Sunday, January 5, 2014

அழிந்து போன உயிரினம் மீண்டும் உயிர் பெற்றது எப்படி - புதிர் கதை

ஏராளமான விலங்கினங்கள் பூமியில் ஆனந்தமாக

வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒருநாள் அந்த விலங்கினங்களுக்குள், ஒரு விலங்கினத்துக்கு மட்டும் புதுமையான ஒருவகை நோய் பிடித்தது.

மிகச் சிறிய காலத்துக்குள், பூமியில் , அந்த வகை விலங்கினம் அனைத்தும் முற்றிலுமாக இறந்துபோயின.

அந்த வகை விலங்கினம் ஒன்றுகூட மீதம் இல்லாமல் அழிந்துபோனது. ஒரு வருடம் கடந்தது.

மறுபடியும் அந்த விலங்கினம் பூமியில் ஜனித்தது.கொஞ்சம் கொஞ்சமாக பெருகி மீண்டும் அதன் தொகை அதிகரித்தது.

இப்போது நண்பர்களே கூறுங்கள் ---இது சாத்தியமா?

சாத்தியம் என்றால் அந்த விலங்கு எது?


புதிர் விடை :-

போணி எனப்படும் கோவேறு களுதை இனம்தான் அந்த விலங்கு . குதிரையும் கழுதையும் சேர்வதினால் உண்டாகும் ஒட்டு விலங்கினம்தான் கோவேறு கழுதை.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்