வெண்மைப் புரட்சியின் நாயகர் குரியன் வர்கீஸ்
"பால்காரர்' காட்டிய பாதை...
இந்தியா
விடுதலையடைவதற்கு சற்று முந்தைய காலகட்டம். குஜராத் மாநிலத்தில் கெய்ரா மாவட்டம் 1940-களின்
முற்பகுதிவரை வெளியுலகத்துக்குத் தெரியாத பகுதி.
விவசாயமே தொழில்.
அப்பகுதியில் "ஆனந்த்' என்று ஓர் ஊர். பிற கிராமங்களைப்போல்
ஆனந்திலும் பெரும்பாலான விவசாயிகள் ஓரிரு பசு அல்லது எருமை வளர்த்து,
பால் விற்று,
சிரம வாழ்க்கை
நடத்தி வந்தனர்.
"பால்சன்' என்கிற தனியார்
பால் நிறுவனம் அப்போது மிகப் பிரசித்தம். விவசாயிகளிடம்
குறைந்த விலைக்குப் பால் வாங்கி கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்தார்கள்.
இவர்களைவிட்டால் விவசாயிகளுக்கு வேறு வழி இல்லை.