Tuesday, December 24, 2013

ஒரு ஏழைத்தொழிலாளி , ஒரு நீதிபதி மற்றும் ஒரு புத்திசாலி பெண்மணி ! - புதிர் கதை

ஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். 

ஒருநாள் அவனது நண்பன் ஒருவன் அங்கு வந்தான். வந்தவன் வருமையில் வாடும் அவனது நிலையைக் கண்டு, " நண்பனே....ஏன் இப்படி இங்கேயே இருந்து வருமையில் வாடுகிறாய்?.உன்னைப் போன்ற உண்மையாக உழைக்கும் தொழிலாளிக்கு பக்கத்து நாட்டில் நல்ல மரியாதையும், வருமானமும் கிடைக்கிறது.ஒரே வருடத்தில் கைநிறையப் பணம் சம்பாதித்துக்கொண்டு திரும்பிவிடலாம். " என்றான்.

அதைக் கேட்ட அவனும், தனது மனைவி மக்களை உறவினரிடம் ஒப்படைத்துப் பார்த்துக்கொள்ளும்படி கூறினான். பிறகு பக்கத்து நாட்டுக்குப் புறப்பட்டுப் போனான்.

அங்கே அவனுக்கு நகரின் தெருக்களைத் தூய்மை செய்யும் பணி உடனே கிடைத்தது.மாதத்துக்கு இரண்டு பொற்காசுகள் சம்பளமும், இருக்க இடம் மற்றும் உணவும் அவர்களே வசதி செய்து கொடுத்தார்கள்.அவ்ஙே வசித்தவர்களும் அவ்வப்போது அவனுக்கு அன்பளிப்புகள் கொடுத்தார்கள்.. அதனால் சிலா மாதங்களுக்குள், அவன் பத்து பொற்காசுகள் சேர்த்துவிட்டான். நூறு பொற்காசுகள் சேர்ந்ததும் தன் நாட்டுக்குப் போகலாம் என்று தீர்மானித்திருந்தான். ஆனால் பத்து பொற்காசுகளை கையில் வைத்திருப்பது அவனுக்குப் பாதுகாப்பாகத் தெரியவில்லை. அதனால் நம்பிக்கையான யாரிடமாவது பொற்காசுகளைக் கொடுத்து வைக்கலாம் என்று முடிவு செய்தான்.


அந்த ஊரில் ஒரு நீதிபதி இருந்தார். அவரிடம் கொடுத்துவைத்தால் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து . அவரிடம் சென்று பத்து பொற்காசுகளைக் கொடுத்து, மேலும் சேமிக்கும் பணத்தையும் அவ்வப்போது தருவதாகவும், தான் நாட்டுக்குப் போகும்போது மொத்தமாகக் கொடுத்துவிடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டான். நீதிபதியும் சரி என்று வாங்கிக்கொண்டார்.


மேலும் சில மாதங்கள் கழிந்தன. கடுமையான உழைப்பின் பயனாக விரைவிலேயே நிறைய பொற்காசுகள் சேமித்தான். மனதில் கணக்குப் போட்டுப் பார்த்து நூறு பொற்காசுகள் சேர்ந்திருக்கும் என்று தெரிந்ததும், தனது நாட்டுக்குச் செல்ல முடிவு செய்தான். நீதிபதியிடம் சென்றான். தான் சேமித்து வைத்த பொற்காசுகளைக் கொடுத்தால் தான் நாடு செல்வதாகக் கூறினான்.


நீதிபதியின் மனதில் சாத்தான் புகுந்துகொண்டான்,அவனை ஏமாற்றிவிடலாம் என்று நினைத்து, அவனை ஏற இறங்கப் பார்த்து , " எந்தப் பணத்தை நீ என்னிடம் கேட்கிறாய்"? என்றார். அதற்கு அவன் " ஐயா....நான் தங்களிடம் சிறுகச் சிறுகக் கொடுத்துவைத்திருந்த பணம்தான் " என்றான். அவரோ கோபம் கொண்டு, " ஏய்.....நீ என்னிடம் எந்தப் பணமும் கொடுக்கவில்லை. உனக்கென்ன புத்தி பேதலித்துவிட்டதா????....நீயாக ஓடிவிடு, இல்லையென்றால் வேலைக்காரர்களை அழைத்து உன்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவேன்" என்றார்.

