Sunday, December 14, 2014

ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர்

ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர்


அரசர் இரண்டாம் ஹியரோ தனது யுத்த வெற்றிகளை கொண்டாடுவதற்காக கோவிலொன்றுக்கு தங்க கிரிடமொன்றை வழங்க நாடினார். அதற்காக கொல்லனுக்கு தூய தங்கம் வழங்கியிருந்தார். கொல்லனும் அரசரின் கட்டளைப்படி கிரீடத்தை செய்து கொடுத்தான். ஆனால் கொல்லன் கிரீடத்தில் தங்கத்துடன் வெள்ளி கலந்திருப்பான் என்ற வதந்தி பரவியது. ஆனால் அரசன் உண்மையை அறியாமல் அவனை தண்டிக்க விரும்பவில்லை. எனவே அவர் இப்புதிரை தீர்க்கும் பொறுப்பை ஆர்க்கிமிடீஸ் எனும் அக்காலத்தில் சிறந்த கணித மேதையிடம் ஒப்படைத்தார்.

இதன்பிறகு ஆர்க்கிமிடீஸ் ஒருநாள் குளிக்கும்போது குளியல் தொட்டியில் தண்ணீரின் உயரம் தான் உள்ளே இறங்கும்போது உயருவதைக் கண்டார். இதை வைத்து அரசரின் கேள்விக்கு விடை கண்டுவிடலாமே என்று உணர்ந்து யுரேகா (கண்டுபிடித்துவிட்டேன்) என்று கத்திக்கொண்டு தனது உடைகளையும் அணியாமல் வீதியில் ஓடினார்.இத்ததுவதத்தின் மூலம் அவர் தங்கம் வெள்ளியின் அடர்த்தியின் அளவை ஒப்பிட்டு கொல்லன் கிரீடத்தில் வெள்ளி கலந்த்ததை நிரூபித்தார்.

ஆர்க்கிமிடீஸ் தத்துவம்,

ஒரு பாய்மத்தினுள் (திரவம் அல்லது வாயு) அமிழ்த்தப்பட்ட ஒரு பொருளின் மீது அப்பாய்மம் செலுத்தும் மிதப்பு-விசை அப்பொருளினால் இடப்பெயர்க்கப்பட்ட பாய்மத்தின் எடைக்குச் சமம் எனக் கூறுகிறது. இன்னொரு வகையில் கூறுவோமானால் ஒரு பொருள் ஒரு நீர்மத்தினுள் மூழ்கியிருக்கும் போது அது இழந்ததாகத் தோன்றும் எடை அதனால் வெளியேற்றப்பட்ட நீர்மத்தின் எடைக்குச் சமம். இத்தத்துவம் முழுமையாக அமிழ்த்தப்பட்ட பொருளுக்கும் பொருந்தும்; ஒரு-பகுதி அமிழ்த்தப்பட்ட பொருளுக்கும் பொருந்தும். ஆனால், பொருள்களின் எடையின்மை நிலையில் ஆர்க்கிமிடீசு தத்துவம் உண்மையாயிராது.


பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்


பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்


ஒரு வீட்டில் நிறைய எலிகள் இருந்தன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டன.


ஓர் எலி எழுந்து, ‘இங்குள்ள பூனையின் கொடுமை தாங்க முடியவில்லை; நாள்தோறும் நான்கைந்து எலிகளைக் கொன்று தின்கின்றது. நம் இனம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகி றது. நாம் அதனிடமிருந்து தப்பி க்க ஏதேனும் வழி கண்டாக வேண்டும்’ என்று உணர்ச்சியுடன் பேசியது.

கிழ எலி ஒன்று எழுந்து, ‘நீ சொல்வது உண்மைதான். நாம் எல்லோரும் பூனைக்கு அஞ்சி அஞ்சித்தான் வாழ்கிறோம். அதனிடமிருந்து தப்பிக்க வழி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே, என்ன செய்வது?’ என்றது.

அங்கிருந்த சுண்டெலி ஒன்று எழுந்தது. ‘நாம் எதிர்பாராத நேரத்தில் பூனை நம் மீது பாய்ந்து பிடித்துக் கொள்கிறது. நம்மால் தப்பிக்க முடியவில்லை. பூனை வருவது நமக்கு முன்னரே தெரிந்தால் நாம் அதனிடமிருந்து தப்பிக்க முடியும்.

நாம் எப்படியாவது முயன்று பூனையின் கழுத்தில் ஒரு மணியைக் கட்டிவிட்டால் போதும். அது வரும் போதெல்லாம் மணி ஓசை நமக்குக் கேட்கும். நாம் வளைக்குள் பாதுகாப்பாகப் பதுங்கிக்கொள்ளலாம். பூனையால் நம்மைப் பிடிக்கவே முடியாது’ என்றது.

