Sunday, September 3, 2017

போலி மருத்துவரை கண்டுப்பிடிப்பது எப்படி ?

பரிந்துரைச் சீட்டு தரமாட்டார். பரிந்துரைச் சீட்டு கொடுத்தால் தான் மாட்டிக் கொள்வோம் என்பதை அவர் அறிவார்.


பெரும்பாலும் கிளினிக்கின் முன் பெயர் பலகை இருக்காது. மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த எண்ணும் இருக்காது.

அவரை சந்திக்கும் போது , நோயாளியின் அறிகுறிகளுக்கே முக்கியம் தருவார். நோயின் தன்மை பற்றி பேசமாட்டார். 

எத்தனை முறை சென்றாலும் ஒரு ஊசி போடுவார். நோயாளி கேட்டால் ஐ.வி திரவம் போடுவார்.நோயாளியின் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் சிகிச்சையில் வளைந்து கொடுப்பார்.

மீண்டும் தன்னை எப்போது சந்திக்க வேண்டும் என்று கூறமாட்டார். நோய் குணமாக எத்தனை நாள் ஆகும். ஒரு மருந்து கடை  நிச்சயம் கூட இருக்கும்.

பின்குறிப்பு : நோயாளிகள் பல பேர் தாங்கள் போலி மருத்துவரிடம் தான் செல்கிறோம் என்று அறிந்தே செல்கின்றனர். இந்தப் பதிவு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று விரும்புவோருக்காக மட்டும்.

உங்கள் ஊர்களில் வசிக்கும் இடங்களில் போலி மருத்துவர்கள் இருப்பின் தங்கள் மாவட்டத்தில் உள்ள இணை இயக்குநர், சுகாதார மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் புகார் அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்