Tuesday, December 17, 2013

கொட்டாங்கச்சியில் தண்ணீரும், பக்கத்திலேயே ஒரு ஊசியும் - புதிர் கதை

திருவள்ளுவருக்கும் வாசுகி அம்மையாருக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடைபெற்றது ! 

திருமணமான அன்று முதன்முதலாக வாசுகி அம்மையார் தன் கணவனுக்கு உணவு பறிமாற வந்தார். அப்போது திருவள்ளுவர் அவளைப் பார்த்து, " இனி நீ எனக்கு உணவு பறிமாறும்போதெல்லாம், ஒரு கொட்டாங்கச்சியில் தண்ணீரும், அதன் பக்கத்திலேயே ஒரு ஊசியும் வைத்துவிடு" என்றார்.

தன் கணவர் எதற்காக இப்படிச் சொல்கிறார் என்று வாசுகி அம்மையாருக்குப் புரியவில்லை. இருந்தாலும் கணவரின் சொல்லை மீறக்கூடாதே என்ற எண்ணத்தில், நாள்தோரும் வள்ளுவர் கூறியபடியே செய்துவந்தாள்.

பல ஆண்டுகள் கழிந்தன. திருவள்ளுவர் ஒரு முறைகூட அந்த கொட்டாங்கச்சி நீரையும், ஊசியையும் உபயோகப்படுத்தவில்லை.வாசுகி அம்மையாரும் முதுமையடைந்து, நோயில் வீழ்ந்து உயிர் பிரியும் தருணத்தில், " அன்பரே, என் மனதில் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் இதுவரை விடை கிடைக்கவில்லை.சாப்பிடும்போது, கொட்டாங்கச்சியில் தண்ணீரும், பக்கத்திலேயே ஒரு ஊசியும் வைக்கும்படி கூறியிருந்தீர்கள்.

நானும் ஏன் என்று கேட்காமல் அதை செய்துவந்தேன். நீங்கள் ஒருமுறைகூட அதை உபயோகிக்கவில்லை. ஏன் அவற்றை வைக்கச் சொன்னீர்கள்" என்று கேட்டார்கள்.

வள்ளுவர் அதற்கு என்ன பதில் கூறியுருப்பார்?

புதிர் விடை :
உணவருந்தும் போது கீழே சிந்துகின்ற உணவை(சோற்றை)
ஊசியால் குத்தி கொட்டாங்கச்சியில் உள்ள தண்ணீரில்
கழுவி மீண்டும் உட்கொள்வதற்காக தான் என்று கூறியிருப்பார்.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்