காளிதாஸன் வாழ்க்கையே வெறுத்துப் போய் அமர்ந்திருந்தான் ♣
தன்னையே வெறுத்துக்கொண்டான்.இனிமேலும் உயிர் வாழ்வதில் எந்த அர்த்தமும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை, தான் எந்தக் காரியத்தைச் செய்தாலும் வெற்றியில் முடிவதில்லை என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை அவனுள் கிளர்ந்தெழுந்து அவனை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது.
தற்கொலையாவது சரியாகச் செய்துகொள்வேனா என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது.மேசை டிராயரை இழுத்தான், உள்ளே இருந்த துப்பாக்கி பளபளவென்று மின்னியது அவனைப் பார்த்து எள்ளி நகையாடுவது போன்றிருந்தது. துப்பாக்கியைக் கையில் எடுத்தான். உற்றுப் பார்த்தான். சரி---இனிமேல் செய்து பார்த்துவிடவேண்டியதுதான் என்று முடிவு செய்தான்.
எழுந்தான். துப்பாக்கியில் குண்டு நிறப்பியுள்ளதா என்று சரிபார்த்துக்கொண்டான். குளியல் அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றான்.
தனது நெற்றிக்குச் சரியாகக் குறி வைத்தான். குறி சரியாக உள்ளது என்ற திருப்தியுடன் துப்பாக்கியின் விசையை இழுத்தான். டுமீல் என்ற சப்தம் அந்தப் பகுதியையே அதிர வைத்தது.
அக்கம் பக்கம் இருந்தவர்கள் அனைவரும் காளிதாஸனின் வீட்டுக்குள் கேட்ட சப்தத்தைக் கேட்டு, என்னவோ ஏதோ--- என்று பதறியடித்து ஓடிவந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
அங்கே-------------------காளிதாஸன் அமைதியாக ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான்.
கேட்டவர்களுக்கெல்லாம் துப்பாக்கி தவறுதலாக வெடித்துவிட்டது. ஒன்றும் ஆபத்தில்லை என்று பதில் கூறி அனுப்பிவைத்தான்.
நண்பர்களே---------நெற்றிக்குச் சரியாகக் குறி வைத்து துப்பாக்கியின் விசையை இழுத்து, அது வெடித்தும் ஏன் காளிதாஸனுக்கு ஒன்றுமே சம்பவிக்கவில்லை??
புதிர் விடை :-
குளியலறை கண்ணாடியில் நெற்றியைப் பார்த்து சுட்டிருப்பான் !
No comments:
Post a Comment