Monday, January 14, 2013

கோபத்தில் வெளியிடப்படும் வார்த்தைகள் உயிரை கூட எளிதாக எடுத்துவிடும் !!!


ஒரு ராணுவ வீரன் தனக்கு திருமணமான உடன் பட்டாளத்துக்கு சென்று விட்டான். அவன் சென்ற சில மாதங்களிலே அவன் தந்தையான விவரம் தெரிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தான். பத்து வருடங்கள் கழிந்து அவன் சொந்த ஊருக்கு திரும்பி வந்த போது அவனது மனைவி மிகுந்த ஆர்வத்துடன் அவனை வரவேற்றாள். அன்னையின் பின்னே சற்றே மிரண்ட விழிகளுடன் ஒரு சிறுவன் நின்றிருந்தான். தன் மகன் என்று உரிமையோடும் பெருமையோடும் அவனை பார்த்து கொண்டிருக்கும் போது அவன் தந்தையை கண்டு கொள்ளவே இல்லை. 

அவன் மனைவி அங்கிருந்து அகன்றதும் சிறுவன் வந்து வீரனிடம், நீங்கள் யார் என்று வினவினான். சற்றே அதிர்ச்சியடைந்தாலும், வேடிக்கை போல், கண்ணா நான் தான் உன் அப்பா என்றான் அவன். உடனே சிறுவன் கூறினான், இல்லை நீங்கள் இல்லை என் தந்தை. என் அப்பா எப்போதும் என் அம்மா கூடவே இருப்பார். அவள் நடந்தால் நடப்பார், அமர்ந்தால் அமர்வார் என்றான். வீரன் திகைத்து போய் விட்டான். சற்று நேரம் கழித்து வந்த மனைவியை வெறித்து நோக்கினான். பின்பு, அவன் அவளிடம் முகம் கொடுத்தும் பேசவே இல்லை. இதை கவனித்த மனைவிக்கு தாள முடியவில்லை. வாய் விட்டே கேட்டு விட்டாள் தன் அன்பு கணவனிடம். அதற்கு அவன், இவ்வளவு நாள் வந்தவன் வரவில்லை என்று என்னிடம் வந்தாயாக்கும் என்று கேட்டு விட்டான். இந்த சொல் கேட்டு அவள் உடனே தன உயிரை விட்டு விட்டாள். 

அவள் இறந்த ஈம கிரியைகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த அவனுக்கு அவனது மகனின் செயல்கள் விசித்திரமாய் இருந்தது. அங்கும் இங்கும் தேடி கொண்டே இருந்தான். ஏற்கனவே இருந்த கோப கனல் முழுதும் அவன் மேல் திரும்பி என்னடா தேடுகிறாய் என்றான். அவன் அப்பாவை காணவில்லை என்றான். வீரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன உளறுகிறாய் என்றான். அதற்கு அவனது நிழலை காட்டி. இவரை போல் ஒருவர் அம்மாவுடனே இருப்பார். அவர் தான் என் தந்தை. அம்மா தான் கூறினார்கள். இதோ இவர் தான் உன் தந்தை என.

தந்தையின் பிரிவு மகனை பாதித்து விட கூடாதென எண்ணி அவள், தன் நிழலை காட்டி இதுவே தந்தையென நம்ப வைத்திருந்தாள் அந்த சிறுவனை. ஏதும் அறியாது சந்தேகத்தால் தன் இல்லாளை வார்த்தையால் கொன்று விட்ட அந்த வீரன் செய்வதறியாது திகைத்து நின்றான்.

2 comments:

  1. தவறான புரிதல்கள் இப்படித்தான் இழப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

    ReplyDelete

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்