரி !

எந்த விலங்கு இந்த ஏரியின் நீரை பயன் படுத்தினாலும் அது கல்லாக மாறிவிடும் ! ஆம் , உண்மைதான் !

டான்சானியாயாவில் உள்ள நேட்றான் ஏரிதான் அது [Lake Natron, Tanzania]


மிகவும் ஆபத்தானது :

பார்ப்பதற்கு மிகவும் அமைதியாக இருக்கும் இந்த ஏரி கொடிய ஆபத்தை தன்னுள் மறைத்து வைத்துள்ளது . அழகிருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்பது இந்த ஏரியின்  விசயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை.

உண்மை என்ன ?

இந்த அபூர்வ விசயத்திற்கு முக்கிய காரணம் அந்த ஏரியியில் இயற்கையாக உள்ள ரசாயன கலவைதான் !

ரசாயன மாற்றம் :


இந்த ஏரியில் எப்பொழுதும் நீரின் pH லெவல் 9 முதல் 1௦.5 [அதிகப்படியான basic alkalinity] ஆக இருக்கும் . எனவே தான் இந்த ஏரியில் விழும் அனைத்தும் எகிப்திய  மம்மி போல  பாதுகாக்கப்பட்டு விடுகிறது ! அது கல்லாக மாறிய தோற்றத்தை குடுக்கின்றது ! 


7 புலிகளுடன் வாழும் பிரேசில் நாட்டு குடும்பம் !

7 புலிகளுடன் வாழும் பிரேசில் நாட்டு குடும்பம் !

Brazilian Family Lives with 7 Tigers
அறிய வகை விலங்குகளை வளர்ப்பு பிராணியாக வளர்ப்பது என்பது இப்பொழுது பரவி வரும் ஒரு வழக்கமாக மாறி வருகிறது !

ஆனால் , பிரேசில் நாட்டைச்சேர்ந்த இந்த குடும்பமோ எல்லா வரைமுறைகளையும் தகர்த்து எறிந்து, ஏழு புலிகளை தங்களது செல்ல பிராணியாக வளர்த்து வருகின்றனர் !

போர்கஸ் குடும்பம் இந்த கொடூர மிருகங்களை சர்வ சாதரணமாக கையாண்டு வருகின்றனர் ! ஒரு சர்க்கஸ் குழுவில் மிகவும் பரிதாப நிலையில் இருந்த புலிகளை கண்ட  ஆர்யா போர்கஸ் இந்த முடிவிற்கு வந்துள்ளார் !

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்