Tuesday, December 24, 2013

காற்று நுழைய முடியாத கண்ணாடி அறை - புதிர்

உங்களை ஒரு சதுரமான அறைக்குள் அனுப்பிவிட்டு கதவைப் பூட்டிவிடுகின்றார்கள்.. அந்த அறைக்கு சன்னல்கள் எதுவுமே இல்லை...........மூச்சு விடவே கொஞ்சம் சிரமப்பட்டுக்கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அந்த அறையைக் கொஞ்சம் பார்ப்போமா? 

அந்த அறையின் மேல் கூறை அதாவது சீலிங் முழுவதும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. நான்கு பக்கச் சுவர்கள் முழுவதுமே அதே போலவே கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. பற்றாக் குறைக்கு தளமும் கண்ணாடிதான். அந்த அறைக்குள் வேறு எதுவுமே இல்லை.


நீங்கள் கிழக்கு பக்கமாக நின்றுகொண்டு எதிரில் உள்ள சுவறைப் பார்க்கின்றீர்கள்.
இப்போது உங்கள் கண்களுக்கு உங்கள் பிம்பங்கள் எத்தனை பிரதிபலிக்கும்????

கண்ணாடி என்று சொல்லிவிட்டேன். அது எப்படிப்பட்ட கண்ணாடி என்று அடுத்தாற்போல் நீங்கள் கேள்வியை எழுப்புவீர்கள் என்று தெரியும். அதனால் விளக்கமாக நானே கூறிவிடுகின்றேன்.

பின்னால் பாதரசம் பூசப்பட்ட பிரதிபலிக்கும் [ முகம் பார்க்கும் கண்ணாடிபோல] கண்ணாடிதான்.

நன்பர்களே.............இப்போது எனது கேள்விக்கு பதிலைக் கூறுங்களேன்!!!!!

புதிர் விடை :


"அறையில் ஒரு கதவைத் தவிர எதுவுமே இல்லை.அந்தக் கதவும் பூட்டப்பட்டுவிடுகின்றது.மூச்சுவிடக் கூட சிரமம்"

அறையின் உள்ளே நான்கு புறங்களிலும் சுவர். அதுவும் கண்ணாடிச் சுவர்....மேலேயும், கீழேயும் அதுபோலவே கண்ணாடிச் சுவர். உள்ளே நுழைந்ததும் கதவு பூட்டட்டப்படுகின்றது. வேறு சண்ணலும் கிடையாது. 

ஆக அந்த அறைக்குள் வெளிச்சம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.அதனால்தான் மூச்சு விடுவதற்குக் கூட சிரமம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

இப்போது புதிருக்கான விடையைப் பார்ப்போம்.
எந்த ஒரு பிம்பமுமே...ஒளி இல்லாவிட்டால் பிரதிபலிக்காது.
அதனால் நீங்கள் அந்த அறையின் உள்ளே சென்று கதவு பூட்டப்பட்டதும், உங்களால் எந்த பிம்பத்தையுமே பார்க்க இயலாது.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்