ஒரு பெரிய காடு. அந்தக் காட்டிலே எண்ணற்ற மிருகங்கள் இருந்தன.
ஒருநாள் ஒரு வரிக்குதிரை, ஒரு யானை, ஒரு கரடி, ஒரு முயல், இரண்டு எலிகள், ஒரு பாம்பு, இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தன. அனைத்து மிருகங்களும் ஒன்றுடன் ஒன்று நெருக்கியடித்துக்கொண்டு நின்றிருக்க,ஒரே குரங்கு மட்டும் யானையின்மேல் அமர்ந்து ஒரு சாதாரன குடையை விரித்து அனைவருக்கும் சேர்த்துப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.
நன்றாகக் கவனித்துக்கொண்டீர்களா? காட்டு மிருகங்களும் ஒரு குடையும் !
இப்போது யார் யார் மட்டும் நனையாமல் இருப்பார்கள்?
சொல்லுங்களேன்.
புதிர் விடை :-
அனைவருமே நனைய மாட்டார்கள். ஏன் எனில் மழை வந்ததாக கதையில் கூற வில்லை. ஹி ஹி !
No comments:
Post a Comment