Thursday, May 8, 2014

சிப்ஸ் மட்டுமே சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிரும் பெண்

சிப்ஸ் மட்டுமே சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிரும் பெண்


குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான, ´சிப்ஸ்´ வகைகளை தொடர்ந்து சாப்பிட்டால், உடல் நலம் பாதிக்கப்படும் என, பெற்றோர் எச்சரிப்பர்.

ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 15 ஆண்டுகளாக, சிப்ஸ் வகைகளை மட்டுமே சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்.

இங்கிலாந்தில் வசிப்பவர், ஹைனா 20. இவரின், 5வது வயதில், வினோத நோய் ஏற்பட்டது. எந்த உணவானாலும் இவர் உடல்நலம் பாதிக்கப்படும்.

இதன் காரணமாக, 5 வயதில் இருந்து, இப்போது வரை சிப்சை மட்டும் சாப்பிட்டு வருகிறார். இவரை பரிசோதித்த டாக்டர்கள், ´செலக்டிவ் ஈட்டிங் டிஸ்ஆர்டர்´ என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரே மாதிரியான உணவை உட்கொள்வர் என்றும், வேறு உணவைக் கண்டால், இவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் கூறினர்.

இதையடுத்து சமீபத்தில், மனநல ஆலோசகர் பெலிக்ஸ் எகனாமிக்ஸ் என்பவர், ஹைனாவை, ´ஹிப்னாட்டிசம்´ எனப்படும் மன மயக்கத்தில் ஆழ்த்தி, அவர் மனநிலையை மாற்றி, பீட்சா உணவை சாப்பிட வைத்தார். சிப்சை தவிர்த்து, வேறு உணவை சாப்பிட்டு அறியாத ஹைனா, இன்னும் ஆரோக்கியமாக உள்ளார் என்பது அனைவருக்கும் ஆச்சர்யமான விஷயம்.

குறுஞ்செய்தி அனுப்பியதற்கு மரணதண்டனையா !!!

குறுஞ்செய்தி அனுப்பியதற்கு மரணதண்டனையா  !!!


பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்துவ தம்பதிகள் நபிகள் நாயகத்தை அவமதித்து எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு பாகிஸ்தான் கோர்ட் மரண தண்டனை அளித்துள்ளது.


பாகிஸ்தானில் உள்ள கோஜ்ரா என்ற நகரில் வசித்து வரும் இமானுவே-ஷகுப்டா கவுசர் என்ற தம்பதியினர் மீது அதே நகரில் உள்ள மசூதி ஒன்றின் தலைவர் மெளல்வி முகமது ஹூசை என்பவர் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதில் இந்த தம்பதியினர் தங்களது செல்போனில் இருந்து நபிகள் நாயகத்தை அவமதிக்கும்படியான ஒரு எஸ்.எம்.எஸ் ஐ தனது செல்போனுக்கு அவர்கள் அனுப்பியதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதை தம்பதிகள் இருவரும் மறுத்தனர். தங்கள் செல்போன் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொலைந்துவிட்டதாகவும், தங்களுக்கு வேண்டாத சிலர், தங்களது மொபைல்போன் மூலம் தவறான எஸ்.எம்.எஸை அனுப்பி தங்களை சிக்கலில் மாட்டிவிட்டிருப்பதாகவும் வாதாடினர்.

ஆனால் பாகிஸ்தான் கோர்ட் நேற்று அளித்த தீர்ப்பில் இருவருக்கும் மரணதண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை அளித்த நீதிபதி மியான் அமீர் ஹபீப், ‘நபிகள் நாயகத்தை அவமதிப்பவர்களை மன்னிக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தம்பதியினர் மேல்முறையீடு செய்யவிருப்பதாக கூறியுள்ளனர்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு..!!

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு..!!


மேற்கு வங்காள மாநிலம், மிட்னப்பூர் மாவட்டத்தில் கலைகுண்டா ராணுவ விமானதளம் உள்ளது. இதன் அருகே உள்ள மவுலிஷோல் கிராமத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் விளக்கு கம்பம் நடுவதற்காக ஊழியர்கள் பள்ளம் தோண்டினர்.


சுமார் 3 அடி ஆழம் தோண்டிய போது, கடப்பாரை ஏதோ ஒரு உலோகத்தின் மீது மோதுவதை உணர்ந்த ஊழியர்கள், மண்ணை கையினால் அகற்றிப் பார்த்து, திகைப்படைந்ததனர்.

