Tuesday, January 7, 2014

3 அடி அளவுள்ள ஆந்தை போன்ற பறவை !

3 அடி அளவுள்ள ஆந்தை போன்ற பறவை !

பஹாமாஸ் தீவுகளை சேர்ந்து அன்றோஸ் என்னும் சிறிய தீவில் தான் இந்த மாதிரி பறவையை கண்டதாக சுற்றுல்லா பயணிகள் கூறியுள்ளனர் . 

ஆந்தை மாதிரி தோற்றத்தில் மிகவும் பெரியதாக , சுமார் மூன்று அடி வரை இருந்ததாகவும் நிறைய பேர் கூறியுள்ளனர் . பறவை ஆர்வலர்கள் பலர் இதற்கு ஒரு கருத்தை வெளியிட்டுள்ளனர் . அதாவது 16 ஆம் நூற்றாண்டு வரை அன்றோஸ் தீவில் சிக்சார்நி என்னும் பறவை இருந்துள்ளதாகவும் , அதன் பின் அங்கு மனிதர்கள் குடி பெயர ஆரம்பித்த உடன் மரங்களை வெட்ட தொடங்கியதால் இவை முற்றிலும் அழிந்து போனது என்று நம்பப்பட்டது !

இந்த வகை பறவைகளால் பறக்க இயலாது . இவை நிலத்தை சார்ந்தே வாழும் . எனவே அந்த தீவை விட்டு செல்ல முடியாமல் போனது. முற்றிலும் அழிந்து போனது என்று நம்ப பட்டாலும் இது நாள் வரை மக்கள் இதை போன்ற பறவையை பார்த்ததாக கூறுவது , இந்த வகை பறவைகள் எப்படியோ இன்னும் இருக்கின்றன என்றே தோன்றுகிறது !


No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்