Saturday, January 4, 2014

நகைச்சுவை நாயகன் வீர்சிங் மற்றும் நிருபர் - புதிர் கதை [கடி]

ஒரு மாத இதழின் நிருபர், பொது மக்களிடையே எந்த எந்த கம்பெனியின் பொருட்கள் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன என்பதை ஆராய்ந்து அதைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிடுவதற்காக பலரைப் பேட்டி கண்டார்.

ஒருநாள் தற்செயலாக நமது நகைச்சுவை நாயகன் வீர்சிங்கையும் அவர் சந்தித்தார். வீர்சிங்கிடமும் தனது கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.

நிருபர்- நீங்கள் எந்த பற்பசையை உபயோகிக்கின்றீர்கள்?
வீர்சிங்- பாபா
நிருபர்- நீங்கள் எந்த ஷேவிங் கிரீமை உபயோகிக்கின்றீர்கள்?
வீர்சிங்- பாபா
நிருபர்- எந்த ஷாம்புவை உபயோகிக்கின்றீர்கள்?
வீர்சிங்- பாபா
நிருபர்- எந்த சோப்பை உபயோகிக்கின்றீர்கள்?
வீர்சிங்- பாபா


இதுவரை இப்படிப்பட்ட கம்பெனியைப் பற்றிக் கேள்விப்பட்டிராத நிருபர், “ சரி இப்போது எனது அடுத்த கேள்வி. நீங்கள் எந்த அண்டர்வேரை உபயோக்கின்றீர்கள்.
வீர்சிங்- பாபா
வீர்சிங்கின் பதிலால் கடுப்படைந்த நிருபர், “ சரி கடைசியாக ஒரு கேள்வி.நீங்கள் எந்த செருப்பை உபயோகப் படுத்துகின்றீர்கள்?”
வீர்சிங்- பாபா

நிருபர்- நான் பாபா என்ற கம்பெனியின் பொருட்களைப் பற்றிக் கேள்விப் பட்டதில்லையே?இந்தியாவில் பாபா என்ற கம்பெனி இல்லையே?இது எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது?

இதற்கு வீர்சிங் கூறிய பதிலைக் கேட்டு நிருபருக்குப் பேச நா எழும்பவில்லை. தலையில் அடித்துக்கொண்டு உடனே வெளியேறினார்.

நண்பர்களே அவரது கேள்விக்கு வீர்சிங்கின் பதில் என்னவாக இருந்திருக்கும்?

புதிர் விடை :-

பாபா என்பது வீர்சிங்கின் நண்பர்தான்.வீர்சிங் நண்பரது பொருட்களைத்தான் உபயோகப் படுத்திக்கொண்டிருந்தான்.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்