Sunday, August 16, 2015

இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்! – Yamaguchi

இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்! – Yamaguchi


Tsutomu Yamaguchi (திசுதொமு யொமாகுசி) என்ற துரதிஷ்டசாலி பற்றியே இன்று பார்க்கப்போகின்றோம்.

உலக வரலாற்றில் இதுவரை இரண்டு அணுகுண்டுகளே யுத்தங்களின் போது பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். இரண்டாம் உலகயுத்தத்தின் போது அமெரிக்காவினால் ஜப்பான் மீது வீசப்பட்ட இரண்டு அணுகுண்டு தாக்குதலுக்கும் முகம்கொடுத்து தப்பித்த ஒரே ஒரு நபர் Yamaguchi ஆவார்.


மிஷுவிஷி நிறுவனத்தின் வேலை அலுவல்களுக்காக ஹிரோஷிமா (Hiroshima) நகரத்தில் தங்கியிருந்தார் Yamaguchi. அடுத்த நாள் தனது சொந்த ஊரான நாகஷாகி (Nagasaki) இக்கு பயணிக்க திட்டமிட்டிருந்தார். காலையில் நகரத்தை விட்டு வெளியேற தயாராக இருந்த அவருக்கு பயணச்சீட்டை தவறுதலாக அலுவலகத்தில் விட்டு விட்டது அப்போது தான் நினைவிற்கு வந்தது. உடனடியாக அலுவலகம் சென்று பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு வெளியேறினார். அப்போது நேரம் 8:15. (6/8/1945)

அமெரிக்க போர்விமான ஓட்டி எனோலா கேய், “Little Boy” என பெயரிடப்பட்ட முதலாவது அணு குண்டை ஹிரோஷிமா நகர மையத்தில் போட்டார்! இதன் தாக்கத்தால் சுமார் 3 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த Yamaguchi இன் பார்வை தற்காலிகமாக அற்றுப்போனதுடன், அவரது உடலின் வலதுபாகங்கள் பெரும்பாலும் எரிந்துபோயின. பின்னர், மீட்பு படையினரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் 3 நாள் சிகிச்சை பெற்ற அவர் தனது சொந்த ஊரான நாகசாகிக்கு மாற்றப்பட்டார்.

9/6/1945 அமெரிக்க போர் விமானி பொஸ்கார் “Fat Man” என்ற இரண்டாவது அணுகுண்டை நாகசாகி மீது போட்டார்!
குண்டு போடப்பட்ட இடத்தில் இருந்து சரியாக 3 கிலோமீட்டர் தூரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த Yamaguchi, இவ் முறை எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் காக்கப்பட்டார்.

இவ்வாறு, துரதிஷ்ட வசகாம இரண்டு அணு குண்டுத்தாக்குதலுக்கும் உள்ளான Yamaguchi ஐ, 2009 ஆம் ஆண்டு “இரண்டு அணுகுண்டுகளுக்கும் தப்பிய ஒரே நபர் ” என்ற ரீதியில் ஜப்பான் அரசு கெளரவித்தது.
இவர் 2010 ஆம் ஆண்டு தனது 93 ஆவது வயதில் வயிற்றுப்புற்று நோயினால் இறந்தார்.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்