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட 450 கிலோ எடையுள்ள வெடிகுண்டு 4 அடி நீளத்தில் கம்பீரமாக வீற்றிருந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அந்த வெடி குண்டினை கைப்பற்றி பத்திரமாக கொண்டு சென்றனர்.

1933-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த வெடிகுண்டை அருகாமையில் உள்ள துத்குன்டி காட்டில் செயலிழக்க வைக்கும் முயறசியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Monday, May 5, 2014

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?


ஆண்களுக்கு பேயாடத் தெரியாதா? அல்லது பேய் வராதா? அல்லது பெண்களை மட்டும்தான் பேய் பிடிக்குமா? அல்லது ஆண்களுக்கு பேய் பிடித்தாலும் அமைதியாக இருப்பார்களா? ஆண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறு, பெண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறா?

இன்னும் என்னென்ன கேள்விகள்.. இவையனைத்தையும் மீறி படிப்போரின் மனதில் இன்னும் புதிய கேள்விகள் அடுக்கடுக்காக எழத்தான் செய்கின்றன!

அது சரி, உங்களிடம் ஒரு சின்ன கேள்வி! ஸ்வீட் சாப்பிட்டு பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எல்லோருக்கும் ஸ்வீட் என்றால் இனிப்பு என்று தெரியும். இனிப்பு தெரியும் என்றால் இனிப்பை உங்களால் காட்ட முடியுமா?

சர்க்கரையை காட்டுவீர்கள்.. அதன் பெயர் சர்க்கரைதான்! லட்டை காட்டினால் அதன் பெயர் லட்டுதான்!

பின்பு இனிப்பு ஏங்கே?

இந்த சின்ன கேள்விக்கே பதில் இல்லை இது அன்றாடம் நம் வாழ்வில் அனுபவிக்கும் ஒன்று, நீங்கள் தினம் தினம் உணரும் அனுபவம் அனைவரும் ஒப்புக் கொண்ட அனுபவம்! ஆனால் யாருக்கும் காட்ட முடியாத ஒன்று!

இப்படித்தான் இந்த பேய் என்ற சொல்லும்கூட!


சற்று மேலே தலைப்பை பாருங்கள்! அந்த கேள்விக்குறியை மட்டும் சற்று நேரம் உற்றுப்பாருங்கள்.. அதுவும் ஒருபேய் ஆடுவதைப்போலத்தான் தெரியும். (மிரண்டவன் கண்ணுக்கு) அது போகட்டும்!

பேய் என்று ஒன்று உண்டா? அதன் உறைவிடம் ஏது? அது யாரை தாக்கும்? நான் கண்டதில்லையே! என சிலர்... பேயாடுவதை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன் என ஒரு சிலர்!

சரி இதுபோன்ற ஆட்டங்களை எங்கே காண முடிகிறது?

மனிதர்களைப் போன்று சாதி,மதம், இன வேறுபாடு இவற்றிற்கு உண்டா? எனக்கும் தெரியாது... ஆனால் நிகழ்ச்சிகள், இதுவரை நடந்தேறியவைகள் என்ன கூறுகிறதென்று பார்ப்போம்.!

ஒரு அம்மன் கோயிலுக்குப் போகிறோம் என வைததுக்கொள் ளுங்களேன்! அங்கே பூiஜக்கு வரும் அனைவரும் ஆடுவதில்லை. ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே ஆடுவதைப் பார்க்கிறோம். அவற்றிற்கு பல பெயர்களும் உண்டு அதை அவர்கள் வாயால் உச்சரிக்கும்போது,

ஆஹா.. நான்தான் முனீஸ்வரன் வந்திருக்கேன்!

என்னை யாருன்னு நினைச்சடா? நான் ஆத்தா...

யாராலும் அடக்க முடியாத சங்கிலி கருப்பன்டா நான்!

நன்றி : சிவா 

நோய் வராமல் தடுக்கும் உடற்பயிற்சிகள்

நோய் வராமல் தடுக்கும் உடற்பயிற்சிகள்

நோய் வராமல் தடுக்கும் உடற்பயிற்சி உடல் எடை அதிகரிப்பது தான் பல்வேறு நோய்கள் வர காரணம் என்று மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது. உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நம்முன்னோர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள்.



