Saturday, December 21, 2013

அடாஃல்ப் ஹிட்லரின் கௌரவ குடியுரிமை ரத்து

அடாஃல்ப் ஹிட்லரின் கௌரவ குடியுரிமை ரத்து

ஜேர்மன் சர்வாதிகாரி அடாஃல்ப் ஹிட்லரின் கௌரவ குடியுரிமையை தெற்கு ஜேர்மனியிலுள்ள சிறிய நகரம் ஒன்று ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

அடாஃப்ல்ப் ஹிட்லர், 1933ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை ஜேர்மனின் சர்வாதிகாரியாய் திகழ்ந்தார்.

ஹிட்லரை அரச தலைவராக நியமித்தவர் பால் வான் ஹைண்டன்பர்க்.


இருவருக்குமான கௌரவ குடியுரிமையை தெற்கு ஜேர்மனியிலுள்ள சிறிய நகரமா டியட்ராம்செல் (Dietramszell) ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதற்கு முதலில் கவுன்சில் மறுப்பு தெரிவித்ததால், மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

அதாவது, உள்ளூர் கவுன்சிலிங் உறுப்பினர் குழு சரித்திரத்தை மாற்றி எழுதும் வேலை தங்களுக்கு இல்லை என்றும், இது சர்சைக்குரிய நிலைக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்து இப்பிரச்சையில் தலையிடாமல் போனது.

ஆனால் இப்போது இதுபற்றி கடும் போராட்டம் நிகழ்வதால் மக்களின் இக்கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய தீர்மானித்தனர்.

இதனையடுத்து இரண்டாவது சிறப்புக் கூட்டத்தில் குழுமிய அவ் உறுப்பினர்கள் தங்களது முந்தைய முடிவுக்கு மன்னிப்பு கோரி அதை மாற்றிக்கொண்டு இவ்விருவரின் குடியுரிமையை பறிக்கும் நடவடிக்கைக்கு முழுமனதாக ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்