Tuesday, December 17, 2013

நான்கு பேர் , இரண்டு குடை , வெளியில் மழை :D - புதிர் கதை

சின்ன குடும்பம் அது. அப்பா...அம்மா...பத்து வயது மகன்.......எட்டு வயது .மகள் .....என்று நான்கு பேர் கொண்ட குடும்பம்.

ஒருநாள் வெளியே கடும் மழை பெய்து கொண்டிருந்தது. நால்வரும் அவசியமான காரியமாக வெளியே போகவேண்டிய அவசியம் .
அதனால் வீட்டில் இருந்த இரண்டே குடைகளை எடுத்துக்கொண்டு நால்வரும் வெளியே புறப்பட்டார்கள்.


ஒரு குடைக்கு இரண்டு பேராகப் போகவேண்டும்.
நான்கு பேருமே நான்தான் குடையைப் பிடிப்பேன்...மற்றவர் உடன் வரவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்கள்.!!!!!

சரி.......... இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி.
இவர்களில் யார் யார் குடையைப் பிடிக்கவேண்டும்...?....ஏன்??

புதிர் விடை :
சுருக்கமான விடை......உயரமானவர்கள் குடை பிடிக்க அவர்களைவிட குள்ளமானவர்கள் உடன் வரவேண்டும் .

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்