Saturday, January 4, 2014

ராமு சோமுவின் கார் பந்தயம் - புதிர் கதை

ராமுவும் சோமுவும் புதிதாகக் கார் வாங்கத் தீர்மானித்தார்கள். ஒரே மாதிரியான கார் வாங்குவது என்று முடிவு செய்து கொண்டார்கள். 

மாருதி கார் விற்பனையகம் சென்று ஒரே மாதிரியான வண்ணத்தில், ஒரே சக்தி அளவில், ஒரே விலையில், அடுத்து அடுத்து வரும் கார் என்ஜின் வரிசை எண்ணாக இருக்கும்படி [motor engine serial number] பார்த்துப் பதிவு செய்தார்கள்.


ராமுவும் சோமுவும் ஒரே இடத்தில் அடுத்து அடுத்த வீட்டில் வசித்துவந்தார்கள். ஒரே நாளில் ஒரே சமயத்தில் அவர்கள் வீட்டுக்கு முன்பாக கார்களைக் கொண்டுவந்து விற்பனையாளர் நிறுத்தினார்.

ராமுவும் சோமுவும் கார் ஓட்டுவதில் ஒரே மாதிரியான திறமை கொண்டவர்கள். எப்போதும் 50 கிலோ மீட்டர் வேகத்தில்தான் இருவருமே ஓட்டுவார்கள். வீட்டின் முன்னால் வந்து சேர்ந்த கார்களில் ராமு ஒரு காரிலும், சோமு ஒரு காரிலும் ஏறினனர்கள்.

ராமு மேற்குத் திசையில் காரை ஓட்ட ஆரம்பித்தான். சோமு கிழக்குத் திசையில் காரைச் செலுத்த ஆரம்பித்தான். இருவருமே ஒரே மாதிரியான வேகத்தில் ஓட்டுபவர்கள் என்று கூறியுள்ளேன்.

காரும் ஒரே மாதிரியான கார். கார்கள் நிற்காமல் போய்க்கொண்டே உள்ளது.எரிபொருள் தீரத்தீர நிரப்பிக்கொண்டு இருவருமே தங்கள் திசையை விட்டு விலகாமல் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி ! யாருடைய காரின் டயர்கள் முதலில் தேய்ந்து போய் மாற்ற வேண்டிவரும்?

புதிர் விடை :-

பூமி அப்பிரதட்சிணமாக அல்லவோ சுற்றுகிறது, தன்னைத்தானே? அப்படியானால் அதற்கு எதிர்திசையில் பயணம் செய்பவரின் கார்தானே சீக்கிரம் பழுதடையவேண்டும்? அதாவது மேற்கு திசை நோக்கி செல்லும் கார்?
கிழக்கு திசையிலிருந்து  மேற்கு திசையை நோக்கி போகும் சோமுவின் டயர்கள்தான் முதலில் மாற்றவேண்டி வரும்....( பூமியின் சுற்றும் திசையை வைத்து பார்க்கும்போது )

1 comment:

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்