Saturday, August 20, 2011

உலகெங்கும் மக்கள் ஏன் யூதர்களை வெறுக்கின்றனர் ?

இந்த கேள்வி கிட்ட தட்ட  1000 ஆண்டுகளுக்கு  மேலாக உலக மக்களிடம்  உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகளையும் இங்கே பதிந்துளேன்.

பின் வரும் தகவல்களை வைத்து யூத-விடுமுறை வரலாற்றை சுருக்கமாக கூறி விட முடியும் .

ஏன் யூத எதிர்ப்பு பல நாடுகளில் மிகவும் பரவலாக உள்ளது அதுவும் பல கால கட்டங்களில் மற்றும் பல காரணங்களுக்காக?. இப்படி பல கேள்விகள் எழுந்ததால் மக்களும் ,"ஒருவேளை யூதர்கள் மற்றும் யூத மதத்தின் மீது தான் ஏதோ தவறு உள்ளது" என்று எண்ண தொடங்கினர்.

ஆண்டுகள் 250 CE மற்றும் 1948 CE இடையே , கிட்டதட்ட 1,700 ஆண்டுகளுக்கு யூதர்கள் ஐரோப்பாவில் உள்ள எண்பதுக்கும் அதிகமான நாடுகளில் இருந்து  வெளியேற்றப்பட்டனர் , அதாவது சராசரியாக இருபது வருடங்களுக்கு ஒரு முறை.
யூதர்களை மக்கள் வெறுப்பதற்கான காரணமாக வரலாற்றாசிரியர்கள் ஆறு காரணங்களை முன் வைக்கின்றனர்.
1. பொருளாதாரம்  - "அவர்கள் அதிகமாக சொத்து மற்றும் அதிகாரம் உடையவர்கள் என்பதால் மக்கள்  யூதர்களை வெறுக்கின்றனர் ."
2. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் - "அவர்கள் திமிர்த்தனமாக, நாங்கள்தான் இறைவனால்  தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்று கூறுவதினால் யூதர்கள் வெறுக்க படுகின்றனர் "  
3. பலிகடா - " மக்கள் தமது பிரச்சனைகளை யார் மீதாவது திணிக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அவர்கள் கண்ணில் சிக்கி பலிகடா ஆனவர்கள் தான் யூதர்கள்" 
4. கடவுளை கொன்றவர்கள் - "யூத இன மக்கள் தான் இயேசுவை கொன்றனர் அதனால் நாங்கள் அவர்களை  வெறுக்கிறேன் என்று பலர் கூறுவதுண்டு "
5. வெளியாட்கள் - "அவர்கள் எங்களை போல் அல்ல , அவர்கள் எங்களை விட  வேறுபட்டவர்கள் , அதனால் தான் வெறுக்கிறோம்"
6. இன கோட்பாடு - "அவர்கள் ஒரு தாழ்ந்த இனம் என்பதால் நாங்கள்  யூதர்களை  வெறுக்கிறோம் என்றும் மக்கள் கூறி உள்ளனர் ."
மேற்கண்ட விளக்கங்களை  நாம் சிறிதளவு  பொது அறிவோடு  ஆராய்து  பார்க்கலாம்:
          இந்த ஆறு காரணங்களும் உண்மையிலே யூத-எதிர்ப்புக்கு [Anti-Semitism ] காரணங்களா ? அல்ல  வெறும் சாக்கு போக்கா ?
 இந்த ஆறு காரணங்களில் உள்ள முரண்பாடுகளை  அறிந்து கொண்டால் இதற்கான விடை கிடைக்கும் :
1. பொருளாதாரம் - "17-20 ஆம் நூற்றாண்டில் போலந்து மற்றும் ரஷ்ய   யூதர்கள் மிகவும் ஏழையாக தான் இருந்தனர் , அப்படி இருந்தும் அவர்கள் வெறுக்கப்பட்டனர் "
2. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் - " 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஜெர்மனி யூதர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்பதை  மறுத்தனர் , அப்படி இருந்தும் ஜெர்மன் யூதர்கள் பல இன்னல்களுக்கு உள்ளானர்" 
3. பலிகடா  -"எந்த ஒரு இனமும் பலிகடா ஆவதற்கு முன்பு கண்டிப்பாக வெறுக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது பலிகடா கோட்பாடு   கண்டிப்பாக உண்மையாக இருக்க முடியாது. "
4. கடவுளை கொன்றவர்கள் -"கிறிஸ்துவ பைபிள் கூறுவது படி பார்த்தால் இயேசுவை கொன்றவர்கள் ரோமானியர்களே , ஆனால் யூதர்கள் அவர்களிடம் வேலை செய்தவர்கள் மட்டுமே. தவறு செய்தவர்களை விட்டு அவர்களிடம்  வேலை செய்தவர்களை மட்டும் தண்டிப்பது எவ்வகையில் நியாயம் . இது வரை வரலாறில் "ரோமனிய-எதிர்ப்பு"[ anti-Roman movement] என்று ஏதேனும் கேள்வி பட்டு தான் உள்ளோமா?. அனால் யூதர்களை மட்டும் குறி வைத்து எத்தனை எதிர்ப்புகள் கடந்த காலத்தில் !  "
5. வெளியாட்கள்  - "18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யூதர்கள் பிற மக்களுடன் இனைந்து ஒன்றி வாழ தொடங்கினர். அத்துடன் யூத-எதிர்ப்பு நிறுத்த பட்டிருக்க வேண்டும், ஆனால் நடக்கவில்லை. மாறாக ஹிட்லரின் நாசி[NAZI] படை வெறியாட்டம் போட தொடங்கியது . இப்பொழுது அவர்கள் கூறிய காரணம் , யூதர்கள் வெளியாட்கள் என்பது அல்ல, நீங்கள் எங்களை போல மாற முயற்சி செய்கின்றீர்கள் என்பதே அந்த குற்றச்சாட்டு !. உங்களை போன்ற தாழ்ந்த இனத்தினால் ஆரிய இனம் பாதிப்படைய அனுமதிக்க முடியாது என்று கூறினர் . "
6. இன கோட்பாடு  - "இந்த கோட்பாடு தான் மிகவும் முரண்பாடானது. ஏன் எனில் யூதர்கள் உண்மையிலே ஒரு இனம் கிடையாது . யார் வேண்டும் என்றாலும் யூதராக மாற முடியும் ஏன் ஏனில் அது ஒரு மதம் மட்டுமே " 