இதைக் கேட்டதும் அவனுக்கு உலகமே இருண்டது. வேலியே பயிரை மேய்ந்தால் தான் யாரிடம் சென்று முறையிடுவது என்று புலம்பியபடி சோகமாக வேலைக்குத் திரும்,பினான்.வழக்கமாக அவன் சுத்தம் செய்யும் தெருவில் இருந்த ஒரு பெண்மணி அவன் சோகமாக இருப்பதைக் கண்டு, என்ன விபரம் என்று விசாரித்து, நீதிபதி அவனை ஏமாற்றிய விஷயத்தைத் தெரிந்துகொண்டாள். அவன்மீது இறக்கம் கொண்ட அவள் " ஐயா அழவேண்டாம்.....கவலைப்படாமல் இருங்கள். இன்று மாலை நான் நீதிபதியின் வீட்டுக்குள் செல்வேன். நீங்கள் சிறிது நேரம் கழித்து அங்கே வந்து, நீதிபதியிடம் நான் உங்களிடம் கொடுத்து வைத்திருந்த நூற்றைம்பது பொற்காசுகளைக் கொடுங்கள் நான் ஊருக்குப் போகவேண்டும் என்று கூறுங்கள்.. அவர் கண்டிப்பாகத் தருவார்.நூறு பொற்காசுகளுக்குப் பதிலாக நூற்றைம்பது பொற்காசுகளுடன் நீங்கள் உங்கள் ஊருக்கு மகிழ்வுடன் செல்லலாம்" என்றாள்.

மாலை நேரம் வந்தது.அந்தப் பெண்மணி நீதிபதியின் வீட்டுக்குள் நுழைதாள். அவளைக் கண்ட நீதிபதி, " அம்மணி நீங்கள் யார்?. என்னால் உங்களுக்கு எதுவும் ஆகவேண்டுமா? என்று கேட்டார். அதற்கு அவளும் தலையசைத்து, ஆமாம் என்று கூறி, தனது கணவன் வெளியூர் சென்றிருப்பதாகப் பேச ஆரம்பித்தவள் மேலும் சில விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தாள்.

அப்போது ஏழைத் தொளிலாளி உள்ளே வந்தான். வந்தவன் நீதிபதியைப் பார்த்து, " ஐயா, நான் கொடுத்த நூற்றைம்பது பொற்காசுகளைக் கொடுங்கள் நான் ஊருக்குச் செல்லவேண்டும்" என்றான்.அவன் நூற்றைம்பது பொற்காசுகள் என்று சொன்னதும் முதலில் கடும் கோபம் அடைந்தாலும், சாமர்த்தியமாக அதைப் புண்ணகையால் மறைத்துக்கொண்டு, " அடடே....நீ காலையிலேயே சொன்னாய் அல்லவா?....இதோ உள்ளது உனது பணம்" என்று அவன் கேட்டபடியே நூற்றைம்பது பொற்காசுகளைக் கொடுத்து அனுப்பினார்.

அப்போது ஒருவன் உள்ளே வந்தான்...."அம்மா.... வெளியூர் சென்றிருந்த உங்கள் கணவர் வந்துவிட்டார். உங்களைக் கூப்பிட்டு வரச்சொன்னார்" என்றான்....அவளும் நீதிபதியைப் பார்த்து, " ஐய்யா எனது கணவர் வந்துவிட்டார்....உங்களை அடுத்து அவசியம் ஏற்படும்போது வந்து பார்க்கிறேன்" என்று கூறியபடி சென்றுவிட்டாள்.

நீதிபதி தலையில் துண்டைப் போட்டபடி மிகவும் வருத்தத்துடன் அமர்ந்துவிட்டார்.

நண்பர்களே.....அந்தப் பெண்மணி நீதிபதியிடம் அப்படி என்னதான் கூறினாள்?. ஏழைத்தொளிலாளி தான் கொடுத்து வைத்திருந்ததைவிட அதிகமாகவே கேட்டும் ஏன் அவனுக்கு உடனே கொடுத்து அனுப்பினார்.

புதிர் விடை :

அந்த பெண்மணி நீதிபதியிடம் சென்று, அய்யா, என் கணவர் வெளியூர் சென்றிருக்கிறார், அவர் என்னிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்க சொன்ன 1000 பொற்காசுகளை உங்களிடம் கொடுத்து பத்திரப்படுத்தி வைக்க நினைக்கிறேன், அவர் வந்ததும் நீங்கள் திருப்பிக் கொடுங்கள் என்று சொல்லியிருப்பார்.

அதே நேரத்தில் நம்மவர் வந்து 150 பொற்காசுகள் கேட்க, அதை கொடுக்கவில்லை என்றால் இந்த பெண்மணி தன்னை நம்ப மாட்டார் என்று நினைத்து அவர் கேட்ட 150ஐ கொடுத்து விட்டார்.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்