அளவான உடல் அமைப்பு தான் அழகை தரும் என்று பெண்களில் பலர் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறார்கள். ஆண்களிலும் உடலை பேணுகிறவர்கள் உண்டு என்றாலும் ஏதோ ஒரு காரணத்தால் பலருக்கு உடல் எடை அதிகரித்துவிடுகிறது. உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி, நடைபயிற்சி தான் சிறந்த வழி.

நோய் வராமல் உடலை பேணுவதற்கு வழி என்ன? அதிக எடை உள்ளவர்கள், எந்த பயிற்சியை செய்தால் என்ன பலன்கிடைக்கும். குறிப்பிட்ட உடற்பயிற்சி செய்யும் போது எதை தவிர்க்க வேண்டும்? எந்த வகை உணவு உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பது பற்றிய குறிப்புகளை `மாலை மலர்’ வாசகர்களுக்காக டாக்டர் கமலி ஸ்ரீபால் வழங்குகிறார்.

இதோ உங்களுக்காக…
நீங்கள் தினமும் சுமார் 30 நிமிடங்கள் கீழ்கண்ட பயிற்சிகள் செய்தால் உங்கள் எடையின் படி சுமார் எவ்வளவு `கிலோ ஜோல்ஸ்’ குறையும் என்பது இங்கே தரப்பட்டுள்ளது.


1. 55 கிலோ எடை கொண்டவர்கள் குறையும் அளவு (கிலோ ஜோல்ஸ்)
2. 65 கிலோ எடை கொண்டவர்கள் குறையும் அளவு (கிலோ ஜோல்ஸ்)   3. 75 கிலோ எடை கொண்டவர்கள் குறையும் அளவு (கிலோ ஜோல்ஸ்)   4. 90 கிலோ எடை கொண்டவர்கள் குறையும் அளவு (கிலோ ஜோல்ஸ்)


55 கிலோ எடை கொண்டவர்கள் 1 எண்ணில் உள்ள அளவைவும், 65 கிலோ எடை கொண்டவர்கள் 2 எண்ணில் உள்ள அளவைவும், 75 கிலோ எடை கொண்டவர்கள் 3 எண்ணில் உள்ள அளவைவும், 90 கிலோ எடை கொண்டவர்கள் 4 எண்ணில் உள்ள அளவைவும் கணக்கில் கொள்ளவும்.



பயிற்சி                                                     1          2         3       4


சைக்கிள் (10 கி.மீ. வேகம்)             400    500    550    600+
சைக்கிள் (20 கி.மீ. வேகம்)             700    800    1000    1200+
ஸ்கிப்பிங்                                             1200   1400    1500   2000+
ஓட்டம் (10 கி.மீ. வேகம்)                 1250    1500   1700    2000+
ஓட்டம் (11 கி.மீ. வேகம்)                 1600    1900   2000    2500+
நீச்சல் 25 மீட்டர்/நிமிடம்                 450    550    650    750+
நீச்சல் 50 மீட்டர்/நிமிடம்                 850    1000    1200    1300+
நடைபயிற்சி 3 கி.மீ./1 மணி           400    500    550    650+
நடைபயிற்சி 5 கி.மீ./1 மணி           550    650     750    850+
நடைபயிற்சி 6.5 கி.மீ./1மணி         750    900    1000    1100+
டென்னிஸ்                                           700      800    9000    1000+


மேற்கண்ட உடற்பயிற்சிகள் கூறப்பட்டிருந்தாலும் மருத்துவ ரீதியாக அன்றாடம் 30 நிமிட நடைபயிற்சியே உங்களை ஆரோக்கியமாக வைக்க போதுமானது.