 இறுதியாக ஒன்று மட்டும் நிச்சயம் , மனிதனை மனிதன் துன்புறுத்தி கொல்வதை எந்த யுகத்திலும் தடுக்க இயலாது :(




16 comments:

  1. 4 'வது காரணமாக கூறியது போல் இயேசுவை கொன்றது ரோமானியர்களே. அனால் பைபிள்'இல் கூறியுள படி இயேசுவை மரண தண்டனைக்கு உட்படுத்த கோரி ரோம பேரரசான பிலாத்துவிடம் வருபுதியவர்கள் யூதர்களே. பிலாதுவிற்கு அதில் உடன்பாடு இல்லையெனினும் மக்கள் வலியுர்த்தியதால் இயேசுவை கொள்வதற்கும் விடுவிப்பதற்குமான தீர்ப்பை மக்களிடமே விட்டுவிட்டான். மேலும் இந்த ரத்தபலியில் தனக்கு தொடர்பில்லை என்று கை கழுவி விட்டான். இதற்கு யுதர்கள், இந்த பழி எங்கள் மீதும் எங்கள் சந்ததியினர் மீதும் விழட்டும் என்று கூறியுள்ளதாக நம்பபடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. Ithu 2nd edition la solla patta kadthai

      Delete
    2. Thanks for your valuable comment :)

      Delete
  2. Thanks for your valuable comment :)

    ReplyDelete
  3. 6 வதும் தவறு !
    யார் வேண்டுமானாலும் யூதராக முடியாது.
    யூதராவது பிறப்பாலே !

    யூதர் வழிபடும் கடவுளை வழிபடலாம்.
    ஆனால் அவர்களோடு உறவு கொள்ள முடியாது.

    ReplyDelete
  4. no offence
    நீங்க ஒரு கோட்பாடை விடுடிங்க....
    ஆதுதான் 7வது கோட்பாடு.......
    யுதர்கள் புத்திசாலியனவர்கள்......
    எடுத்துகாட்டு: ஆல்பர்ட் எய்ன்ஸ்டின், இவர் தான் அனுகுண்டை கண்டுபிடிதவர்
    புத்திசாலியனவர்களை நாம் கண்டால் பொறாமை ஏற்படும்.......
    ஜப்பானில் இரு அனுகுண்டுகளை வீசப்பட்டதை உருவாக்கியவர் இவர்தான்......

    எனக்கு தெரிந்தவரை போஸ்ட் செய்திருக்கிறேன்.......

    ReplyDelete
    Replies
    1. Thanks for the added info :) # yes generally Jews are still the intelligent group among humans.... and then Germans comes next to them :)

      Delete
  5. manidhanai kolla yedhavadhu saaku pokku manidhanukku venum adharku therndhetukkappattadhudan sadhi inam yellam

    ReplyDelete
  6. வித்தியாசமான பதிவு நிறையத் தகவல்கள்.

