Sunday, January 6, 2013

கதவுகளே இல்லாத கிராமம் - புரியாத புதிர் !!!

ஷானி ஷிங்னபூர் [Shani Shingnapur] - மகாராஷ்டிராவில் உள்ள  ஒரு சிறிய கிராமம் . ஷிர்டியில் [Shirdi] இருந்து 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கிராமம் .  
இந்த கிராமத்தில் எந்த ஒரு வீட்டிற்க்கும் கதவுகள் கிடையாது . கதவு வைக்க பிரேம்கள் இருக்கும் ஆனால் கதவு இருக்காது !!!. மேலும் மக்கள் எவரும் தங்களது பொக்கிஷங்களையும் விலைமதிப்புமிக்க பொருட்களையும் பூட்டி வைப்பது கிடையாது . அந்த கிராமத்தின் கடவுள் "ஷானி" அவற்றை பாதுகாப்பார் என்று நம்பிக்கை வைத்துள்ளனர் . அதையும் மீறி திருடுபவர்களை கடவுள் கடுமையாக தண்டிப்பார் என்று நம்புகின்றனர் ! 

இந்த கிராமத்தில் இது வரை எந்த பொருளும் திருடு போனதில்லை . அப்படியே ஏதேனும் களவு போனால் , அடுத்த நாளே அது மாயமாக வீடு வந்த சேருமாம் !!!

'Earphone' கலாச்சாரம்!


எப்படி தொத்திக் கொண்டதோ தெரியவில்லை,ஆனால் இன்று பெருநகரங்களில் வாழும் அநேக இந்திய இளைஞர்களை ஆட்கொண்டிருக்கிறது இந்த earphone மோகம் ! நெரிசல் மிகுந்த சாலையில் தங்கள் மோட்டார் வாகனங்களை செலுத்தும் போதும், காலைப் பொழுதில் அலுவலங்களை நோக்கி அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போதும் earphone-ஐ காதில் மாட்டிக்கொண்டு தங்களுக்கென ஒரு தனி உலகத்தை படைத்து கொண்டு நடை போட தொடங்கி விட்டது இன்றைய இளைய சமுதாயம்.



முன்பெல்லாம் பேருந்தில் பயணிக்கும் போது பக்கத்தில் அமர்ந்து வரும் பயணியிடம் இரண்டொரு வார்த்தை பேசி புன்னகைத்து ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்து சுற்றி நடக்கும் விஷயங்களை வாயாலும் மனதாலும் அசைபோட்டு கொண்டு செல்வது நம்மூர் வாசிகளுக்கு வழக்கம். ஆனால் இன்றோ நாம் நகரப்பேருந்தில் ஏறிய மறுகணமே 'சுவிட்ச்' போட்ட இயந்திரம் போல் காதில் இந்தக் கருவியை மாட்டிக்கொண்டு அறிவுப்புலன்களை மூடிக்கொள்கிறோமோ என்ற ஐயம் எனக்கு! Earphone மாட்டிக்கொண்டு படுத்தால்தான் இரவுநேரங்களில் உறக்கமே வருவதாக கூறுகின்றனர் சில அன்பர்கள் !

பெருகி வரும் இந்த earphone கலாச்சாரம் ஆரோக்கியமானதா? தவிர்க்க முடியாத ஒன்றா? இதன் 'கிரியாஊக்கிகள்'(catalysts) என்னனென்ன? காரண காரியங்கள் (cause and effect ) என்னனென்ன? ஒரு குட்டி 'நீயா நானா'விற்கு உங்கள் அனைவரையும் வாயாட அழைக்கிறேன்! பணிவோடு...அன்போடு...ஆவலோடு ! கருத்துக்கள் பரிமாறப்படட்டும்!

மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் - 'Earphone' 'switch' இந்த இரண்டு ஆங்கில சொற்களுக்கும் சரியான தமிழ் வார்த்தை தெரிந்தால் எனக்கும் சொல்லி கொடுங்களேன்!

நன்றி : பூபேஷ்குமார் 

புரியாத புதிர் - லடாக்கில் உள்ள காந்த மலை

கடந்த சில தசாப்தங்களில்(Decades), மனிதன் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளான் . வெல்ல முடியாது என்று நினைத்து இருந்த பலவற்றையும் வென்று காட்டியுள்ளான் மனிதன் . இருந்தாலும், மனித மூளைக்கு அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன . அவற்றில் ஒன்றுதான் , லடாக்கில் உள்ள காந்தமலை .


காஷ்மீர் பகுதியில்  அமைந்துள்ளது இந்த இடம் . இந்த பகுதியில் ரோட்டில் ஒரு கட்டம் வரையப்பட்டிருக்கும் , அந்த கட்டத்தின் உள்ளே உங்களின் நான்கு சக்கர வாகனத்தை நியூட்ரல் கியரில்  நிறுத்தி விட்டு ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருங்கள் . உங்களின் கண் முன்னே ஒரு ஆச்சர்யம் நடக்கும் :) . விதிப்படி பார்த்தல் இறக்கத்தில் இருக்கும் வண்டி பின்னோக்கி நகர வேண்டும் , ஆனால் உங்களது வண்டியானது முன்னோக்கி மேட்டில் 10-20 kmph வேகத்தில்  நகரும் !!! 

உங்களின் வண்டியின் எடையை பொருத்து அதன் வேகமும் இருக்கும் . கார்கள் மட்டும் அல்ல , இந்த இடத்தை கடந்து செல்லும் விமானங்களும் இந்த மலையை நோக்கி இழுக்கப்படும் . சில ஆய்வாளர்கள் , இந்த நிகழ்வுகளை , பூமியில் இருந்து வரும்  சக்தி வாய்ந்த மின்காந்த ஈர்ப்பினால் ஏற்படுகின்றன என்று கூறுகின்றனர் . மற்றவர்கள் , இது ஒரு ஒளியியல் மாயை (Optical Illusionஎன்றும் கூறுகின்றனர் .

எது எப்படியோ , இந்த வினோத நிகழ்வு , இன்னும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது !!!

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்