கருப்பசாமியும், கண்ணம்மாளும் கணவன் மனைவி. இரவு 9 மணிக்கு ஹாலில் அமர்ந்திருந்தார்கள். கருப்பசாமி தொலைக்காட்சியில் மெட்டி ஒலி தொடர் பார்த்துக் கொண்டிருந்தான்.கண்ணம்மாள் ஏதோ முக்கியமாகப் படித்துக்கொண்டிருந்தாள்.
திடீரென்று மின்சாரம் நின்றுபோகவே வீட்டில் இருள் சூழ்ந்தது.
கருப்பசாமி தொலைக்காட்சித் தொடர் பார்க்க இயலாமல் போனதால் வீட்டின் உள்ளே சென்று மெழுகுவர்த்தியோ அல்லது வேறு விளக்கோ கிடைக்குமா என்று பார்த்தான்.
எதுவுமே கிடைக்கவில்லை. சரி படுத்துத் தூங்கவாவது செய்யலாம் என்று கண்ணமாளை அழைத்தான்.படிப்பதை நிறுத்திய அவள், தான் வரவில்லை என்றும் படிக்கவேண்டியது இன்னும் பாக்கி இருக்கிறது என்றும், முழுதும் படித்தபிறகு வந்து படுத்துக்கொள்வதாகவும் கூறினாள்.
சரி என்று கருப்பசாமி போய்ப் படுத்துக்கொண்டான்.
கண்ணம்மா புத்தகம் முழுவதும் வாசித்தபிறகுதான் போய்ப் படுத்தாள்.
நண்பர்களே மின்சாரம் இல்லாமல் இருள் சூழ்ந்திருந்த அறையில் இது அவளுக்கு எப்படி சாத்தியம் ஆனது?
புதிர் விடை :
அவர் கண் பார்வையற்றவராக இருந்திருக்க வேண்டும் , பிரெய்லி முறையில் படித்துக் கொண்டிருந்திருக்கலாம்.
No comments:
Post a Comment