    ReplyDelete
  7. idu ellam arasiyala saadarnam than - mozhi, inam, matham, jaathi, paanam, land......... ippadi niraya vishayangal irukku arasiyal vathikkalukku pirivinai erpadutha neengal sonna athanai kaaranangalum (mudal 5 varai mattum) unamaiye sila maatrangaludan. (munbu uyarintha jaathi soli thazhthapatta makkalai kastapatithinar, indru thazhthapattar soli (avargalum athai ettru golkirargal) sirbanmaiyinar....innum pala soli mattravargalai kasta patutthu kirargal arasiyala idu ellam saadarnam than......:):):) mothathil anaivarum vazha urumai undu aanal yaar balam petravano avan adikka matravar thanga vendiya than kevalam idu 22nd cent...idan mulam nalla arasiyal labam than................

    ReplyDelete
  8. 6. இன கோட்பாடு - "இந்த கோட்பாடு தான் மிகவும் முரண்பாடானது. ஏன் எனில் யூதர்கள் உண்மையிலே ஒரு இனம் கிடையாது . யார் வேண்டும் என்றாலும் யூதராக மாற முடியும் ஏன் ஏனில் அது ஒரு மதம் மட்டுமே "

    this is fake ans............ஏன் எனில் யூதர்கள் உண்மையிலே ஒரு இனம்.அது ஒரு மதம் kidaiyathu.........

    ReplyDelete
  9. Its a perfect fake

    ReplyDelete
    Replies
    1. Kindly support ur accusation with facts .. we might learn from it too .. !

      Delete
  10. யூதர்கள் தங்களை தாழ்ந்த இனம் என்று எங்குமே சொல்லமாட்டார்கள்.மாறாக மனித இனங்களிலே மிகவும் உயர்ந்த கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரே இனம் என்று பெருமை கொண்டவர்கள். இவர்கள் மற்ற இன மக்களை நாய்களை போல் எண்ணுபவர்கள், ஆகவே
    6 வது கொள்கை முற்றிலும் தவறானது.

    ReplyDelete
  11. This design is steller! You certainly know how to keep a reader amused. Between your wit and your videos, I was almost moved to start my own blog (well, almost...HaHa!) Excellent job. I really enjoyed what you had to say, and more than that, how you presented it. Too cool! facebook login facebook login

    ReplyDelete
  12. ஏய் மனிதா நீ உனக்கு நீயே நீதிபதியா
    சரோஜாதேவி எழுதிய காமலீலைகள் புத்தகத்தை ஒரு எழுத்து விடாமல் கண்ணுக்குள் எண்ணெய் ஊற்றி படிக்கிறாய்

    ஆனால் நீயோ உன்னுடைய தஸ்தாவேஜ்களில் மட்டுமே பெருமை பீத்திக்கொண்டு எழுதுகிறாய் நானொரு இந்து இஸ்லாம் கிறிஸ்தவன் சீக்கியர் புத்தம் என்று

    ஆனால் நீயோ உன்னுடைய திருநூல்களை படிப்பது அரிது
    அரிதாக படித்தாலும் உன் சிறுமூளைக்கு எதுவும் எட்டாது
    ஒருசில வார்த்தைகள் புரிந்தவர்கள் உள்ளனர் அவர்களும் யாரையும் சரியாக மேய்ப்பதில்லை இந்த வர்த்தக உலகில்

    நீயோ சுவாசிப்பது உன்னை படைத்தவருடைய மூச்சு காற்றை
    வாழ்வது அவர்படைத்த பூவுலகில்
    அருந்துவது அவர் வார்த்தையால் உண்டான நீரை
    சகலமும் அவராலேயன்றி எதுவும் இல்லை

    ஆனால் நீயோ யாரையும் எற்றுக்கொள்வதும் இல்லை
    எல்லாம் உன் அறிவியல் கோளாறே

    ஏய் மனித நீ உண்டாக்கிய எந்த மதமும் உன்னை உன் ஆத்துமாவை காப்பாற்றப்போவதில்லை

    சகல படைப்புகளிலும் நானே மேன்மையானவன் என பெருமை
    இந்த பெருமை உனக்கு கொடுக்கப்பட்டதை நீயோ கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை எனக்கு மட்டுமேன் ஆறு அறிவு

    சர்வமும் உன் அறிவியலால் வென்றுவிடலாம் என கற்ப்பனை வேறு

    ஏய் மனித உனக்கென்று ஒரு ஆத்துமா உண்டுல்ல அதை நீ என்ன செய்யப்போகிறாய்

    எரிக்க போகிறாயா அல்லது உன் எஜமானரிடம் கொடுக்கப்போகிறாயா

    நீயே முடிவு செய்துகொள்

    ReplyDelete

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்