‘ஆ! அருமையான திட்டம். இனி அந்தப் பூனையால் நம்மைப் பிடித்துத் தின்ன முடியாது’ என்று பல எலிகள் அந்தச் சுண்டெலியைப் பாராட்டின.

‘திட்டம் நல்ல திட்டம்தான். அதை நிறைவேற்றுவதில் ஒரு சிக்கல் உள்ளதே’ என்றது கிழ எலி ஒன்று.

‘பூனையின் கழுத்தில் மணி கட்டப் போவது யார்? நீங்களா அல்லது திட்டத்தைச் சொன்ன சுண்டெலியா? நம்மால் பூனையின் அருகே சென்று உயிருடன் திரும்ப முடியுமா? இயலாத செயலுக்கு ஏன் இப்படி ஆரவாரம் செய்கிaர்கள்?’ என்றது அது.

அப்பொழுதுதான் மற்ற எலிகளுக்கும் ‘பூனையின் கழுத்தில் மணி கட்டுவது இயலாத செயல்’ என்பது புரிந்தது.

எல்லா எலிகளும் தலையை கவிழ்த்தன. ஆனால் இரு இளம் எலிகள் இரு வேறு யோசனைகள் கூறி பூனையின் கழுத்தில் மணியைக் கட்டின. அவற்றைக் கேட்டு வியந்த மற்றைய எலிகள் இவ்விரு எலிகளின் புத்திக் கூர்மையை மெச்சின. அடுத்தநாள் பூனை வரும்போது மணியோசை கேட்டது. எலிகள் ஓடி ஒளிந்தன. பூனைக்கு ஏமாற்றம். அதற்குப் பிறகு, பூனையால் அந்த வீட்டில் ஓர் எலியைக்கூட பிடிக்க முடியவில்லை. இவ்விரு யோசனைகளில் உங்களால் ஒன்றாவது கூற முடியுமா?


புதிர்விடை :

முதல் புத்திசாலி எலி கூறியது

‘நான் இரவு நேரத்தில் பக்கத்து மருந்துக்கடையிலிருந்து தூக்க மாத்திரைகளை எடுத்து வந்தேன். பூனை குடிக்கும் பாலில் அவற்றைப் போட்டேன். அது, அயர்ந்து தூங்கும்போது மணியைக் கட்டினேன்’ என்று சொன்னது.

இரண்டாம் எலியோ


‘பூனையின் கழுத்தில் மணி கட்ட முடியாது . ஆனால், பூனை குட்டி போட்டிருக்கிறது. அந்தக் குட்டி இன்னும் கண் விழிக்கவில்லை. அதன் கழுத்தில் மணியைக் கட்டலாம். அதன்படியே, தாய்ப் பூனை வேட்டையாடச் சென்றிருக்கும் போது, எலிகள் ஒன்றுசேர்ந்து கண் விழிக்காத குட்டியின் கழுத்தில், சிறியதொரு மணியைக் கட்டின. பின் பூனை குட்டியோடு வரும்போது மணிச் சத்தம் கேட்டு ஓடி ஒளிந்தன. அத்தோடு அக் குட்டிப் பூனை பெரிதானாலும் மணி அதன் கழுத்திலேயே தொடர்ந்தும் இருக்கும்.

ஒரு பெண் , ஒரு கடைக்காரன் , ஒரு போலி நோட்டு ! - புதிர் கதை

ஒரு பெண் , ஒரு கடைக்காரன் , ஒரு போலி நோட்டு ! - புதிர் கதை 


பெண்ணொருத்தி ஓர் கடையில் 200 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வாங்கினாள். கடை முதலாளியும்  இலாபம் ஏதும் இன்றி அவ்விலைக்கு விற்க 1000 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்தாள் அவள்.அதை கவனிக்காத கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்கி வந்தார்.

திரும்ப கடைக்கு வந்து 200 ரூபாயை கல்லாவில் வைத்து கொண்டு மீதி 800 ரூபாயை அப் பெண்ணிடம் கொடுத்துவிட்டார். சிறிது நேரம் கழித்து போலி நோட்டை அடையாளங் கண்ட பக்கத்து கடை காரர், முதல் கடைக் காரரிடம் வந்து “இந்த 1000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு” என்று சொல்லி கொடுத்து விட்டு  1000 ரூபாய் தூய நோட்டாக வாங்கி சென்றார்.
முடிவில் முதல் கடை காரருக்கு எவ்வளவு நஷ்டம்”  ?

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்