Friday, May 2, 2014

அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)

அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)


உலகத்துல மனுஷனப் பத்தி மனுஷனாலேயே புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்லேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி அப்படிங்கிறது! அதாவது, ஐப்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்/Extra-sensory perception (ESP)). ஆங்கிலத்தில் “இன்டியூஷன்” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து (தீர்கதரிசி) சொல்வது எப்படி? என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால்  நம் எல்லோரையும் அதிர வைக்கும் 

ஒரு மர்மம்!  இதுல செஞ்ச ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை/கருத்தை சொல்லவே இல்லை. குழப்பமான, புரியாத ஆய்வு முடிவுகளையே கொடுத்திருக்கிறது  இ.எஸ்.பி பற்றிய ஆய்வுகள் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! இன்னும் சிலர், இந்த மாதிரி அமானுஷ்ய சக்தி பத்தின ஆய்வு என்னைக்குமே ஒரு தெளிவான முடிவைத் தராது, மனுஷனுக்கு அப்பாற்பட்டது அப்படின்னும் சொல்றாங்க. அப்ப்டின்னா, கடைசி வரைக்கும் இது ஒரு புரியாத புதிராவேதான் இருக்குமா? தெரியல, காலந்தான் பதில் சொல்லனும்!


தேஜா வு (Deja vu)

தேஜா வு (Deja vu)

“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம். அதாவது,  இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்க போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்றாங்க! உதாரணத்துக்கு, ஒரு பெண்மணி புதுசா ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதல்ல வந்து, ஒரு கட்டிடத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிறாங்க. ஆனா அங்க, அவங்க வாழ்க்கையில முதல்முதல்ல பார்க்கிறதெல்லாமே முன்னாடியே அவங்க பார்த்து அனுபவிச்ச மாதிரி ஒரு உணர்வு வருது அவங்களுக்கு! இதுதான் “தேஜா வு” அப்படிங்கிறாங்க!” சில விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தேஜா வு-வுக்கு காரணம் முன் ஜென்ம நினைவுகள் அப்படின்னு சொன்னாலும், இதுவரைக்கும் இந்த உளவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒரு மர்மமாவேதான் இருக்கு!

இதுவரைக்கும் நாம பார்த்த விஷயங்கள் சில “கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி” இருந்திருக்கும் உங்களுக்கு. எனக்கும்தாங்க! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம்,  நம்ம எல்லோருக்கும் ஏதோ ஒரு வயசில அனுபவப்பட்டதா/கேள்விப்பட்டதா இருக்கும்னு நான் நெனைக்கிறேன். என்னன்னு யூகிக்க முடியுதா உங்களால……?!


Thursday, May 1, 2014

தீராத தீவிரவாதம்.. (கவிதை)

தீராத தீவிரவாதம்.. (கவிதை) 


எது தீவிரவாதம்?
எச்சில் உமிழும் வேகத்திலும்
எட்டி குதிக்கிறது தீவிரவாதம்..

எழுந்து நடைபழகும் வயதில்
முட்டை கொடுத்து
பின் மீனறுத்து
பிறகு கோழி விரட்டிப் பிடித்து
துடிதுடிக்க கழுத்தையறுக்கும் கொடூரத்திலிருந்து
குழந்தைக்குப் பரிட்சையமாகிறது
தீவிரவாதம்..

எதிரியைச் சுடுவது வெற்றி
தான் விழுந்தால் கொலையெனும்
மனோபாவம்
தீவிரவாதத்தின் முதல் போதனையாகப்
பதிகிறது
மனதுள் பிற கேள்விகளின்றி..

அப்பா அம்மாவிற்கிடையே
விழும் கோடுமிழும்
பேத பிரிவினையை,

ஆசிரியர் தவறாக அடிக்கும்
ஒரு அடி கற்பிக்கும்
அதர்மத்தின் சீற்றத்தை,

நண்பன் இழைக்கும் காழ்ப்புணர்வு கொடுக்கும்
தீவிரவாதத்திற்கான
சிறு தீயை,

என் வீடு
என் நாடு
எனது மொழி
எனது மக்கள் எனும்
பிடிப்பு இடர்கையில் கூடும் வெறியில்
முரண்பட்டப் புரிதலில்
முளைத்துவிடுகிறது தீவிரவாதம்..

அனிச்ச மலருக்கு வலிக்குமோ
பச்சைப்பிள்ளை பாவம் துடிக்குமோ
என்று பதறும் மனசுதான்
எல்லோருக்கும்
பிறக்கையிலிருக்கிறது,

அதில்
அறமறுக்கும் கத்தியை
நாம் தீட்டாதவரை -
குழந்தைகளுக்குத் தெரியாது தீவிரவாதம்;

அதைப் புரிந்து நாம் மாறாதவரை
முற்றிலும்
தீராதிந்த தீவிரவாதம்..
———————————————————————-
நன்றி : வித்யாசாகர்


இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்